மேலும் அறிய

கரூர் மாயனூர் கதவணைக்கு 1.62 லட்சம் கனஅடி நீர் வருகை - விவசாயிகள் மகிழ்ச்சி

காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் காவிரி பாசன வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் காவிரி பாசன சிறுகுறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1.62 லட்சம் கன அடியாக அதிகரித்தது. மாயனூரில் 02.00 மில்லி மீட்டர் மழை கொட்டியது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து, 62 ஆயிரத்து, 170 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு ஒரு லட்சத்து, 60 ஆயிரத்து, 950 கனஅடியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், குறுவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில் நான்கு வாய்க்காலில், 1,220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால் காவிரி பாசன வாய்க்காலில், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் காவிரி பாசன சிறுகுறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


கரூர் மாயனூர் கதவணைக்கு 1.62 லட்சம் கனஅடி  நீர் வருகை - விவசாயிகள் மகிழ்ச்சி

 

அமராவதி அணை நிலவரம்

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,671 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் அமராவதி ஆற்றில் வினாடிக்கு 2,925 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. இதனால், கரூர் அருகே பெரிய ஆண்டாங்கோயில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 959 கனஅடி தண்ணீர் மட்டும் வந்தது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம் 15 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 13.39 அடியாக இருந்தது.


கரூர் மாயனூர் கதவணைக்கு 1.62 லட்சம் கனஅடி  நீர் வருகை - விவசாயிகள் மகிழ்ச்சி 

நங்காஞ்சி அணை நிலவரம்

திண்டுக்கல் மாவட்டம்,  நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதியில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 39.37அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 33.461  கன அடி ஆக இருந்தது. 

ஆத்துப்பாளையம் அணை நிலவரம்

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.9 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 26.17 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில்   தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 


கரூர் மாயனூர் கதவணைக்கு 1.62 லட்சம் கனஅடி  நீர் வருகை - விவசாயிகள் மகிழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு -36.10 

கரூர்- 1.2 மில்லி மீட்டர், அரவாக்குறிச்சி- 06.00 மில்லி மீட்டர், அனைபாளையம்- 04.03 மில்லி மீட்டர், குளித்தலை 01.06 மில்லி மீட்டர், தோகமலை 01.04 மில்லி மீட்டர், மாயனூர் 02.0 மில்லி மீட்டர், பஞ்சபட்டி 15..04 மில்லி மீட்டர், மைலம்பட்டி 03.00 மில்லி மீட்டர், ஆகிய அளவுகளில் மழை பெய்தது, மாவட்டம் முழுவதும் சராசரியாக 36.10  மில்லிமீட்டர் மழை பெய்தது.


 

அமராவதி அணையில் உபரி நீர் வெளியேற்றம் - கரூர் அடுத்த பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணையில் 14,570 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கரூர் அமராவதி தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் கரையோர பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பனையில் நீர் மட்டம் 92 சென்டிமீட்டர் உயர்ந்து தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 14.570 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

பெரிய ஆண்டாங் கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் பொது மக்களுக்கு வாகனத்தில் ஒலி பெருக்கி மூலம், கரையோரம் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக இருக்கும் படியும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது எனவும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Embed widget