மேலும் அறிய

கரூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்க பலே திட்டங்கள்

தனியார் நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், உற்பத்தியாளர்கள், பால் மற்றும் இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் கால்நடை தீவன ஆலைகளை ஊக்குவிப்பது குறித்து கரூர் கலெக்டர் தகவல்.

தொழில் முனைவோர்களை உருவாக்க பலே திட்டங்கள்

கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் தொழின் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில்   தகுதியுடையவர்கள் சேர்ந்து பயன்பெறலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.



கரூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்க பலே திட்டங்கள்

 

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதாவது,

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத்துறை அமைச்சகம், கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியை தொழில் முனைவோர்களை உருவாக்க ஒதுக்கீடு செய்துள்ளது. தனிப்பட்ட தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், விவசாயிகள், உற்பத்தியாளர்கள், பால் மற்றும் இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் கால்நடை தீவன ஆலைகளை நிறுவ ஊக்குவிப்பதே இந்த நிதியின் முக்கிய நோக்கமாகும். பால் பதப்படுத்துதல் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தரம் மற்றும் சுகாதாரமான பால் பதப்படுத்துதல் வசதிகள், பேக்கேஜ் வசதிகள் அல்லது பால் பதப்படுத்துதல் தொடர்பான பிற செயல்பாடுகளுடன் புதிய அலகுகளை நிறுவுதல் அல்லது ஏற்கனவே உள்ள பால் பதப்படுத்துதல் அலகுகளை வலுப்படுத்துதல் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

 


கரூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்க பலே திட்டங்கள்

 

மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள் உற்பத்தி வணிகர், தொழில் முனைவோர் பின்வரும் பால் பொருட்களின் மதிப்பு கூட்டுதலுக்காக புதிய யூனிட்டுகளை நிறுவுவதற்கும், ஏற்கனவே உள்ள உற்பத்தி அலகுகளை வலுப்படுத்துவதற்கும் கடன் பெறலாம். ஐஸ்கிரீம் அலகு, சீஸ் உற்பத்தி அலகு டெட்ரா பேக்கேஜிங்" வசதிகளுடன் கூடிய அல்ட்ரா ஹைடெம்பரேச்சர் பால் பதப்படுத்தும் அலகு, சுவையூட்டப்பட்ட பால் உற்பத்தி அலகுகள், பால் பவுடர் உற்பத்தி அலகுகள், மோர் தூள் உற்பத்தி அலகுகள், வேறு ஏதேனும் பால் பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டம் உற்பத்தி அலகுகள், இறைச்சி பதப்படுத்துதல் மற்றும் வசதிகளின் மதிப்பு கூட்டல், புதிய இறைச்சி பதப்படுத்தும் பிரிவை நிறுவுவதற்கும், கிராமப்புற, அரை நகர்ப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள செம்மறி ஆடு, வெள்ளாடு, கோழி, பன்றி, எருமை ஆகியவற்றின் இறைச்சி பதப்படுத்தும் வசதிகளை வலுப்படுத்துவதற்கும், தொழில் முனைவோர் இந்த திட்டத்தின் பலனைப் பெறலாம். பெரிய அளவிலான ஒருங்கிணைந்த இறைச்சி பதப்படுத்தும் அலகுகள், கால்நடை தீவன உற்பத்தி அலகுகள், கால்நடை தீவன உற்பத்தி மற்றும் வலுப்படுத்தும் அலகுகளை நிறுவுவதற்கான பலனை தொழில் முனைனோர் பெறலாம். சிறு, நடுத்தர மற்றும் பெரிய கால்நடை தீவன ஆலையை நிறுவுதல், மொத்த கலப்பு ரேஷன் தொகுதி அலகு, கனிம கலவை ஆலை, சைலேஜ் தயாரிக்கும் அலகு வலுப் படுத்தவும், கால்நடை தீவன பரிசோதனை ஆய்வகம் போன்ற இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ளோர் உரிய ஆவணங்கள் மற்றும் விரிவான திட்ட அறிக்கைகளுடன் உதயமித்ரா போர்டலில் பதிவேற்றம் செய்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.


 

கரூர் மாவட்டத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடந்தது. கரூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளான ஓடைகள், குளம் மற்றும் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றின் கறைகளை பலப்படுத்தவும், பழுது ஏற்பட்டுள்ள மதகுகளை பராமரிப்பு மேற்கொள்ளவும், வெள்ள தடுப்புக்காக மணல் மூட்டைகளை தேவையான அளவுக்கு வைத்துக் கொள்ளுதல், பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைப்பதை உறுதி செய்வது, உள்ளிட்டவை குறித்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.



கரூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களை உருவாக்க பலே திட்டங்கள்

 

வெள்ள நீரை வெளியேற்ற தேவையான ஜெனரேட்டர், மோட்டார் மற்றும் பேரிடர் காலங்களில் தேவைப்படும் ஜேசிபி, ரம்பம், பொக்லைன் ஆகியவற்றை இருப்பு வைத்துக் கொள்ளவும், மின்தடை ஏற்பட்டால் உடனே சரி செய்ய ஊழியர்களை வைத்துக் கொள்ளவும், மின்கம்பங்கள், மின்மாற்றிகளை முன்கூட்டியே தணிக்கை செய்து சரி செய்திடவும், வெள்ள காலங்களில் ஆற்றில் வரும் கூடுதல் தண்ணீரின் அளவை கண்காணித்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை தெரியப்படுத்துவதுடன், மழை, வெள்ள காலங்களில் உதவி தேவைப்படுவோர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும், மாவட்ட பேரிடர் மேலாண்மை அவசர உதவி கட்டுப்பாட்டு அறிக்கை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு, உதவி மற்றும் தகவல்களை பெற்றுக் கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், ஊராட்சி வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, தனித்துணை கலெக்டர் சைபுதீன், பேரிடர் மேலாண்மை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!
Patta ; இனிமேல் பட்டா பிரச்சனைகளுக்கு 30 நாட்களில் முற்றுப்புள்ளி !!
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
'சங்கி' பட்டம் ஏன்? எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதிலடி - திருப்பரங்குன்றத்தில் பரபரப்புரை !
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget