மேலும் அறிய

கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்த நிலையில், ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு, 6,000 கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது.

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு வந்த தண்ணீரின் அளவும் குறைந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணை மற்றும் புதிய பாசன வாய்க்காலில் இருந்து, கடந்த ஜூலை மாதம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டது. பின், கேரள மாநிலம் உள்ளிட்ட நீர் பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை குறைந்ததால், அமராவதி அணைக்கு எதிர்பார்த்த அளவில் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. அமராவதி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்த நிலையில், ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு, 6,000 கன அடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது.


கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

காலை 6:00 மணிக்கு அமராவதி அணைக்கு தண்ணீர் வரத்து, 1,175 கன அடியாக குறைந்தது. இதனால், புதிய பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 350 கன அடியாக தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது. ஆற்றில் தொடர்ந்து, 800 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணையின் ஷட்டர்கள் மூலம், 15 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 88.06 அடியாக இருந்தது. கடந்த, 15 நாட்களாக திறக்கப்பட்ட தண்ணீர் மூலம், கரூர் மாவட்ட பாசன பகுதிகளில் நெல் உள்ளிட்ட சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. அணை நீர்மட்டம், 80 அடியை தாண்டிய நிலையில் உள்ளதால் மீண்டும், 10 நாட்களுக்குப் பின், அமராவதி அணையில் இருந்து, கூடுதல் தண்ணீர் ஆற்றில் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதால், ஆற்றில் வந்த தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால், கரூர் அருகே பெரியாண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 686 கன அடி தண்ணீர் மட்டும் வந்தது. மேலும், நகரப் பகுதியான திருமாநிலையூர் பகுதியில் அமராவதி ஆற்றின் கரையோரத்தில் மட்டும், தண்ணீர் சென்றது.

மாயனூர் கதவணைக்கு 26 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து சரிவு

கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு, தண்ணீர் வரத்து, 26 ஆயிரம் கன அடியாக குறைந்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு, வினாடிக்கு, 65 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு, 26 ஆயிரத்து, 866 கன அடி தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசன பகுதி குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், 25 ஆயிரத்து, 746 கன அடி தண்ணீரும், பாசன கிளை வாய்க்காலில், 1,020 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.


கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, நங்காஞ்சி அணை நீர்மட்டம் தற்போது, 33.66 அடியாக உள்ளது. நங்காஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


கரூர் அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட நீர் திறப்பு குறைப்பு

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 215 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 26.40 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 3 வது கணவர் கொலை !! நாடகமாடிய மனைவி சிக்கியது எப்படி ?
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
அரசு வேலை தேடுபவரா நீங்க? காஞ்சிபுரத்தில் வந்தாச்சு செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க!
அரசு வேலை தேடுபவரா நீங்க? காஞ்சிபுரத்தில் வந்தாச்சு செம சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க!
பாவம் போக்கி வாழ்வளிக்கும்... மனக்குழப்பம் தீர்க்கும், கடன் சுமை தீர்த்து அமைதி தரும் பாபநாசம் சிவஸ்தலம்
பாவம் போக்கி வாழ்வளிக்கும்... மனக்குழப்பம் தீர்க்கும், கடன் சுமை தீர்த்து அமைதி தரும் பாபநாசம் சிவஸ்தலம்

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget