நச்சுத்தன்மை நீக்கும் பண்புகள் முதல், செரிமான நன்மைகள் வரை, தேயிலை இலைகள் உள்ளேயும், வெளியேயும் சிறந்த ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதாக பரவலாக அறியப்படுகின்றன.
தேயிலை இலைகள் அஜீரணம் மற்றும் மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவுகின்றன. உட்கொள்ளும்போது, அவை செரிமானப் பாதையை சுத்தம் செய்யவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
பலர் தேயிலை இலைகளை ஷாம்பூவிற்கு இயற்கையான மாற்றாக பயன்படுத்துகிறார்கள். தேயிலை நீர் கடுமையான ரசாயனங்கள் இல்லாமல் அழுக்கை நீக்குகிறது. இது உணர்திறன் வாய்ந்த உச்சந்தலைகளுக்கு ஏற்றதாக அமைகிறது.
முடி உதிர்வதை குறைப்பதில் இருந்து, நரையை மாற்றுவது வரை, இந்த இயற்கை முறை பல நன்மைகளை கொண்டுள்ளது.
தேயிலை இலைகள் இயற்கையாகவே வெள்ளை முடியை குறைக்க உதவும். தேயிலை நீரை தொடர்ந்து பயன்படுத்துவது, ரசாயன சாயங்கள் தேவையில்லாமல் காலப்போக்கில் நரையை கருமையாக்கும்.
தேயிலை இலைகள் கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகின்றன. அவை, மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன மற்றும் நிறத்தை மேம்படுத்துகின்றன. இது உங்கள் கூந்தலை கருமையாகவும், வலிமையாகவும் வைத்திருக்க உதவுகிறது.
தேயிலை நீர் உச்சந்தலைக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து, அடர்த்தியான, ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
தேயிலை இலை நீரை தெளிப்பது, முடி உடைதல் மற்றும் முடி உதிர்வை குறைக்கலாம். இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் வேர்களை வலுப்படுத்துகிறது மற்றும் எரிச்சலூட்டும் உச்சந்தலை நிலைகளை அமைதிப்படுத்துகிறது.
தேயிலை இலை நீர் உங்கள் தலைமுடிக்கு இயற்கையான, ஆரோக்கியமான பளபளப்பை அளிக்கிறது. தேயிலையில் உள்ள டானின்கள், முடியின் அமைப்பை மென்மையாக்குகிறது. இதனால், முடி, பட்டு போன்றும், பளபளப்பாகவும் தோன்றும்.