மேலும் அறிய

தமிழை, தமிழர்களை இழிவுபடுத்தியவர் பெரியார்: மீண்டும் மீண்டும் சீண்டும் சீமான்!

பெரியார் குறித்த கருத்துக்கு ஆதாரம் தரும் வரை சீமான் எங்கு சென்றாலும் விட மாட்டோம் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தெரிவித்துள்ளனர். 

பெரியாரை எதிர்ப்பதுதான் என் கொள்கை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசியிருக்கும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து சீமான் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 

பெரியார் குறித்த கருத்துக்கு ஆதாரம் தரும் வரை சீமான் எங்கு சென்றாலும் விட மாட்டோம் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, கடலூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணன் தம்பி பாசம் வேறு, கொள்கை கோட்பாடு முரண் என்பது வேறு. தம்பி விஜய் பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் அவர் கொள்கை வழிகாட்டி” என கேள்வி எழுப்பினார். மேலும் பெரியாரின் பெண்ணிய உரிமை, பகுத்தறிவு, சமூக நீதி உள்ளிட்ட விஷயங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்தார். இதற்கு பெரியார் பேசாததை பேசியதாக கூறி பொய் பேசி வருகிறார் சீமான் என கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து மீண்டும் விளக்கம் அளித்தார் சீமான். அப்போது பேசிய அவர், “பெரியாரை எதிர்ப்பதுதான் என் கொள்கை. தமிழர்களுக்கு பெரியார் தான் அரண் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? தமிழை, தமிழர்களை இழிவுபடுத்தியவர் பெரியார். திராவிடம் குறித்த தெளிவு இல்லாமல் பெரியாரை ஆதரித்து பேசி வந்தேன். தற்போது தெளிவாகிவிட்டேன். படிக்க படிக்கத்தான் திராவிடம் என்று கூறுபவர்கள் திருடர்கள் என்று தெரிந்து கொண்டேன். திராவிடம் பேசுபவர்களை ஒழிப்பது, பெரியார் கொள்கைகளை எதிர்ப்பது தான் என் கொள்கை. தமிழ் பேரினத்திற்கு எதிராக சிந்தித்தவர், பேசியவர் பெரியார். பெரியார்தான் எல்லாம் செய்தார் என்றால் எங்கள் முன்னோர் செய்தது என்ன? இனி எங்களுக்கு பெரியார் வேண்டாம். இனி திராவிடத்தை ஒழிப்பதுதான் என் வேலை. திராவிடம் என்ற சொல் ஒழியும். 

தமிழ் மொழியை சனியன் என விமர்சித்தவர் பெரியார். தமிழ், தமிழர் அரசு என்று பேசுவது பித்தலாட்டம் என கூறியது பெரியார். ஆதாரத்தை மறைத்து வைத்துக் கொண்டு கேட்டால் எப்படி கொடுக்க முடியும். பெரியார் எழுத்துக்களை, புத்தகங்களை தற்போது வரை நாட்டுடமை ஆக்கவில்லை ஏன்? நாட்டுமையாக்கிவிட்டு ஆதாரத்தை கேளுங்கள்” என ஆவேசமாக பேசியுள்ளார். 

இதனிடையே பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது திமுக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. திமுக சட்டத்துறை துணை செயலாளர் மருது கணேஷ் புகார் அளித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pawan Kalyan's Politics: இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chariot falls in Bangalore | ”தள்ளுங்க.. தள்ளுங்க சாய்து” சரிந்த 150 அடி ராட்சத தேர் பெங்களூருரில் கோர சம்பவம்Kaaraikudi Rowdy Murder  ஓட ஓட விரட்டி ரவுடி கொலை தந்தைக்காக பழிதீர்த்த திகில் கிளப்பும் CCTV காட்சிஅதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pawan Kalyan's Politics: இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
இதி ஆந்திரா காது, தமிழ்நாடு.. பவன் கல்யாணின் அரசியல் பிளான் பலிக்குமா.?
தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
தங்கம் வாங்குறவங்க டக்குனு போங்க.. 4-வது நாளாக குறைந்த விலை.. இன்றைய நிலவரம்...
Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Madurai Gun Shot: அதிரடி காட்டும் காவல்துறை..! மதுரையில் துப்பாக்கிச் சூடு, காவலர் மரணத்தில் திருப்பம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
Vignesh Puthur: யாருப்பா நீ? சிஎஸ்கேவை பதறவிட்ட விக்னேஷ் புதூர், மும்பையின் புதிய அஸ்திரம், 11 வயதிலேயே சம்பவம்
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
CSK vs MI: விக்னேஷ் புதூருக்கு பாராட்டு... ”என்கிட்டையே வேலைய காட்டுறியா?” சஹாரை தாக்கிய தோனி
MS Dhoni:  நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
MS Dhoni: நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி... மரண மாஸ் வீடியோ
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
IPL 2025 CSK vs MI: கடைசி வரை திக்... திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
பாம்பன் பாலம் ரெடி: வரார் பிரதமர் மோடி: திறப்பு எப்போது? ட்ரோன் காட்சி இதோ!
Embed widget