மேலும் அறிய

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின; நோயாளிகள் வெளியில் காத்திருப்பு

செங்கல்பட்டில் வேகமாக நிரம்பி வரும் படுக்கைகள் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில்  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக அளவு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில்  2181 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது மருத்துவமனை மற்றும் வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்ட வைரஸ் தொற்றால் பாதிக்கப்படடோர்  எண்ணிக்கை 12 ஆயிரத்து 978.

கடந்த வாரம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சன் பற்றாக்குறை காரணமாக 13 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின; நோயாளிகள் வெளியில் காத்திருப்பு

 மருத்துவமனையில் மொத்தம் 480-படுக்கைகள் உள்ளது. இதில் 325- படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி உள்ளது. மீதமுள்ள 155 படுக்கைகள் சாதாரண படுக்கைகள். 

இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி உள்ள 325- படுக்கைகளும் நிரம்பியதாக கூறப்படுகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நோயாளிகள் வெளியே காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக நோயாளிகள் மயக்கமடைந்து மருத்துவமனையின் வாயிலிலும், மரத்தடிகளிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். 


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின; நோயாளிகள் வெளியில் காத்திருப்பு

பலர் மூச்சு திணறலால் தவிக்கும் நிலையில் அவர்களுக்கான மாற்று ஏற்பாடு குறித்தும் மருத்துவமனை நிர்வாகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து கேட்டபோது முறையான பதில் அளிக்க மறுப்பதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாற்று  ஏற்பாடு செய்து அவர்களுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தி ஏற்பாடுகள் நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் தரப்பில் பதில் கூற மறுத்துவிட்டனர். 


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின; நோயாளிகள் வெளியில் காத்திருப்பு

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர். ஏற்கனவே செங்கல்பட்டு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையில் பலர் உயிரிழந்த நிலையில், ஆக்சிஜன் இருப்பு குறித்து கண்காணிக்க சப் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் படுக்கை பற்றாக்குறை நிலவுகிறது. தீவிர  நிலையில் வரும் பலருக்கும் இன்னும் போதிய வசதி கிடைக்கவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் அதிதீவிர நிலையில் நோயாளிகள் வரும் பகுதியாக செங்கல்பட்டு உள்ள நிலையில் இது போன்ற காத்திருக்கும் சூழல் இல்லாமல் போதிய படுக்கை வசதிகள் கிடைக்க அரசு தரப்பில் ஏற்பாடு செய்ய வேண்டும். 

அதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு குழு, தங்கள் பணியில் முழு கவனம் செலுத்தி வரக்கூடிய நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் கடந்த வாரம் நடந்தது போன்ற கசப்பான சம்பவங்களை தவிர்க்க முடியும். 

தலைப்பு செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் வி.சி.க. மாநாடு: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
உளுந்தூர்பேட்டையில் வி.சி.க. மாநாடு: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
" கஞ்சா புழக்கம்...பாதுகாப்பு எங்கே ? " அமைச்சர்களை முற்றுகையிட்ட மக்கள்
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!
போலீஸ் கண்முன்னே கொடூரம்! காஞ்சிபுரம் ஆடித் திருவிழாவில் கதற கதற 2 பேர் வெட்டிக்கொலை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
ஒரே சார்ஜில் 579 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவிலே இந்த 3 E Bikeதான் இதுல டாப் - என்னென்ன?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
இந்தியன் ஆயில் வேலைவாய்ப்பு: ரூ.1.6 லட்சம் சம்பளம்! செப்.3 கடைசி நாள்! விபரம் இதோ.
Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
Embed widget