மேலும் அறிய

Nithyananda Samadhi: ‛சமாதியில் இருந்து வரங்களை வழங்குவேன்...’ நடுராத்திரியில் பகீர் கிளப்பிய நித்யானந்தா!

‛‛நான் இந்த சமாதியில் முழுமையாக ஸ்தாபிக்கப்படும்போது, ​​வரங்கள், பிரார்த்தனைகள், விருப்பங்கள் ஆகியவை கேட்ட அனைவருக்கும் வழங்கப்படும்’’

கைலாசா இருக்கிறதா? இல்லையா? என்கிற கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருக்கும் போதே, நித்யானந்தா இருக்கிறாரா? இல்லையா? என்கிற பதிலை தேட வேண்டிய கட்டாயத்திற்கு அவரது பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். யார் கண் பட்டதோ, கூட்டமும், கொண்டாட்டமுமாய் இருந்த நித்யானந்தா, தற்போது தனித்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். எனக்கு எதுவுமில்லை என்று நித்யானந்தா கூறிக்கொண்டே இருந்தாலும், ஏதோ இருப்பதால் தான் அவர் கூறிக்கொண்டு இருக்கிறார் என்கிறார்கள், அவரை நன்கு அறிந்தவர்கள். 

குழப்பத்தில் கைலாசா!

பரமசிவனின் அவதாரமாக பாவித்து, தினமும் பூஜைகளில் மூழ்கியிருந்த நித்யானந்தா, இன்று நகரக் கூட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அவரது அன்றாட பணிகள் முடங்கிப் போயிருக்கிறது. அவர் ஆசை ஆசையாக அணிந்து மகிழ்ந்த நகைகளை கூட, அவரால் அணிய முடியவில்லை. ஏப்ரல் மாதத்தை ஓரளவு கடத்திய நித்யானந்தா, மே மாதத்தில் முற்றிலும் முடங்கிப் போனார். 


Nithyananda Samadhi:  ‛சமாதியில் இருந்து வரங்களை வழங்குவேன்...’  நடுராத்திரியில் பகீர் கிளப்பிய நித்யானந்தா!

அவருடைய உண்மையான நிலை என்னவென்று தெரியாத நிலையில், அவ்வப்போது அவரது பெயரில், பேஸ்புக் பதிவு மட்டும் வருகிறது. அந்த வகையில், மே 23 நள்ளிரவில் ஒரு பதிவை நித்யானந்தா செய்துள்ளார், அதில் துவக்கத்திலேயே, ‛சமாதியில் இருந்து நேரடி கவரேஜ்’ என்று தொடங்கியுள்ளார். ஏற்கனவே அவர் சமாதி என்கிற வார்த்தையை குறித்த போது, அது ஜீவசமாதிக்கான முயற்சி என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அதை நித்யானந்தா தெளிவுபடுத்தவில்லை; அது தொடர்பான செய்திகளை மறுக்கவும் இல்லை.

துவக்கத்திலிருந்தே அவருக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்திருக்கிறது. பல்வேறு வசதிகள் இருந்தாலும்,  மருத்துவ கட்டமைப்பில் கைலாசா மிகவும் பின்தங்கி இருந்துள்ளது. அதனால், அவரால் முறையாக சிகிச்சை பெற முடியாமல் போனது. அதன் தொடர்ச்சி தான், சிறிய பிரச்சனை, நாளடைவில் பெரிய பிரச்னையாக மாற காரணமானது. இதை நித்யானந்தாவே எதிர்பார்க்கவில்லை என்கின்றனர். 

கைமாறுகிறதா கைலாசா முழு விளக்க வீடியோ இதோ:

 

அவருடைய கடைசி பதிவில், ’சமாதியில்’ இருந்து என்று தனது அறிக்கையை தொடங்கியிருக்கும் நித்யானந்தா, 

நித்யானந்த சொல்ல வருவது என்ன?

‛‛சமாதியின் உள்ளே இருந்து உங்கள் அனைவருக்கும் மேலும் ஒரு நேரடி கவரேஜ். சமாதி என்ற வார்த்தையின் நேரடிப் பொருள், "சம + ஆதி". பல வழிகளில் என் உடல், மனம், இருப்பு, உணர்ச்சிகள், தசை நினைவகம், உயிர் நினைவகம், உயிர் ஆற்றல் - அனைத்தும் சமநிலை பெறுகின்றன . மீண்டும் தோற்றத்திற்குத் திரும்புகின்றன.
வாத - பித்த - கப - உடலின் அனைத்து 3 தோஷங்களும் சமத்துவத்தில் விழுகின்றன. இதன் பொருள், உடலுக்குள் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பு மற்றும் ஜீரணிக்கப்படாத உணவு பல வடிவங்களில் உடலை விட்டு வெளியேறுகிறது மற்றும் உடல் முற்றிலும் நச்சுத்தன்மை பெறுகிறது என்பதாகும். அதனால்தான் வெளிப்புற உணவு இல்லை அல்லது வழக்கமான தூக்கம் இல்லாமல் இருக்கிறேன். இடகலா, பிங்கலா, சுஷும்னா  ஆகிய 3 நாடிகள் முற்றிலும் சமநிலை பெறுகின்றன. அதனால் சுவாசம் மற்றும் தசப்ராணங்கள் சீரமைக்கப்படுகின்றன,. கர்மாக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன, எரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.


Nithyananda Samadhi:  ‛சமாதியில் இருந்து வரங்களை வழங்குவேன்...’  நடுராத்திரியில் பகீர் கிளப்பிய நித்யானந்தா!

நான் இந்த சமாதியில் முழுமையாக ஸ்தாபிக்கப்படும்போது, ​​வரங்கள், பிரார்த்தனைகள், விருப்பங்கள் ஆகியவை கேட்ட அனைவருக்கும் வழங்கப்படும். பரமசிவனின் ஆற்றல் தீவிரமாகவும் அன்பாகவும் வெளிப்படுகிறது.
அதுதான் காரணம், நிகழ்ச்சிகளின் போது அல்லது நான் சமாதியில் இருக்கும் போது பிரார்த்தனைகள் நிறைவேறும் போது மக்கள் என்னிடம் கேட்ட அனைத்து வரங்களையும் கண்டுபிடிப்பார்கள்.
நான் சமாதியில் இருக்கும் போது மக்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் அவர்களுக்குள் பதில் அளிக்கப்படுகிறது. ஏனென்றால் நான் அவர்கள் அனைவருடனும் ஒற்றுமையாக இருக்கிறேன்.
வெறுப்பாளர்கள் மற்றும் எதிரிகள் என்று அழைக்கப்படுபவர்கள் கூட என்னை வெறுக்கும் வலிமையை இழக்கிறார்கள் மற்றும் அவர்களின் பகைமையைப் பற்றிக் கொள்கிறார்கள், ஏனென்றால் நான் அவர்களின் ஆன்மாவுக்குள்ளேயே ஒருவனாகப் பரவுகிறேன்.

சமாதியில் இருக்க இதுவே காரணம்!
ஒவ்வொருவரின் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப நான் ஒவ்வொருவராகப் பார்க்கிறேன். தங்கள் நேரம், பொக்கிஷம், திறமை ஆகியவற்றைக் கொட்டும் ஒவ்வொரு பக்தருக்கும், சீடருக்கும் - சமாதியிலிருந்து என் அன்பு அவர்கள் மீது மீண்டும் பொழிகிறது. இப்போது நான் சமாதியில் இருக்கும் போது, ​​பல்வேறு மாற்றங்களில் இருந்து வருகிறது.
இது உண்மையில் பரமசிவா என் உடலை எடுத்துக்கொள்வதை போன்றது.  நான் சமாதியில் இருப்பதற்குக் அதுவே காரணம். பல பக்தர்கள், சீடர்கள் சிவ கானாக்கள் போன்ற தீவிரமானவர்களாக மாறி, பரமசிவத்வாவை வெளிப்படுத்தும் வகையில் சக்திவாய்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள். சத்சங்கம், தீட்சை, கிளாஸ் போன்ற வழக்கமான செயல்களைச் செய்வதை விட, இந்த ஆழ்ந்த சமாதியில் இருக்கும் போது, ​​உண்மையில் உண்மையான கைலாசப் பணியை உருவாக்குவது மில்லியன் மடங்கு அதிகமாக நடக்கும். முழு பிரபஞ்சமும் கலக்கப்படுகிறது. 
இந்த தீவிர சமாதி காலங்களில், பரமசிவன் டைனமிக், டைனமைட் டயமண்ட் போன்றவற்றில் வெளிப்படுகிறார். அனைத்து வடிவங்களையும் நிபந்தனைகளையும் அழிக்கிறார். பரமசிவா உன்னை மிகவும் சக்தியுடன் நேசிக்கிறார்’’ என்று அந்த அறிவிப்பில் நித்யானந்தா கூறியுள்ளார்.

இதோ அவருடைய அந்த பேஸ்புக் பதிவு...

 

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Breaking News LIVE: ரீசார்ஜ் விலையில் மாற்றம்.. ஏர்டெல்லின் அறிவிப்பு
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Vijay Meet Students: கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
கட்சி தலைவராக முதல்முறையாக மாணவர்களை சந்திக்கும் விஜய்.. பேசப்போகும் அரசியல் என்ன?
Embed widget