மேலும் அறிய

போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது

ரூ.1.17 கோடி ஆன்லைன் முதலீட்டு வர்த்தக மோசடி வழக்கில் தொடர்புடைய 3 நபர்கள் திருச்சியில் கைது.

போலியான வாட்ஸ் அப் குழு

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் வசிக்கும் மனோகரன் ( வயது 58 ) என்பவரை HSBC செக்யூரிட்டீஸ் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் செக்யூரிட்டீஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து போலியான வாட்ஸ் அப் குழுக்களில் , பாதிக்கப்பட்ட நபரான மனோகரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

பின்னர் அதிக லாபம் ஈட்டித் தரும் பங்குச் சந்தை முதலீடுகளைப் பற்றி தவறாக கூறியதை உண்மை என நம்பி ஏமாந்து  அவர்கள் சொன்னபடி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு கடந்த  22.03.2025 முதல் 14.05.2025-ம் தேதி  வரை சுமார் ரூ.1,17,26,447 - யை செலுத்தியுள்ளார்.

பின்னர் அவர் முதலீடு செய்த பணத்தை எடுக்க முனைந்த போது அவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறி பணம் கேட்டு வற்புறுத்தவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மனோகரன், சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த 13.09.2025 அன்று புகார் கொடுத்தார்.

போலியான வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்ட பணம்

புகாரின் அடிப்படையில் , சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் உதவி ஆணையாளர் அவர்களால் வழக்குப் பதிவு செய்து, காவல் ஆய்வாளரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மோசடி செய்யப்பட்ட நிதியில் ஒரு பெரிய தொகை , அதாவது 31 லட்சம் முதல் லேயர் வங்கிக் கணக்கிற்கு (first-layer mule account) அனுப்பப்பட்டுள்ளது என்பதும், அதிலிருந்து மேலும் ரூ. 2,00,045 பிரவீன் என்பவருக்குச் சொந்தமான இரண்டாம் லேயர் உள்ள சிட்டி யூனியன் வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது என்பதும் கண்டறியப்பட்டது.

வங்கிப் பரிவர்த்தனைத் தடயங்களை ஆய்வு செய்ததில், இந்த வங்கி கணக்கு உத்திரப்பிரதேசம், அரியானா, கர்நாடகா  மாநிலங்களில் நடந்த சைபர் குற்ற வழக்குகளிலும்  பயன்படுத்தப்பட்டிருப்பது NCRP மூலம் தெரிய வந்தது. மேலும் அந்த வங்கி கணக்கிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கப்பட்டிருப்பதும், இது திட்டமிட்ட போலி வங்கிக் கணக்கு நடவடிக்கை (organised mule activity) என்பதும், இந்த வங்கி கணக்கு மூலம் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார் ரூ.23 லட்சமும் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.

குற்ற செயலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் மற்றும் கல்லூரி மாணவர்

இதனைத் தொடர்ந்து , திருச்சி மாவட்டத்திற்குச் சென்று, போலி வங்கிக் கணக்குகளைச் சேகரித்தல், மோசடி நிதியை புழக்கத்தில் விடுதல் மற்றும் குற்றச் செயலில் பெறப்பட்ட பணத்தை கிரிப்டோகரன்சியாக (cryptocurrency) மாற்றுதல் ஆகிய குற்றத்தில் ஈடுபட்ட திருச்சியை சேர்ந்த ஜி.பிரவீன் ( வயது 20 ) , சித்திக் பாஷா ( வயது 26 ) , பினோஜ் கான் ( வயது 32 ) ஆகிய மூவரை திருச்சியில் வைத்து கைது செய்தனர். விசாரணையில் பிரவீன் கல்லூரி மாணவர் என்பதும் இவர் தனது வங்கிக் கணக்கை கமிஷனுக்காக சைபர் எதிரிகளுக்கு வழங்கியுள்ளார் என்பதும் சித்திக் பாஷா ஆட்டோ ஓட்டுநர் வேலை செய்த வருவதும் இவர் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்காகப் பல போலி வங்கிக் கணக்குகளைச் சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது.

பினோஜ்கான் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதும், இவர் மோசடிப் பணத்தை எடுத்து, அதை Binance செயலி மூலம் USDT கிரிப்டோகரன்சியாக மாற்றி மோசடி மூலம் பணம் சம்பாதித்து வந்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து குற்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட   3 செல்போன்கள் (சிம் கார்டுடன்), 1 லேப்டாப், 1 டேப் மற்றும்  வழக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget