மேலும் அறிய

2022ஆம் ஆண்டு தொடங்கிய 16 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 75,296 புதிய வாகனங்கள் பதிவு

’’தமிழகத்தில் கடந்த ஆண்டு மட்டும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் 15,14,857 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன; கடந்த 2020ஆம் ஆண்டுடன் இதை ஒப்பிடும் போது 1.52% அதிகம்’’

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் தமிழகத்தில் கடந்த ஆண்டு பல்வேறு பிரிவுகளின் கீழ் 15,14,857 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.52% அதிகமாகும். நாடு முழுவதும் புதிய வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் 2,91,58,120 வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.

இதனால் சாலைகளில் வாகன நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பிற பகுதிகளை விட தமிழகத்தில் முக்கிய நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் நெரிசல் மிக அதிகமாக இருக்கிறது. இருப்பினும் வாகனங்களின் மீதான மோகம், மக்களிடத்தில் குறையவில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் மாதந்தோறும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு வந்தன. இதற்கிடையில் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவத்தொடங்கியது.


2022ஆம் ஆண்டு தொடங்கிய 16 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 75,296 புதிய வாகனங்கள் பதிவு

தமிழகத்தில்  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் ஒருபகுதியாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் அத்தியாவசிய பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் அதிக அளவில் வெளியில் வருவது தடுக்கப்பட்டது. அதேநேரம் பொதுமக்களுக்கு தேவையான உயர்தரமான சிகிச்சையும் அளிக்கபட்டு வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கின்போது புதிய வாகனங்களை விற்பனை செய்யும் ஷோரூம்கள் இயங்கவில்லை. பிறகு கொரோனா பரவல் மெல்ல, மெல்ல குறையத்தொடங்கியது. இதையடுத்து தமிழக அரசு முழு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை வழங்கியது. இதன் அடிப்படையில் புதிய வாகனங்களை விற்பனை செய்யும் ஷோரூம்கள் மீண்டும் இயங்க தொடங்கின. இருப்பினும் விற்பனை குறைவாகவே இருந்தது. அதாவது கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த மே, ஜூன் மாதங்களில் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகவில்லை என்றனர்.


2022ஆம் ஆண்டு தொடங்கிய 16 நாட்களில் தமிழகத்தில் மட்டும் 75,296 புதிய வாகனங்கள் பதிவு

அதனை தொடர்ந்து ஜூலை முதல் மீண்டும் வாகன விற்பனை இயல்பு நிலைக்கு திரும்பியது. இதன் விளைவாக கடந்த ஆண்டு 15,14,857 வாகனங்கள் ஒட்டுமொத்தமாக புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.52 சதவீதம் அதிகமாகும். 2020 ஆம் ஆண்டில் 14,92,244 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தற்போது தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மூன்றாவது அலையினால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஒருவேளை பாதிப்பு அதிகரித்து, முன்பைப்போல் ஊரடங்கு மேலும் தீவிரமாக கடைபிடிக்கப்படும் பட்சத்தில் வாகன விற்பனை சரிவடைய வாய்ப்புள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக புத்தாண்டு,க் பொங்கல் நேரங்களில் புதிதாக வாகனத்தை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டுவார்கள். இதனால் நடப்பு ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்து வாகன விற்பனை அதிகமாக இருந்தது. கடந்த 16ஆம் தேதி நிலவரப்படி மாநிலம் முழுவதும் உள்ள ஆர்டிஓ அலுவலகங்களில் 75,296 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget