மேலும் அறிய

Kavin Murder: கவின் கொலை வழக்கு; கொலையாளி சுர்ஜித்தின் சப்-இன்ஸ்பெக்டர் தந்தையை தூக்கிய காவல்துறை

சென்னையில் ஐடி என்ஜினியராக பணியாற்றி வந்த கவின், காதல் விவகாரத்தில் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், கொலையாளி சுர்ஜித்தின் தந்தையான சப்-இன்ஸ்பெக்டர் சவரணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நெல்லையைச் சேர்ந்த கவின் என்பவர், சென்னையில் தகவல் தொழில்நுட்ப பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர், கடந்த 27-ம் தேதி, காதல் விவகாரம் தொடர்பாக சுர்ஜித் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான காவல்துறை அதிகாரிகளையும் கைது செய்யுமாறு வலியுறுத்திய கவினின் உறவினர்கள் உடலை வாங்காமல் போராட்டம் நடத்தி வந்தனர். இதையடுத்து, நேற்று இரவு சுர்ஜித்தின் தந்தையான சப்-இன்ஸ்பெக்டர் சரவணனை காவல்துறையினர் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுவந்த கவினின் உறவினர்கள்

கவின் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே கொலையாளி சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது அக்காவும், கவினும் பழகி வந்ததாகவும், அவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழகுவதை நிறுத்துமாறு கவினிடம் கூறியதாகவும், ஆனால் அதை அவர் கேட்காததால் வெட்டிக் கொலை செய்ததாக அவர் கூறினார்.

இந்த ஆணவக் கொலை விவகாரம் பெரும் பேசுபொருளான நிலையில், கவினின் உடலை வாங்க மறுத்து அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். சுர்ஜித்தின் பெற்றோர் மீதும் வழக்குப் பதிந்து, அவர்களை கைது செய்ய அவர்கள் வலியுறுத்தி வந்தனர். அதுவரை, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள கவினின் உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் கூறி வந்தனர்.

அரசு சார்பில் கொடுக்கப்பட்ட 6 லட்சம் ரூபாய் இழப்பீட்டையும் வாங்க மறுத்த அவர்கள், தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர்களான சுர்ஜித்தின் தந்தை சரவணனும், தாய் கிருஷ்ணகுமாரியும் நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும், அவர்களை கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என கிவினின் உறவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் கைது

இந்த சூழலில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. பாரபட்சமின்றி வெளிப்படையாக விசாரணை நடப்பதை உறுதி செய்வதற்காக சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவரின் பெற்றோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு டிஜிபி அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில், நேற்று இரவு நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சுர்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளர் சரவணன் இரவில் கைது செய்யப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, காவல் துணை ஆணையர் ரத்தினகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் சரவணனிடம் விசாரணை நடததினர். பின்னர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அதைத் தொடர்ந்து மாஜிஸ்ட்ரேட் முன் ஆஜர்படுத்தி, அவரை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும், சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கொலை நடந்தது எப்படி.?

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர்கள் சந்திரசேகர்-தமிழ்செல்வி தம்பதி. இவர்களுடைய மகன் கவின்(27). இவர்கள் தற்போது தூத்துக்குடி பிரையண்ட் நகரில் வசித்து வருகின்றனர்.

நெல்லை பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்தவர்கள் சரவணன்-கிருஷ்ணகுமாரி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகளும், சுர்ஜித்(24) என்ற மகனும் உள்ளனர். இதில், சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் இதற்கு முன் தூத்துக்குடியில் வசித்து வந்துள்ளனர்.

அப்போது, ஒரே பள்ளியில் படித்த கவினுக்கும், சுர்ஜித்தின் அக்காவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் படிப்பு முடித்து சென்னையில் ஐடி துறையில் என்ஜினியராக பணியாற்றி வந்த கவின், விடுமுறைக்காக ஊருக்கு சென்றுள்ளார். கடந்த 27-ம் தேதி தனது தாத்தாவை பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அவர் அழைத்து வந்துள்ளார்.

அப்போது, அங்கு வந்து, கவினை பேசுவதற்காக அழைத்துச் சென்று, அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார் சுர்ஜித். இதையடுத்து, பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து சுர்ஜித்தை கைது செய்தனர்.

 

 

தலைப்பு செய்திகள்

DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
O Panneer Selvam: திமுக துதிபாடிய ஓபிஎஸ்.. ஆஃப் செய்த செங்கோட்டையன்.. ரவுண்டு கட்டிய தவெக!
O Panneer Selvam: திமுக துதிபாடிய ஓபிஎஸ்.. ஆஃப் செய்த செங்கோட்டையன்.. ரவுண்டு கட்டிய தவெக!
Marie Wilson: தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன்.. என்னமோ பேசிட்டு போங்க.. மரிய வில்சன் பதிலடி!
Marie Wilson: தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன்.. என்னமோ பேசிட்டு போங்க.. மரிய வில்சன் பதிலடி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget