மேலும் அறிய

Remdesivir Demand | மதுரை : நீண்ட வரிசைகளில் ரெம்டெசிவிர் மருந்துக்காக தவிக்கும் பொதுமக்கள்..

80 நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்துகள் இருப்பு உள்ள நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

தமிழகத்தில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. மேலும் அரசு குறிப்பிடும்படி தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கை வசதிகள் காலியாக வைப்பதில்லை எனவும் சொல்லப்படுகிறது. இதனால், படுக்கை வசதிக்காக காத்திருந்து ஆம்புலன்ஸ்களிலேயே ஆக்சிஜன் எடுத்துக்கொண்டு காத்திருக்கும் நிலையையும் பார்க்கமுடிகிறது. படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் இவற்றையெல்லாம் தவிர்த்து, 'ரெம் டெசிவிர்' என்று சொல்லக்கூடிய உயிர் காக்கும் மருந்தை பயன்படுத்த துவங்கியுள்ளனர். மதுரையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 80 நோயாளிகளுக்கான மருந்துகள் இருப்பு உள்ள நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
 
இந்த ரெம்டெசிவர்களுக்கு  கடும் தட்டுப்பாடு நிலவிவந்த நிலையில், இந்த மருந்தானது வெளியே கிடைப்பதில்லை என்பதால் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கும் விற்பனையானது. இதையடுத்து தமிழக அரசு, தமிழ்நாடு மருந்தக கழகம் மூலம் விற்பனையை துவங்கியது. இந்நிலையில், மதுரை மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரெம்டெசிவர் மருந்து இரு தினங்களுக்கு முன்பு விற்பனையைத் தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 500 பாக்ஸ் மருந்தும் விற்பனை ஆகிவிட்டது. 
 
ஒரு வயல் (Bootle) ரூ.1568,  ஆறு டோஸ் கொண்ட டப்பாவின் விலை ரூ.9408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மருந்தை வாங்க மருத்துவர் பரிந்துரை கடிதம், நோயாளிகள் மற்றும் மருந்து வாங்க வருபவர்களின் ஆதார் அட்டை நகல், சி.டி ஸ்கேன், RTPCR பரிசோதனை சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
 
மதுரை,  திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மருத்துவகல்லூரி முன்பாக குவிந்தனர். 80 நோயாளிகளுக்கு வழங்குவதற்கான மருந்துகள் மட்டுமே இருப்பு உள்ள நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இதில் சிலருக்கு மருத்துவச் சான்றிதழ், மருத்துவ குறிப்புகள் என பல்வேறு காரணத்தை கூறி மருந்து இல்லை என தெரிவித்து திருப்பி அனுப்பினர். தொடர்ந்து மருந்துகளை வாங்குவதற்காக நள்ளிரவு முதலே நோயாளிகளின் உறவினர்கள் காத்திருக்ககூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இது குறித்து அங்கிருந்த சிலர், "மருந்து இருப்பு குறித்து அரசு வெளிப்படையாக தெரிவித்தால் இது போன்ற போன்ற சிரமங்களை தவிர்க்கலாம்” என தெரிவித்தனர்.
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
TATA Sierra Bookings: மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
மாருதி, ஹூண்டாயை கதறவிட்ட டாடா சியாரா; ஒரே நாளில் 70,000 முன்பதிவுகளை பெற்று அசத்தல்
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
Job Fair: 10,000+ வேலைவாய்ப்புகள்! 150+ நிறுவனங்கள்- டிச. 20-ல் பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
TATA Sierra Dealership: டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
டாடா சியரா டீலர்ஷிப்பை பெறுவது எப்படி.? அதுல எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் தெரியுமா?
Embed widget