மேலும் அறிய

TN Auto Fare: உயரும் ஆட்டோ கட்டணம்? விரைவில் வெளியாகும் தமிழக அரசின் அறிவிப்பு

ஆட்டோ கட்டணம் விரைவில் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்களிடம் உள்துறைச் செயலாளர் அமுதா உறுதி அளித்துள்ள நிலையில், இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஆட்டோ கட்டணம் விரைவில் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்திடம் உள்துறைச் செயலாளர் அமுதா உறுதி அளித்துள்ள நிலையில், இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் கடைசியாக 2013ஆம் ஆண்டு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது 1.8 கி.மீ குறைந்தபட்ச தூரமாகக் கணக்கிட்டு, அதற்குக் குறைந்தபட்சக் கட்டணமாக 25 ரூபாயை அரசு நிர்ணயம் செய்தது. அத்துடன் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 

மேலும், காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு 3.50 ரூபாய் ஆகவும், இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

9 ஆண்டுகளாக உயர்த்தப்படாத கட்டணம்

எனினும் அதற்குப் பிறகு ஆட்டோ கட்டணம், அடுத்தடுத்த விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அமைக்கப்படவில்லை. 9 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் இருக்கும் சூழல் நிலவுகிறது. பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. 

இதற்கிடையே ஓலா, உபர், ரேப்பிடொ உள்ளிட்ட தனியார் ஆட்டோ செயலிகள், செயல்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  இதையடுத்து, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.


TN Auto Fare: உயரும் ஆட்டோ கட்டணம்? விரைவில் வெளியாகும் தமிழக அரசின் அறிவிப்பு

ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

இதை அடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, மே மாதம் தொழிற்சங்கங்கள், பொது மக்களிடம் தமிழ்நாடு அரசு கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது. அதில் எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை, 

இதையடுத்த, மாநிலம் முழுவதும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி கட்டணத்தை உயர்த்தி அறிவிக்கவும், அரசே ஆட்டோ செயலி உருவாக்க வேண்டும் என்று கோரியும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

அதைத் தொடர்ந்து ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தவும், ஆட்டோ செயலியைத் தொடங்கவும் கோரிதமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் பாலசுப்பிரமணியம், ஆட்டோ டாக்சி தொழிலாளர் சங்க மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆகியோர் ஆக. 28ஆம் தேதி  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் அமுதாவை, நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதற்கு பதிலளித்த அமுதா ஐஏஎஸ், ஆட்டோ கட்டணம் விரைவில் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்படும் எனவும் அரசு சார்பில் செயலி உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஆட்டோ ஓட்டுநர்களிடம்  தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாம்: Quarterly Exam: 6 முதல் 12ஆம் வகுப்பு வரை.. காலாண்டுத் தேர்வில் அதிரடி மாற்றம்- விவரம் இதோ! 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Thanjavur District power cut 23.07.2026: ஆடுதுறை பகுதி மக்களே இன்று 8 மணி நேரம் மின்சாரத்திற்கு ஓய்வுங்க!!! 
Thanjavur District power cut 23.07.2026: ஆடுதுறை பகுதி மக்களே இன்று 8 மணி நேரம் மின்சாரத்திற்கு ஓய்வுங்க!!! 
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Weather Forecast: காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு ஜாக்பாட்! வெயிலுக்கு நடுவே வெளியான கூல் நியூஸ்!
Weather Forecast: காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு ஜாக்பாட்! வெயிலுக்கு நடுவே வெளியான கூல் நியூஸ்!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Embed widget