மேலும் அறிய

Watch Video | 900 கிலோ எடை கொண்ட ராட்சத ஆமை: காப்பாற்றிய மீனவர்கள் பகிர்ந்த அனுபவம்

சென்னை கோவலம் மீனவ கிராம மீனவர்கள் பி.ஸ்ரீனி, எம்.பிரபுவுக்கு அன்றைய தினம் எப்போதும் போல் சாதாரண நாளாக அமையவில்லை.

சென்னை கோவலம் மீனவ கிராம மீனவர்கள் பி.ஸ்ரீனி, எம்.பிரபுவுக்கு அன்றைய தினம் எப்போதும் போல் சாதாரண நாளாக அமையவில்லை. மீன்பிடிப்பதற்காகச் சென்று 5 கி.மீ தூரம் வரை வலையைப் பரப்பிவிட்டு காத்திருந்த அவர்களுக்கு ஓர் அபயக் குரல் கேட்டுள்ளது. அந்தக் குரலைக் கேட்டு அங்கே சென்று பார்த்தவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

பின்னர் நடந்தததை ஸ்ரீனியும் பிரபுவுமே விவரித்தனர். அவர்கள் கூறியதாவது:

நாங்கள், எங்களின் வாழ்நாளில் அவ்வளவு பெரிய ஆமையைப் பார்த்ததில்லை. அதன் தலை மட்டுமே எனது தலையைப் போல் இருமடங்கு பெரியதாக இருந்தது. முதலில் எங்களுக்கு அதனருகில் நெருங்கவே பயமாக இருந்தது. பின்னர், அது மீன்பிடி வலையில் சிக்கியிருப்பதைப் பார்த்துப் பரிதாபமாக இருந்தது. உடனே அதனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்தோம். உடனே அதனை முதலில் மெதுவாகத் தொட்டுப் பார்த்தோம். அந்த ஆமை ஒத்துழைப்பதுபோல் அமைதியாக இருந்தது. உடனே நாங்கள் இருவரும் அதன் மீது சுற்றியிருந்த வலையைப் பிரிக்க முயன்றோம். சுமார் 2 மணி நேரம் ஆனது முழுமையாக ஆமையின் உடலில் இருந்து அந்த வலையைப் பிரித்தெடுக்க. ஆனால், அவ்வளவு நேரமும் அந்த ஆமை மிகவும் பொறுமையாக இருந்தது. அதற்கு நாங்கள் எப்படியும் அதனைக் காப்பாறிவிடுவோம் என்ற நம்பிக்கை வந்திருந்தது போல் எங்களுக்குத் தோன்றியது. நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் அதன் உடலைச் சுற்றியிருந்த அந்த ராட்சத வலையைப் பிரித்து ஆமையை விடுவித்தோம். இது வாழ்நாள் அனுபவம் என்று தங்களின் புதிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

சுமார் 10 கிலோ எடையிலிருந்த அந்த வலையைக் கொண்டுவந்து எச்சிஎல் உதவியுடன் இயங்கும் ட்ரீ ஃப்வ் ஃபவுண்டேஷனிடம் ஒப்படைத்துள்ளது.

இது குறித்து கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் ட்ரீ ஃப்வ் ஃபவுண்டேஷனின் சுப்ரஜா கூறுகையில், "கடந்த ஜூலை மாதம், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 14,000 கிலோ கிழிந்த வலைகளை எங்களிடம் மீட்டுக் கொடுத்தனர். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கிலோவுக்கு ரூ.5 என்று வழங்கினோம்" என்றார்.

மேலும், அவர் கூறுகையில், "மீனவர்கள் காப்பாற்றிய அந்த ஆமையைப் பற்றியும் விவரித்தார். மீனவர்கள் குறிப்பிடும் இந்த வகை ஆமைகள் லெதர்பேக் டர்ட்டிள் வகையைச் சேர்ந்தவை. இவை மிகவும் அரிதானவை. பெரும்பாலும் அந்தமான் நிகோபார் பகுதிகளில் வாழும் இவை, இனப்பெருக்கக் காலத்தில் இடம் பெயர்ந்து வருவதுண்டும். தற்போது மீனவர்கள் விடுவித்துள்ள அந்த ஆமை முழுமையாக வளர்ந்த ஆண் ஆமை. சென்னை, காஞ்சிபுரம் கடற்பகுதிகளில் சுமார் 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் பெரிய அளவிலான ஆமைகள் ஒன்றிரண்டைப் பார்த்ததாக எப்போதாவது மீனவர்கள் சொல்வதுண்டு. ஒருமுறை நீலாங்கரை கடற்கரையில் இதேபோன்ற ராட்சத வலையில் சிக்கிய ஆமை ஒன்று மீட்கப்பட்டது.

ஆனால், இப்போது மீனவர்கள் குறிப்பிட்டுள்ள லெதர்பேக் ஆமையை கடைசியாக 1982 மார்ச் 28ல் கோவலம் பகுதியில் தான் மீனவர்கள் பார்த்தனர். ஆனால், அந்தப் பெண் ஆமை இறங்கி கதை ஒதுங்கியது" என்றார்.

தலைப்பு செய்திகள்

ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! தட்டி தூக்கிய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
தற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் !! கணித ஆசிரியர் கைது
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
வைப்பாறுக்கு உயிர் கொடுத்த சாத்தூர்.. மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமைப் பணி துவக்கம் !
இனிமேல் அரசு கட்டடங்கள் இப்படித்தான் இருக்கும்! PWD அதிரடி முடிவு!வெளியான முக்கிய தகவல்!
இனிமேல் அரசு கட்டடங்கள் இப்படித்தான் இருக்கும்! PWD அதிரடி முடிவு!வெளியான முக்கிய தகவல்!

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget