மேலும் அறிய

T.M.Krishna Supports Zakir | அது ஒரு வன்முறை.. வழக்குப்பதிவு செய்யணும்.. ஜாகிர் உசேனுக்கு டி.எம்.கிருஷ்ணா ஆதரவு!

ஜாகிர் உசேன் உட்பட யாரையுமே இப்படி கோயிலில் இருந்து வெளியேற்றுவது அடிப்படை இங்கிதம் இல்லாத, மனிதத்தன்மை அற்ற செயல். பெருமாளைச் சேவிக்க வந்தவரை வெளியேற்றிய சம்பவம் ஒரு வன்முறை.

பிரபல பரதநாட்டியக் கலைஞரும், கலைமாமணி விருது வென்றவருமான ஜாகிர் உசேனுக்கு, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ஒரு வன்முறை என்று பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

பிறப்பால் இஸ்லாமியரான ஜாகிர் உசேன், பரதநாட்டியம் மீதான ஈர்ப்பு காரணமாக, குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி வீட்டைவிட்டு வெளியேறியவர். குருகுல முறையில் தங்கி, பரதம் பயின்று வைணவத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல்வேறு இடங்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். ஜாகிரின் பரதநாட்டியப் பங்களிப்பைப் பாராட்டி அவருக்குத் தமிழ்நாடு அரசின் கலைமாணி விருது வழங்கப்பட்டுள்ளது. அதையும் திருச்சேறை சாரநாதப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தவர் ஜாகிர்.

தமிழகம், திருப்பதியில் உள்ள பல்வேறு வைணவ திவ்யத் தலங்களுக்குத் தனிப்பட்ட வகையிலும் நண்பர்களின் உதவியுடனும் பல்வேறு பொருட்களை வழங்கியுள்ளார். 

இதற்கிடையே திருச்சி சென்ற ஜாகிர் உசேனுக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலுக்குள் நுழைய நேற்று (டிச.10) மதியம் அனுமதி மறுக்கப்பட்டது. ரங்கராஜன் என்னும் நபர், தன்னை மதத்தின் பெயரால் மோசமாகத் திட்டியதாகவும் கோயில் வாசல் வரை நெட்டித் தள்ளியதாகவும் ஜாகிர் வேதனை தெரிவித்திருந்தார். இதற்கு முன்பு பலமுறை கோயிலுக்குச் சென்றுள்ளதாகவும் கோயில் நிர்வாகத்தின் சார்பிலேயே நடன நிகழ்ச்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 


T.M.Krishna Supports Zakir | அது ஒரு வன்முறை.. வழக்குப்பதிவு செய்யணும்.. ஜாகிர் உசேனுக்கு டி.எம்.கிருஷ்ணா ஆதரவு!

இதுபற்றிப் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு கூறும்போது, ''முஸ்லிம் மதத்தவராக இருப்பதால் அவர் கடவுளை வணங்கக்கூடாது என்று எதுவும் கிடையாது. யாருக்கெல்லாம் நம்பிக்கை உள்ளதோ, அவர்கள் அனைவரும் வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம்'' என்று தெரிவித்த நிலையில், ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒரு வன்முறை என்று பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

முஸ்லிமாக இருப்பதால் பெருமாளை வணங்கக்கூடாதா?- ஜாகிர் உசேனுக்கு கவிதா ராமு ஐஏஎஸ் ஆதரவு

இதுகுறித்து அவர் 'ஏபிபி' செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''ஜாகிர் உசேன் உட்பட யாரையுமே இப்படி கோயிலில் இருந்து வெளியேற்றுவது அடிப்படை இங்கிதம் இல்லாத, மனிதத்தன்மை அற்ற செயல். பெருமாளைச் சேவிக்க வந்தவரை வெளியேற்றிய சம்பவம் ஒரு வன்முறை. இதற்கு யாரும் எந்த விளக்கமும் கொடுக்க முடியாது. இத்தகைய சம்பவங்களை நாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. 

சம்பந்தப்பட்ட நபர் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். கோயிலுக்குள் வரும் பக்தர்களை இவ்வாறு நடத்த யாருக்கும் அனுமதி கிடையாது. இஸ்லாமியரை அனுமதிக்க மறுத்த அதே ஸ்ரீரங்கம் கோயிலில்தான் துலுக்க நாச்சியாருக்கு சன்னிதியே உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை விதிகளை நான் ஏற்கத் தயாராக இல்லை. 

இந்து மதம் அனைவருக்கும் சொந்தம் என்று கூறுகிறோமே? இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்புப் பலகையே தமிழ்நாட்டில் எங்குமே இருக்கக்கூடாது. மாற்று மதத்தவரை இந்து கோயில்களுக்குள் அனுமதித்தால் என்ன பிரச்சினை வந்துவிடப் போகிறது? வெளிநாட்டவர்களை மட்டும் அனுமதிக்கிறோமே? தேவாலயங்களுக்குள் எல்லோரும் செல்ல முடிகிறதே? ஏன் வெளிநாடுகளில் மசூதிக்குள்ளும் மாற்று மதத்தவர்கள் செல்கிறார்கள்.

இந்து மதத்தில் உள்ள அனைவருக்கும் உண்மையான பக்தி உள்ளதா? என்னைப் பொறுத்தவரை 3 வழிபாட்டுத் தலங்களிலுமே அனைத்து மதத்தவரும் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்'' என்று டி.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
திருத்தணி ஆடிக் கிருத்திகை விழா: பக்தர்களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் – நேர விவரம் இதோ!
திருத்தணி ஆடிக் கிருத்திகை விழா: பக்தர்களுக்காக சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம் – நேர விவரம் இதோ!

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
Agriculture Budget: இதெல்லாம் ஒரு வேளாண் பட்ஜெட்டா? .. விஜயை விளாசிய மு.க.ஸ்டாலின், வானதி!
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
மனுசன்யா! ஒன்னுக்கே முக்குது; 14 அரசு போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற இளைஞர்! கடைசியில் என்ன செஞ்சார்?
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
பயிர்க்கடன் அறிவிப்பு இல்லை, குறைக்கப்பட்ட நிதி: வேளாண் பட்ஜெட்டில் புதுசா ஒண்ணுமே இல்லை- அன்புமணி
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
Sedan Cars: இனி நாமதான்! இந்திய சந்தையை அதிரவைக்கும் 3 செடான் கார்கள்; மாடல், விலை விவரம்
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
பொன்முடியை கைது செய்து நேரில் ஆஜர் படுத்துங்க.! நீதிபதி அதிரடி உத்தரவு- என்ன காரணம்.?
Embed widget