மேலும் அறிய

Quarterly Exam: 6 முதல் 12ஆம் வகுப்பு வரை.. காலாண்டுத் தேர்வில் அதிரடி மாற்றம்- விவரம் இதோ!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வில் வினாத் தாள்கள் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வில் வினாத் தாள்கள் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பள்ளிகளில் மாணவர்களின் திறனை மதிப்பீடு செய்ய, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு எனப்படும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம்.  இவற்றுக்கு இடையில் பருவத் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இவை தவிர்த்து உயர் வகுப்புகளுக்கு யூனிட் டெஸ்ட் எனப்படும் அலகுத் தேர்வுகள், மாதிரித் தேர்வுகள், திருப்புதல் தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. 

இந்த நிலையில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளுக்கு அந்தந்தப் பள்ளிகள் அளவிலோ அல்லது மாவட்ட அளவிலோ வினாத் தாள்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. அவை அனைத்தும் ஆசிரியர்களால், குறிப்பாக டயட் என்று அழைக்கப்படும் மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் தேர்வு செய்யும் ஆசிரியர்கள் மூலம் தயார் செய்யப்பட்டு வந்தன.

எழுந்த குற்றச்சாட்டுகள்

இதற்கிடையே மாணவர்களின் கற்றல் திறன் மோசமாக இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்தது.  மாவட்ட அளவில் தயார் செய்யப்பட்ட வினாத் தாள்கள், கற்றல் நோக்கங்களை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை அடுத்து எஸ்சிஇஆர்டி எனப்படும் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பொது வினாத்தாள் முறையைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. 

இதை அடுத்து, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை காலாண்டுத் தேர்வில் வினாத் தாள்கள் வழங்கும் முறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் பொது வினாத்தாள் முறை கொண்டு வரப்பட உள்ளது. 

எப்படி மாற்றம் இருக்கும்?

பொது வினாத்தாள்கள் அனைத்தும் மாநில அளவில் தயார் செய்யப்படும். மாவட்டக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் இந்த வினாத் தாள்களைத் தயார் செய்யும். அவை அனைத்தும் எஸ்சிஇஆர்டி எனப்படும் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து 38 மாவட்டங்களுக்கும் தனித் தனியாக வினாத் தாள்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும். இந்த முறை மூலம், மாணவர்களின் கற்றல் திறனை ஒரே சீராக மதிப்பிட முடியும் என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள காலாண்டுத் தேர்விலேயே இந்த மாற்றம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காலாண்டுத் தேர்வு எப்போது?

2023-24ஆம் கல்வியாண்டு நாட்காட்டியின்படி, 4 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடங்கி, செப். 27 வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. செப். 28ஆம் தேதி காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்குகிறது. அக்டோபர் 2ஆம் தேதி வரை இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 1 முதல்  3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி காலாண்டுத் தேர்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், செப். 23ஆம் தேதி தேர்வு விடுமுறை தொடங்க உள்ளது. தேர்வு முடிந்து அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதற்குப் பிறகு, அக்டோபர் 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

இதையும் வாசிக்கலாம்: Exam Time Table: காலாண்டுத் தேர்வு தேதிகள், விடுமுறை எப்போது? பள்ளி நாட்காட்டி இதோ!

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
US Iran War: “48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
“48 மணி நேரத்தில் கைப்பற்றுவதே திட்டமாக இருந்தது, ஆனால்...“ ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் கூறியது என்ன.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Embed widget