மேலும் அறிய

Madurai Train Fire: மதுரையில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பயணிகள் ரயில்.. 9 பேர் பலி

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. லக்னோ - ராமேஸ்வரம் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  ரயிலில் இருந்த சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சிலிண்டர் வைத்து சமையல் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகவும்  முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளன. லக்னோவில் இருந்து 15 நாட்கள் ஆன்மீக சுற்றுலா செல்வதற்காக கடந்த 17ம் தேதி இந்த ரயில் புறப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, மதுரையில் வந்திருந்த ரயில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் உள்ள பல்வேறு புன்னியஸ்தலங்களுக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், நிறுத்தி வைக்கபட்டு இருந்த ரயிலில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த அனவருமே உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடந்தது என்ன?

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் பார்ட்டி கோச் என்ற ரயில்வே திட்டத்தின் அடிப்படையில், ஒரு பெட்டி முழுவதையும் முன்பதிவு செய்து ஆன்மீக சுற்றுலாவை தொடங்கியுள்ளனர். கடந்த 17ம் தேதி இவர்களின் பயணம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக 90 பேர் கொண்ட அந்த குழு மதுரை வந்தடைந்துள்ளது. அங்கு ஸ்டேப்லிங் லைனில் நிறுத்தப்பட்டு இருந்த அந்த பெட்டியில் இருந்தவர்கள், வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தீப்பற்றியதோடு, அதிவேகமாக பெட்டி முழுவதும் தீ பரவியுள்ளது. இதைகண்ட உள்ளே இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பெட்டியில் இருந்து கீழே குதித்து ஓடியுள்ளனர். இதனிடையே பெட்டி முழுவதும் திப்பற்றி எரிந்து நாசமானது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

9 பேர் பலி:

இதனிடையே, ரயில்வே பாதுகாப்பு படையினர், மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு  நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த விபத்தில் 5 ஆன்கள், 3 பெண்கள் என 9 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் யார் என அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல் சிதிலமடைந்துள்ளது.  காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து உயிரிழந்தோரின் உடல்களை அடையாளம் காணும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதோடு, விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். அந்த பெட்டியில் பயணித்த பிற பயணிகளிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்
தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்
EPS Vs Sengottaiyan: இரவில் முடிந்த டீல்.. காலையில் இபிஎஸ் துதி.. அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்.. பின்னணி என்ன.?
இரவில் முடிந்த டீல்.. காலையில் இபிஎஸ் துதி.. அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்.. பின்னணி என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kashmir Terror Attack | பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? | Pakistan Embassy  | PM ModiSengottaiyan vs EPS: அடங்க மறுக்கும் செங்கோட்டையன்! கலக்கத்தில் எடப்பாடி! சீனுக்கு வந்த அமித்ஷா!Sengottaiyan: ”EPS இல்லனா அதிமுக இல்ல” செங்கோட்டையன் 360 டிகிரி பல்டி! நள்ளிரவில் முடிந்த DEAL!Annamalai BJP: மத்திய அமைச்சராகும் அண்ணாமலை? கறார் காட்டிய எடப்பாடி! சீனுக்கு வந்த சந்திரபாபுநாயுடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
Sindhu River: சிந்து நதிநீர் ஏன் பாகிஸ்தானுக்கு இவ்வளவு முக்கியம்? அடிமடியிலே கை வைத்த இந்தியா!
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
IPL 2025 RCB vs RR: கதறவிட்ட கோலி.. சிதறவிட்ட படிக்கல்! ஆர்சிபியின் 206 ரன்கள் டார்கெட்டை எட்டுமா ராஜஸ்தான்?
தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்
தமிழகத்தில் 200 பாகிஸ்தானியர்கள்.. வந்தது அலர்ட்.. களத்தில் இறங்கிய போலீஸ்
EPS Vs Sengottaiyan: இரவில் முடிந்த டீல்.. காலையில் இபிஎஸ் துதி.. அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்.. பின்னணி என்ன.?
இரவில் முடிந்த டீல்.. காலையில் இபிஎஸ் துதி.. அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையன்.. பின்னணி என்ன.?
Pahalgam Attack: கொந்தளிப்பில் இந்தியா; பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டமா?
Pahalgam Attack: கொந்தளிப்பில் இந்தியா; பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டமா?
Palanivel Thiaga Rajan : ‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
‘PTR-க்கு கூடுதல் அதிகாரம், கூடுதல் துறை’ விரைவில் அறிவிக்கிறார் முதல்வர்..!
Trump Vs Musk: DOGE-லிருந்து எஸ்கேப் ஆகும் எலான் மஸ்க்.. ட்ரம்ப் அசால்டாக கூறிய பதில் என்ன தெரியுமா.?
DOGE-லிருந்து எஸ்கேப் ஆகும் எலான் மஸ்க்.. ட்ரம்ப் அசால்டாக கூறிய பதில் என்ன தெரியுமா.?
Student Admission: என்னாது? ஒவ்வொரு பள்ளியிலும் 5 பேர் கூட சேரலையா? அரசுப் பள்ளிகளில் குறையும் மாணவர் சேர்க்கை
Student Admission: என்னாது? ஒவ்வொரு பள்ளியிலும் 5 பேர் கூட சேரலையா? அரசுப் பள்ளிகளில் குறையும் மாணவர் சேர்க்கை
Embed widget