கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
சமீபத்தில், 2026 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் வழங்கப்படும் விருதிற்காக தமிழகத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,

கபீர் புரஸ்கார் விருது என்பது சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வகையில், வகுப்பு மோதல்களின்போது தைரியமாக செயல்பட்டு பிறரை காப்பவர்களுக்கு வழங்கப்படும் ஒரு மதிப்புமிக்க விருதாகும். மத்திய அரசால் 1990-ல் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், தேசிய விருதுகள் தரம் 1, 2, 3 என மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன, இதில் ரொக்கப் பணம் மற்றும் பதக்கம் அடங்கும். சமீபத்தில், 2026 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் வழங்கப்படும் விருதிற்காக தமிழகத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 15, 2025 சமீபத்திய அறிவிப்புகளின்படி என மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

சாதி, மதம், இனம் சார்ந்த மோதல்களின்போது, ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற சமூகத்தினரைக் காக்கும் வீரம் மற்றும் தன்னலமற்ற செயலைப் பாராட்டுவது இதன் நோக்கமாகும். இந்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு போன்ற மாநில அரசுகளும் இதனை ஊக்குவிக்கின்றன.
2026-ஆம் ஆண்டு குடியரசு தின விருதுக்காக, டிசம்பர் 15, 2025-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு awards.tn.gov.in போன்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, மேலும் மாவட்ட சமூக நல அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம்
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 2026-ம் ஆண்டிற்கான ”கபீர் புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்-அமைச்சரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதானது தகுதியுடைய நபர்களுக்கு தலா ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 வீதம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்கள் ஆகியோர்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியாளர்கள் சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெறத் தகுதியுடையவராவர்.

மேலும் இந்த விருதானது ஒரு இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற இன வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது வீரம் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது.
மேற்சொன்ன விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு ஆணைய இணையதள முகவரியான http://awards.tn.gov.in மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 15.12.2025-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். அதற்கு பின்னர் தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





















