மேலும் அறிய

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின; நோயாளிகள் வெளியில் காத்திருப்பு

செங்கல்பட்டில் வேகமாக நிரம்பி வரும் படுக்கைகள் படுக்கைகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில்  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக அளவு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில்  2181 நபர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது மருத்துவமனை மற்றும் வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்ட வைரஸ் தொற்றால் பாதிக்கப்படடோர்  எண்ணிக்கை 12 ஆயிரத்து 978.

கடந்த வாரம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சன் பற்றாக்குறை காரணமாக 13 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின; நோயாளிகள் வெளியில் காத்திருப்பு

 மருத்துவமனையில் மொத்தம் 480-படுக்கைகள் உள்ளது. இதில் 325- படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதி உள்ளது. மீதமுள்ள 155 படுக்கைகள் சாதாரண படுக்கைகள். 

இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி உள்ள 325- படுக்கைகளும் நிரம்பியதாக கூறப்படுகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நோயாளிகள் வெளியே காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக நோயாளிகள் மயக்கமடைந்து மருத்துவமனையின் வாயிலிலும், மரத்தடிகளிலும் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். 


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின; நோயாளிகள் வெளியில் காத்திருப்பு

பலர் மூச்சு திணறலால் தவிக்கும் நிலையில் அவர்களுக்கான மாற்று ஏற்பாடு குறித்தும் மருத்துவமனை நிர்வாகம் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து கேட்டபோது முறையான பதில் அளிக்க மறுப்பதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாற்று  ஏற்பாடு செய்து அவர்களுக்கு படுக்கை வசதிகள் ஏற்படுத்தி ஏற்பாடுகள் நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர்கள் தரப்பில் பதில் கூற மறுத்துவிட்டனர். 


செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பின; நோயாளிகள் வெளியில் காத்திருப்பு

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர். ஏற்கனவே செங்கல்பட்டு மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையில் பலர் உயிரிழந்த நிலையில், ஆக்சிஜன் இருப்பு குறித்து கண்காணிக்க சப் கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டது. ஆனாலும் இன்னும் படுக்கை பற்றாக்குறை நிலவுகிறது. தீவிர  நிலையில் வரும் பலருக்கும் இன்னும் போதிய வசதி கிடைக்கவில்லை. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் அதிதீவிர நிலையில் நோயாளிகள் வரும் பகுதியாக செங்கல்பட்டு உள்ள நிலையில் இது போன்ற காத்திருக்கும் சூழல் இல்லாமல் போதிய படுக்கை வசதிகள் கிடைக்க அரசு தரப்பில் ஏற்பாடு செய்ய வேண்டும். 

அதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு குழு, தங்கள் பணியில் முழு கவனம் செலுத்தி வரக்கூடிய நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அப்போது தான் கடந்த வாரம் நடந்தது போன்ற கசப்பான சம்பவங்களை தவிர்க்க முடியும். 

தலைப்பு செய்திகள்

குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
" ரத்தக் கறை அரிவாளுடன் சரணடைந்த கணவன் " பின்னணியில் திடுக்கிடும் காரணம்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஆன்மீக ‘பூஸ்ட்’...! ஆரோவில்லில் நடந்த மாஸ் கிளாஸ்
"வாயில் செல்லோ டேப் ஒட்டி சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் " 5 மாத கர்ப்பம் - பெயிண்டரின் வெறிச்செயல்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget