மேலும் அறிய

கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்த நிலையில், ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு, 6,000 கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது.

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு வந்த தண்ணீரின் அளவும் குறைந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணை மற்றும் புதிய பாசன வாய்க்காலில் இருந்து, கடந்த ஜூலை மாதம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. பின், கேரள மாநிலம் உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை குறைந்ததால், அமராவதி அணைக்கு எதிர்பார்த்த அளவில் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்த நிலையில், ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு, 6,000 கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது.


கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

காலை 6:00 மணிக்கு அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து, 1,175 கன அடியாக குறைந்தது. இதனால், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 350 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. ஆற்றில் தொடர்ந்து, 800 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணையின் ஷட்டர்கள் மூலம், 15 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 88.06 அடியாக இருந்தது. கடந்த, 15 நாட்களாக திறக்கப்பட்ட தண்ணீர் மூலம், கரூர் மாவட்ட பாசன பகுதிகளில் நெல் உள்ளிட்ட சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. அணை நீர்மட்டம், 80 அடியை தாண்டிய நிலையில் உள்ளதால் மீண்டும், 10 நாட்களுக்குப் பின், அமராவதி அணையில் இருந்து, கூடுதல் தண்ணீர் ஆற்றில் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், ஆற்றில் வந்த தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால், கரூர் அருகே பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 686 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது. மேலும், நகரப் பகுதியான திருமாநிலையூர் பகுதியில் அமராவதி ஆற்றின் கரையோரத்தில் மட்டும், தண்ணீர் சென்றது.

மாயனூர் கதவணைக்கு 26 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து சரிவு

கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, தண்ணீர் வரத்து, 26 ஆயிரம் கன அடியாக குறைந்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு, 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, 26 ஆயிரத்து, 866 கன அடி தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதி குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 25 ஆயிரத்து, 746 கன அடி தண்ணீரும், பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.66 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 215 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.40 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Embed widget