மேலும் அறிய

கரூர்: மழை குறைந்ததால் அமராவதியில் தண்ணீர் வரத்து சரிவு

மாயனூர் கதவனைக்கு வினாடிக்கு 41 ஆயிரம் 37 கனஅடி  வந்தது. மழை குறைந்ததால் பெரியஆண்டாங்கோவில்  தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. 7,673 கன அடியாக நீர் வரத்து குறைந்தது.

அமராவதியில் நீர்வரத்து சரிவு

மழை குறைந்ததால் அமராவதி ஆற்றில் பெரியஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு  காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 2,173 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 88,13 அடியாக இருந்தது. பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு  8,852 கான அடி தண்ணீர் வந்தது. ஆற்றுப்பகுதிகளில் மழை குறைந்ததால் காலை 6 நிலவரப்படி வினாடிக்கு 7,673 கன அடியாக நீர் வரத்து குறைந்தது. 



கரூர்: மழை குறைந்ததால் அமராவதியில் தண்ணீர் வரத்து சரிவு



காவிரி ஆற்றின் மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 41 ஆயிரம் 37 கனஅடி  வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 32 ஆயிரத்து 529 கன அடியாக தண்ணீர் குறைந்தது.  

திண்டுக்கல் மாவட்டம், நங்கஞ்சி அணைக்கு காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 122 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 38.38 அடியாக இருந்தது. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு  காலை 6 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை.  அணையின் நீர்மட்டம் 26.14 அடியாக இருந்தது. கடலூர் அருகே உள்ள பொன்னணி ஆறு அணையின்28.06 அடியாக இருந்தது.

கூடுதல் நீர்வரத்தால் நிரம்பும் தருவாயில் கார்வழி அணை

 



கரூர்: மழை குறைந்ததால் அமராவதியில் தண்ணீர் வரத்து சரிவு

விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்தி கார்வழி அணைக்கு கூடுதல் வரத்து வருகிறது. நீர்வரத்து பொறுத்து ஓரிரு நாட்களில் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் சுற்றுலா பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலிருந்து நொய்யல் ஆறு துவங்குகிறது. சின்ன முத்தூர் என்ற இடத்தில் நொய்யல் ஆற்றில் தடுப்பணை உள்ளது. 

இப்பகுதியில் இருந்து அஞ்சூர் ஊராட்சி கௌதபாளையம் என்ற இடத்தில் கரூர் மாவட்டம் எல்லையை நொய்யல் ஆறு தொடுகிறது. கரூர் ஒன்றியத்தில் சென்று காவையில் கலக்கிறது. இந்த நொய்யல் ஆற்று பாசனத்தை நம்பி சூரியகாந்தி, பருத்தி, நெல், சோளம், கம்பு போன்ற பணப்பயிர்கள் விவசாயிகளின் பயிரிட்டு வந்தனர்.

இந்த சூழ்நிலையில் பரமத்தி ஒன்றியம் கார்வழி ஊராட்சியில் ஆத்துப்பாளையம் அணையில் நொய்யல் நீர் தேக்கம்1980 ம் ஆண்டின் உயரம் 26.9 அடியும் நீளம் 9,350 அடியும் ஆகும். இங்கு 235 மில்லியன் கனஅடி நீரை தேக்க தேவையான கட்டுமான பணிகள் தொடங்கி 1990 ஆம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது.

இந்த அணை மூலம் நொய்யல் ஆற்றில் மழை வெள்ளம் வரும் உபரி நீரை கீழ்பவானி வாய்க்காலில் வரும் கசிவு நீரையும் கார் வழியில் நொய்யல் நீர் தேக்க அணையில் தேக்கி வைத்து வாய்க்கால்கள் மூலம் அஞ்சூர், கார்வழி, துக்காச்சி, தென்னிலை கிழக்கு, அத்திப்பாளையம், குப்பம், புன்னம், ஆகிய ஊராட்சிகள் மற்றும் கரூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் சுமார் 19000 ஏக்கருக்கு மேல் விளைநிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

 



கரூர்: மழை குறைந்ததால் அமராவதியில் தண்ணீர் வரத்து சரிவு

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம், சின்ன முத்தூரில் உள்ள மதகணை திறக்கப்பட்டது. நொய்யல் ஆற்றில் உபரி நீர் அத்திப்பாளையம் அணைக்கு நீர்வரத்து கூடுதலாக வந்து கொண்டு உள்ளதால், நீர்வரத்து பொருத்து எந்த நேரத்திலும் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை அகதியின் வரலாற்று கடல் நீச்சல்: அனுமதி கிடைக்குமா? மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!
40 வழக்குகளில் தொடர்புடைய ‘கில்லாடி’ திருடன் தஞ்சாவூரில் அதிரடி கைது!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget