மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2026

(Source: ECI/ABP News)

Summer Rains: பாடுபட்ட நெல்லு மடிஞ்சு போச்சு... கோடை மழை குலையை அறுத்துடுச்சே! கதறும் தென் மாவட்டம்

‛‛காப்பீடு இல்ல, இது காலம் கடந்த விவசாயம்னு பிரித்து பார்க்காமல் அரசு உதவி செய்யனும். கொரோனா இரண்டாவது அலையில் இருக்கும் போது விவசாயிகளுக்கு வேற வாழ்தாரம் இல்லை. எனவே அரசு இதனை பரிசீலனை செய்யனும். மதுரை மாவட்டத்தில் இதைப்போல் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுருக்கு எனவே விவசாயிகள் செலவு செஞ்ச தொகையை மட்டும் நிவாரணமாக வழங்காமல், இதில் கிடைக்க இருந்த லாபத்துல ஒரு பகுதியையும் சேர்த்து, ஏக்கருக்கு 50,000 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கணும்,’’ என்கின்றனர் விவசாயிகள்!

 
கோடை மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு இவர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தற்போது மழை விட்டாலும் இனி தங்களது நெற்பயிர்களைக் காப்பாற்றுவதற்கு வாய்ப்பில்லை எனவும், இதனால் தாங்கள் கடுமையான நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் மதுரை மாவட்ட விவசாயிகள் மிகுந்த வேதனையோடு தெரிவிக்கிறார்கள்.
 
 
 

Summer Rains: பாடுபட்ட நெல்லு மடிஞ்சு போச்சு... கோடை மழை குலையை அறுத்துடுச்சே! கதறும் தென் மாவட்டம்
 
மதுரை மாவட்டத்தில் சோழவந்தான், அலங்காநல்லூர், மேலூர், கொட்டாம்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கிழக்கு,  மேற்கு என பல்வேறு பகுதிகள் நெல் விவசாயம் அதிகளவு செய்யப்படுகிறது. இந்நிலையில் களிமங்கலம்,ஓவலூர், குன்னத்தூர் ஆகிய கிராமங்களில்  கோடை மழையால் பல ஏக்கர் நெல் நாசமானதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 
 ஒரு சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையால் அப்பகுதியில் சுமார்  நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிட்ட பயிர்கள் நிலத்தோடு நிலமாக சாய்ந்து எவ்வித பயனும் இன்றி வீணானதாக தெரிவிக்கின்றனர். விவாசய நிலத்தில் உள்ள நெல் மற்றும் வைக்கோல் எவ்வித பயனின்றி இருப்பதால், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் பாதிப்பு அடைந்து, என்ன செய்வது என தெரியாமல் இருக்கின்றனர். எனவே நஷ்டமடைந்த விவசாய நிலத்திற்கு அரசாங்கம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 
 
 

Summer Rains: பாடுபட்ட நெல்லு மடிஞ்சு போச்சு... கோடை மழை குலையை அறுத்துடுச்சே! கதறும் தென் மாவட்டம்
 
ஓவாலூரைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர்...." பருவம் தவறி வெவசாயம் செஞ்சுபுட்டோம். கோடை மழைக்கு பயிருகபூரா படுத்துருச்சு. சம்சாரிக என்ன பன்னபோறமுனு தெரியல. எங்க பிள்ளகுட்டிகளும் ஏசுதுக..' எதுக்கு வெள்ளாமை போட்டேனு'.  நகை எல்லாம் கூட்டுறவு பேங்குலதே அடகுல இருக்கு எப்புடி திருப்பபோறம்னு தெரியல. குத்தக வாங்கி தான் நட்டோம். நிலத்துக்காரங்களுக்கு 8 மூடையாச்சும் கொடுக்கனும் அதுவும் குடுக்க முடியல. மிஞ்சுன நெல்ல மூட்ட 300க்கு தான் போகும், 350 ரூவாய்க்கு தான் போகும்னு அடிமாட்டு வெல பேசுராங்க. அரசாங்கம் தான் கண்ண தொறக்கனும்" என்றார் வேதனையாக.
 
 
மற்றொரு விவசாயி...." பயிருக கீழ சாஞ்சு, கதிர்  எல்லாம் சேத்துல சிக்கி மண்ணோடு மண்ணா கிடந்து, முளைக்க ஆரம்பிச்சிடுச்சு. கோடை மழை விட்டாலும், நெல்லை அறுவடை செய்ய முடியாது.  உழைப்பு இப்படி வீணாப்போயிடுச்சு. என மிகுந்த வேதனையோடு தெரிவிக்கனர்.
 
 

Summer Rains: பாடுபட்ட நெல்லு மடிஞ்சு போச்சு... கோடை மழை குலையை அறுத்துடுச்சே! கதறும் தென் மாவட்டம்
 
 
 களிமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஹக்கிம்..., "உழவு, நாற்று உற்பத்தி, நாற்று பறிப்பு, நடவு, களையெடுப்பு, இடுபொருள்களுக்குனு விவசாயிகள் இதுவரைக்கும் ஏக்கருக்கு 30,000 ரூபாய்க்கு மேல செலவு செஞ்சிருக்கோம். கீழ சாஞ்சி கிடக்குற நெல்லை, இனி அறுத்தெடுக்க வாய்ப்பே இல்லை. முளைக்காம மிச்சமிருக்குற நெற்கதிர்களை ஒருவேளை அறுவடை செஞ்சாலும் கூட, நெல்மணிகள் கீழ உதிர்ந்துடும். எங்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணி காலதாமதாம வந்து சேந்துச்சு. அதனால பருவம் மாறிடுச்சு. கோடை மழையில சிக்கியதால் இப்ப சாய்ந்து முளைக்குது. இது நெல் காப்பீடல வராது அதனால அதிகாரிகள் நிவாரணம் தர வாய்ப்புள்ளேனு சொல்ராங்க. எனவே அரசு விவசாயிகளின் சூழலை உணர்ந்து உதவி செய்யனும்" என்றார்.
 
 

Summer Rains: பாடுபட்ட நெல்லு மடிஞ்சு போச்சு... கோடை மழை குலையை அறுத்துடுச்சே! கதறும் தென் மாவட்டம்
 
 
சமூக ஆர்வலர் சிலர்...," காப்பீடு இல்ல, இது காலம் கடந்த விவசாயம்னு பிரித்து பார்க்காமல் அரசு உதவி செய்யனும். கொரோனா இரண்டாவது அலையில் இருக்கும் போது விவசாயிகளுக்கு வேற வாழ்தாரம் இல்லை. எனவே அரசு இதனை பரிசீலனை செய்யனும். மதுரை மாவட்டத்தில் இதைப்போல் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுருக்கு எனவே விவசாயிகள் செலவு செஞ்ச தொகையை மட்டும் நிவாரணமாக வழங்காமல், இதில் கிடைக்க இருந்த லாபத்துல ஒரு பகுதியையும் சேர்த்து, ஏக்கருக்கு 50,000 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கணும். விவசாயிகளோட 5-  ஆறு மாச உழைப்பும் விவசாயிகளோட வாழ்வாதாரமும் இதுல அடங்கியிருக்கு. நெல்லு மட்டுமல்ல... உளுந்து, நிலக்கடலை, துவரை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் மழையில பாதிக்கப்பட்டிருக்கு. அதுக்கும் உரிய இழப்பீடு வழங்கணும்’’ எனத் தெரிவித்தனர்.
 
அரசு ஆதரவுக்கரம் நீட்டுமா... பொறுத்திருந்து பார்க்கலாம்!
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

VS Babu:
VS Babu: "என்னாலதான் அவர் ஜெயிச்சாரு.." மு.க.ஸ்டாலினையே தோற்கடித்த விஎஸ் பாபு!
DMK: கடந்த 5 ஆண்டுகள் திமுக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் என்னலாம் நடந்திருக்கும்? வைரல் பதிவு!
DMK: கடந்த 5 ஆண்டுகள் திமுக எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் என்னலாம் நடந்திருக்கும்? வைரல் பதிவு!
"ரெடியாக இருங்க மக்களே! - 2 நாட்கள் வெளுத்து வாங்கப்போகும் மழை - எங்கெல்லாம்? இதோ லிஸ்ட்
DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்
DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்
DMK: திமுக படுதோல்விக்கு அடித்தளமிட்ட 7 காரணங்கள்! என்னென்ன ஓர் அலசல்
Vijay Swearing-In: ''ஜோசப் விஜய் ஆகிய நான்'' முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!
Vijay Swearing-In: ''ஜோசப் விஜய் ஆகிய நான்'' முதலமைச்சர் பதவியேற்பு எப்போ? எங்கே? தேதி குறித்த தவெக!
Modi on UAE Attack: 'பொதுமக்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது' UAE தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
'பொதுமக்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது' UAE தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்
Thirumavalavan:
Thirumavalavan:"இடதுசாரிகளுடன் இணைந்தே முடிவு!" திருமா கொடுத்த ட்விஸ்ட்! தவெகவுடன் கூட்டணி?
Modi Vs Rahul: “மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜகவின் வெற்றி ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல்“; மோடியை சாடிய ராகுல்
“மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜகவின் வெற்றி ஜனநாயகத்திற்கு ஒரு அச்சுறுத்தல்“; மோடியை சாடிய ராகுல்
Seeman: ’’தம்பி விஜய், எதிர்க்கட்சி நாதக’’ தேர்தல் முடிவுகள் குறித்து முதன்முதலாய் வாய் திறந்த சீமான்!
Seeman: ’’தம்பி விஜய், எதிர்க்கட்சி நாதக’’ தேர்தல் முடிவுகள் குறித்து முதன்முதலாய் வாய் திறந்த சீமான்!
Mamata Banerjee: ’’நான் தோற்கலை; பதவி விலகமாட்டேன்’’ அடம்பிடிக்கும் மம்தா-மேற்குவங்கத்தில் பரபரப்பு!
Mamata Banerjee: ’’நான் தோற்கலை; பதவி விலகமாட்டேன்’’ அடம்பிடிக்கும் மம்தா-மேற்குவங்கத்தில் பரபரப்பு!
Udhayanidhi Stalin: திருப்பத்தூரில் தவெக வெற்றி - திமுக கொடுக்க ட்விஸ்ட்.. அடுத்து என்ன செய்வோம் என்பதை சொன்ன உதயநிதி
திருப்பத்தூரில் தவெக வெற்றி - திமுக கொடுக்க ட்விஸ்ட்.. அடுத்து என்ன செய்வோம் என்பதை சொன்ன உதயநிதி
Embed widget