மேலும் அறிய

வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!

வேறு வழியில்லாமல் கட்சியை அன்புமணியிடம் கொடுத்தேன் என ராமதாஸ் சொன்னதாக சீமான் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

வேறு வழியில்லாமல் கட்சியை அன்புமணியிடம் கொடுத்தேன் என ராமதாஸ் சொன்னதாக சீமான் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் ராமதாஸ் - அன்புமணி கருத்து மோதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சீமான் “இதில் கருத்து சொல்ல வேண்டியது ஒன்றும் இல்லை. நான் ஐயாவின் பக்கத்தில் இருந்து பார்த்தவன். ஒரு பாதையை நோக்கி செல்லும்போது இதுபோன்ற கருத்து மோதல் வரத்தான் செய்யும். அது சரியாகிவிடும். என் நெற்றியில் ஜாதி பெயர் ஏதாவது எழுதி இருக்கிறதா என கேட்டவர்தான் ராமதாஸ். அவர் வரும்போது தெளிவாகத்தான் வந்தார். கால சூழ்நிலை அவர் அதுபோன்று தள்ளப்பட்டுவிட்டார். 

’கட்சியை பல பேரிடம் கொடுத்துப்பார்த்தேன். ஒன்னும் சரிபட்டு வரல. பின்னர்தான் வேறு வழியில்லாமல் அன்புமணியிடம் கொடுத்தேன்’ என ராமதாஸ் என்னிடம் சொல்லியுள்ளார்.  அதை நாம் ஒன்றும் சொல்ல முடியாது. வேறு ஒருவரிடம் கட்சியை கொடுக்க முடியாத சூழல் தமிழ்நாட்டில் இல்லாமல் இல்லை. ஆனால் அவருக்கு நம்பகமான ஒரு ஆளாக பார்த்திருக்கலாம். இன்று திராவிட கழகத்தில் இருப்பவர்கள் அன்று ஐயாவுடன் இருந்திருக்கிறார்கள். இதனால் அவருக்கு நம்பகமான ஆட்கள் தேவைப்படுகிறார்கள் இல்லையா?

நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை ஒரு தலைவர் உருவாகட்டும். பின்னர் மற்றதை பேசிக்கொள்ளலாம். இங்கு தலைவரே உருவாகவில்லை. தலைவர் என்று நாங்கள் சொல்லும் அர்த்தம் வேறு. நீங்கள் சொல்வது வேறு. பெயர் வேண்டுமானால் போட்டுக்கொள்ளலாம். ஒரு படம் நடித்தவுடன் தலைவர் என்று போட்டுக்கொள்ளலாம். நாடாள வந்த மகராசா என்று வைத்துக்கொள்ளலாம். தலைவர் ஆவதற்கு நிறைய தகுதிகள் இருக்கு. பசி மறக்கணும், தூக்கம் தொலைக்கணும், ஏச்சு பேச்சுக்களை வாங்கணும். என் மேல் 140 வழக்குகள் பக்கமாக இருக்கிறது. எனக்கு முன்னாடி அண்ணன் நக்கீரன் கோபால் இருக்கிறார். அவருக்கும் எனக்கும்தான் போட்டி. அவர் 200ஐ நெருங்கியிருப்பார். தன்னை தாழ்த்திக்கொள்ள தயாராக இல்லாதவன் தலைவராக இருக்க தகுதியற்றவன். எதனொன்றையும் இழக்க முடியாதவன் பிறிதொன்றை அடைய முடியாது. தலைவன் என்பவன் தன்னையே எரித்துக்கொண்டு உலகிற்கு வெளிச்சத்தை தரும் மெழுகுவர்த்தி போன்று இருக்க வேண்டும். சும்மா பெயரில் போட்டுக்கொண்டு தலைவர் என்று சொல்லிக்கொள்ளக்கூடாது” எனத் தெரிவித்தார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
ABP Premium

வீடியோ

20 ஆண்டுகள் 5 தேர்தல்தோல்வியே சந்திக்காத இளைஞன்மோடியின் புதிய Boss
”ஓசூருக்கு எதுக்கு AIRPORT?”தட்டித்தூக்கிய நாயுடு பின்னணியில் மோடி?
OVERTAKE செய்த ஓட்டுநர் தலைகீழாக கவிழ்ந்த அரசு பேருந்து மதுரையில் பரபரப்பு
ஐயப்பன் கோயில் நடை அடைப்பு மகர விளக்கு சீசன் நிறைவு அடுத்த தரிசனம் எப்போது? | Sabarimalai | Sabarimala Devotees | Temple | Festival | Tamil News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
உள்ளே வந்த தினகரன்.. பலத்தை பெருக்கிய அதிமுக - படுகுஷியில் இபிஎஸ்.. ஆனாலும்?
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
ABP Nadu Exclusive: பிரபல தொலைக்காட்சியை விலைக்கு வாங்கும் விஜய்? மும்முரமாக நடக்கும் பேரம்!
K.N.NEHRU : ‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
‘கே.என்.நேருவை குறி வைக்கும் பாஜக’ அமலாக்கத்துறை மூலம் கடும் நெருக்கடி..!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
Shimjitha: கேரள பேருந்து பாலியல் புகாரில் ஷிம்ஜிதா கைது! தீபக் தற்கொலைக்குப் பின் அதிர்ச்சி திருப்பம்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தேனியில் மின் தடை: நாளை முதல் 24ஆம் தேதி வரை! எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
உச்சத்தை தொடும் தங்கம் விலை... கிடுக்கிப்பிடி போட தயாராகும் மத்திய அரசு
OPS: ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
ஓபிஎஸ்ஸை அம்போ என விட்டு சென்ற அந்த 3 பேர்.! இப்போ எங்கே இருக்காங்க தெரியுமா.?
மாணவர்களே! கலைப் போட்டிகளில் கலக்குங்க! குரலிசை, நடனம், ஓவியம் என அசத்தலாம்- பரிசுத்தொகை உண்டு!
மாணவர்களே! கலைப் போட்டிகளில் கலக்குங்க! குரலிசை, நடனம், ஓவியம் என அசத்தலாம்- பரிசுத்தொகை உண்டு!
Embed widget