மேலும் அறிய

Nithyananda Samadhi: ‛சமாதியில் இருந்து வரங்களை வழங்குவேன்...’ நடுராத்திரியில் பகீர் கிளப்பிய நித்யானந்தா!

‛‛நான் இந்த சமாதியில் முழுமையாக ஸ்தாபிக்கப்படும்போது, ​​வரங்கள், பிரார்த்தனைகள், விருப்பங்கள் ஆகியவை கேட்ட அனைவருக்கும் வழங்கப்படும்’’

கைலாசா இருக்கிறதா? இல்லையா? என்கிற கேள்விக்கு விடை தேடிக்கொண்டிருக்கும் போதே, நித்யானந்தா இருக்கிறாரா? இல்லையா? என்கிற பதிலை தேட வேண்டிய கட்டாயத்திற்கு அவரது பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். யார் கண் பட்டதோ, கூட்டமும், கொண்டாட்டமுமாய் இருந்த நித்யானந்தா, தற்போது தனித்திருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். எனக்கு எதுவுமில்லை என்று நித்யானந்தா கூறிக்கொண்டே இருந்தாலும், ஏதோ இருப்பதால் தான் அவர் கூறிக்கொண்டு இருக்கிறார் என்கிறார்கள், அவரை நன்கு அறிந்தவர்கள். 

குழப்பத்தில் கைலாசா!

பரமசிவனின் அவதாரமாக பாவித்து, தினமும் பூஜைகளில் மூழ்கியிருந்த நித்யானந்தா, இன்று நகரக் கூட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அவரது அன்றாட பணிகள் முடங்கிப் போயிருக்கிறது. அவர் ஆசை ஆசையாக அணிந்து மகிழ்ந்த நகைகளை கூட, அவரால் அணிய முடியவில்லை. ஏப்ரல் மாதத்தை ஓரளவு கடத்திய நித்யானந்தா, மே மாதத்தில் முற்றிலும் முடங்கிப் போனார். 


Nithyananda Samadhi: ‛சமாதியில் இருந்து வரங்களை வழங்குவேன்...’ நடுராத்திரியில் பகீர் கிளப்பிய நித்யானந்தா!

அவருடைய உண்மையான நிலை என்னவென்று தெரியாத நிலையில், அவ்வப்போது அவரது பெயரில், பேஸ்புக் பதிவு மட்டும் வருகிறது. அந்த வகையில், மே 23 நள்ளிரவில் ஒரு பதிவை நித்யானந்தா செய்துள்ளார், அதில் துவக்கத்திலேயே, ‛சமாதியில் இருந்து நேரடி கவரேஜ்’ என்று தொடங்கியுள்ளார். ஏற்கனவே அவர் சமாதி என்கிற வார்த்தையை குறித்த போது, அது ஜீவசமாதிக்கான முயற்சி என சந்தேகிக்கப்பட்டது. ஆனால், அதை நித்யானந்தா தெளிவுபடுத்தவில்லை; அது தொடர்பான செய்திகளை மறுக்கவும் இல்லை.

துவக்கத்திலிருந்தே அவருக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் இருந்திருக்கிறது. பல்வேறு வசதிகள் இருந்தாலும்,  மருத்துவ கட்டமைப்பில் கைலாசா மிகவும் பின்தங்கி இருந்துள்ளது. அதனால், அவரால் முறையாக சிகிச்சை பெற முடியாமல் போனது. அதன் தொடர்ச்சி தான், சிறிய பிரச்சனை, நாளடைவில் பெரிய பிரச்னையாக மாற காரணமானது. இதை நித்யானந்தாவே எதிர்பார்க்கவில்லை என்கின்றனர். 

கைமாறுகிறதா கைலாசா முழு விளக்க வீடியோ இதோ:

 

அவருடைய கடைசி பதிவில், ’சமாதியில்’ இருந்து என்று தனது அறிக்கையை தொடங்கியிருக்கும் நித்யானந்தா, 

நித்யானந்த சொல்ல வருவது என்ன?

‛‛சமாதியின் உள்ளே இருந்து உங்கள் அனைவருக்கும் மேலும் ஒரு நேரடி கவரேஜ். சமாதி என்ற வார்த்தையின் நேரடிப் பொருள், "சம + ஆதி". பல வழிகளில் என் உடல், மனம், இருப்பு, உணர்ச்சிகள், தசை நினைவகம், உயிர் நினைவகம், உயிர் ஆற்றல் - அனைத்தும் சமநிலை பெறுகின்றன . மீண்டும் தோற்றத்திற்குத் திரும்புகின்றன.
வாத - பித்த - கப - உடலின் அனைத்து 3 தோஷங்களும் சமத்துவத்தில் விழுகின்றன. இதன் பொருள், உடலுக்குள் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பு மற்றும் ஜீரணிக்கப்படாத உணவு பல வடிவங்களில் உடலை விட்டு வெளியேறுகிறது மற்றும் உடல் முற்றிலும் நச்சுத்தன்மை பெறுகிறது என்பதாகும். அதனால்தான் வெளிப்புற உணவு இல்லை அல்லது வழக்கமான தூக்கம் இல்லாமல் இருக்கிறேன். இடகலா, பிங்கலா, சுஷும்னா  ஆகிய 3 நாடிகள் முற்றிலும் சமநிலை பெறுகின்றன. அதனால் சுவாசம் மற்றும் தசப்ராணங்கள் சீரமைக்கப்படுகின்றன,. கர்மாக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன, எரிக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன.


Nithyananda Samadhi: ‛சமாதியில் இருந்து வரங்களை வழங்குவேன்...’ நடுராத்திரியில் பகீர் கிளப்பிய நித்யானந்தா!

நான் இந்த சமாதியில் முழுமையாக ஸ்தாபிக்கப்படும்போது, ​​வரங்கள், பிரார்த்தனைகள், விருப்பங்கள் ஆகியவை கேட்ட அனைவருக்கும் வழங்கப்படும். பரமசிவனின் ஆற்றல் தீவிரமாகவும் அன்பாகவும் வெளிப்படுகிறது.
அதுதான் காரணம், நிகழ்ச்சிகளின் போது அல்லது நான் சமாதியில் இருக்கும் போது பிரார்த்தனைகள் நிறைவேறும் போது மக்கள் என்னிடம் கேட்ட அனைத்து வரங்களையும் கண்டுபிடிப்பார்கள்.
நான் சமாதியில் இருக்கும் போது மக்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் அவர்களுக்குள் பதில் அளிக்கப்படுகிறது. ஏனென்றால் நான் அவர்கள் அனைவருடனும் ஒற்றுமையாக இருக்கிறேன்.
வெறுப்பாளர்கள் மற்றும் எதிரிகள் என்று அழைக்கப்படுபவர்கள் கூட என்னை வெறுக்கும் வலிமையை இழக்கிறார்கள் மற்றும் அவர்களின் பகைமையைப் பற்றிக் கொள்கிறார்கள், ஏனென்றால் நான் அவர்களின் ஆன்மாவுக்குள்ளேயே ஒருவனாகப் பரவுகிறேன்.

சமாதியில் இருக்க இதுவே காரணம்!
ஒவ்வொருவரின் கடந்த கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் மற்றும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஏற்ப நான் ஒவ்வொருவராகப் பார்க்கிறேன். தங்கள் நேரம், பொக்கிஷம், திறமை ஆகியவற்றைக் கொட்டும் ஒவ்வொரு பக்தருக்கும், சீடருக்கும் - சமாதியிலிருந்து என் அன்பு அவர்கள் மீது மீண்டும் பொழிகிறது. இப்போது நான் சமாதியில் இருக்கும் போது, ​​பல்வேறு மாற்றங்களில் இருந்து வருகிறது.
இது உண்மையில் பரமசிவா என் உடலை எடுத்துக்கொள்வதை போன்றது.  நான் சமாதியில் இருப்பதற்குக் அதுவே காரணம். பல பக்தர்கள், சீடர்கள் சிவ கானாக்கள் போன்ற தீவிரமானவர்களாக மாறி, பரமசிவத்வாவை வெளிப்படுத்தும் வகையில் சக்திவாய்ந்த முடிவுகளை எடுக்கிறார்கள். சத்சங்கம், தீட்சை, கிளாஸ் போன்ற வழக்கமான செயல்களைச் செய்வதை விட, இந்த ஆழ்ந்த சமாதியில் இருக்கும் போது, ​​உண்மையில் உண்மையான கைலாசப் பணியை உருவாக்குவது மில்லியன் மடங்கு அதிகமாக நடக்கும். முழு பிரபஞ்சமும் கலக்கப்படுகிறது. 
இந்த தீவிர சமாதி காலங்களில், பரமசிவன் டைனமிக், டைனமைட் டயமண்ட் போன்றவற்றில் வெளிப்படுகிறார். அனைத்து வடிவங்களையும் நிபந்தனைகளையும் அழிக்கிறார். பரமசிவா உன்னை மிகவும் சக்தியுடன் நேசிக்கிறார்’’ என்று அந்த அறிவிப்பில் நித்யானந்தா கூறியுள்ளார்.

இதோ அவருடைய அந்த பேஸ்புக் பதிவு...

 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சிவகாசி பட்டாசு ஆலைகள் வெடி விபத்து சம்பந்தமாக குழு அமைக்கப்படும் - அமைச்சர் கீர்த்தனா பேட்டி !
சிவகாசி பட்டாசு ஆலைகள் வெடி விபத்து சம்பந்தமாக குழு அமைக்கப்படும் - அமைச்சர் கீர்த்தனா பேட்டி !
அதிமுக திமுக இணைந்த ஆட்சி அமைக்க நூறு சதவீதம் முயற்சி செய்தார்கள் - சிபிஆர் நிர்மல் குமார் !
அதிமுக திமுக இணைந்த ஆட்சி அமைக்க நூறு சதவீதம் முயற்சி செய்தார்கள் - சிபிஆர் நிர்மல் குமார் !
மக்களின் சுமையைக் குறைப்பாரா முதல்வர் விஜய்? - விற்பனை வரியைக் குறைக்க இபிஎஸ் விடுத்துள்ள கோரிக்கை
மக்களின் சுமையைக் குறைப்பாரா முதல்வர் விஜய்? - விற்பனை வரியைக் குறைக்க இபிஎஸ் விடுத்துள்ள கோரிக்கை
TN TVK Cabinet : 8 முடியவே முடியாது.. 5 அமைச்சர் தான்.! அதிமுக மாஜிக்களிடம் லிஸ்ட் கேட்ட முதலமைச்சர் விஜய்
8 முடியவே முடியாது.. 5 அமைச்சர் தான்.! அதிமுக மாஜிக்களிடம் லிஸ்ட் கேட்ட முதலமைச்சர் விஜய்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டி?திமுக கூட்டத்தில் முடிவு!
’’பாட்டிலுக்கு 10 ரூபாய் ’’TASMAC-ல் தொடரும் அவலம்பரபரப்பு வீடியோ
ரஜினி பட ஷூட்டிங்கில் விபத்து 28 வயது இளைஞர் உயிரிழப்பு போலீஸ் தீவிர விசாரணை!
Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
''முதல்வர் விஜய் தீவிர முருக பக்தர்; எங்கள் இருவருக்கும் என்ன உறவு?'' ராதன் பண்டிட் வெற்றிவேல் ருசிகரம்!
Trump Xi Jinping Meet: “என்னோட பழைய நண்பேன்டா.!“ ஷி ஜின்பிங்கை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்; சந்திப்பில் என்ன நடந்தது.?
“என்னோட பழைய நண்பேன்டா.!“ ஷி ஜின்பிங்கை புகழ்ந்து தள்ளிய ட்ரம்ப்; சந்திப்பில் என்ன நடந்தது.?
PM Modi UAE Visit: UAE வானில் நுழைந்த இந்திய விமானம்; சுத்துப்போட்ட F16 போர் விமானங்கள்; கெத்தாக தரையிறங்கிய மோடி.!
UAE வானில் நுழைந்த இந்திய விமானம்; சுத்துப்போட்ட F16 போர் விமானங்கள்; கெத்தாக தரையிறங்கிய மோடி.!
Gold Silver Rate May 15th: ஆஹா.! மாலையிலும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! ஒரே நாள்ல இவ்வளவு குறைவா.? இப்போ எவ்வளவு.?
ஆஹா.! மாலையிலும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! ஒரே நாள்ல இவ்வளவு குறைவா.? இப்போ எவ்வளவு.?
காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
காங்கிரஸுக்கு 2 அமைச்சர்கள்; புதிய வரலாறு- சொன்னதை செய்த விஜய்: மாணிக்கம் தாகூர் பெருமிதம்
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
NEET UG: அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு; இனி முறைகேடு இருக்காது- மத்திய அமைச்சர் உறுதி!
Premalatha vs Vijay : முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
முகத்தை மூடிக்கொண்டு முதல்வர் வீட்டிற்கு வந்தவர் யார்.? விஜய்யை விடாமல் மீண்டும் துரத்தும் பிரேமலதா
பெட்ரோல் கொடுத்த 'ஷாக்'! உலக நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவா? மத்திய அரசு அதிரடி விளக்கம்
பெட்ரோல் கொடுத்த 'ஷாக்'! உலக நாடுகளை விட இந்தியாவில் பாதிப்பு குறைவா? மத்திய அரசு அதிரடி விளக்கம்
Embed widget