மேலும் அறிய

தூத்துக்குடி : வசவப்பபுரம் பரம்பு பகுதியில் முதுமக்கள் தாழிகள் உட்பட பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

வசவப்பபுரம் பரம்பில் முதுமக்கள் தாழிகள், பழங்கால பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. முழுமையாக அகழாய்வு செய்ய தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்

தமிழக தொல்லியல் துறை சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை ஆகிய இடங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி முதல் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் பரம்பு பகுதியில் மண்ணுக்குள் புதைந்துள்ள ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால பொருட்கள் வெளியே தெரிய வந்துள்ளன.இந்த கிராமத்தில் பெரிய பரம்பு பகுதி உள்ளது. இந்த பரம்பு பகுதியில் கடந்த ஆண்டு சாலை பணிக்காக ஜேசிபி மூலம் மணல் எடுத்துள்ளனர். அப்போது மணலுக்கு அடியில் புதையுண்ட முதுமக்கள் தாழிகள், மண் பாண்டங்கள் வெளியே தெரிந்துள்ளது. அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது சில நாட்களாக பெய்த மழை காரணமாக அந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக வெளியே தெரியவந்துள்ளது.

இந்த பரம்பு பகுதியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் மண்ணில் புதைந்த நிலையில் உள்ளன. இந்த தாழிகளுக்குள் விதவிதமான ஜாடிகள் உள்ளிட்ட பல்வேறு மண்பாண்ட பொருட்கள் காணப்படுகின்றன. மேலும், இரும்பு ஆயுதங்கள், விளக்கு தூபம் உள்ளிட்ட பொருட்களும் காணப்படுகின்றன. இது குறித்து வசவப்பபுரம் கிராம மக்கள் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் இன்று இந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இது குறித்து தொல்லியல் ஆர்வலரான எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறும்போது, தாமிரபரணி கரையோரம் மொத்தம் 37 இடங்களில் தொல்பொருள் ஆய்வு நடத்தப்பட வேண்டும். ஆதிச்சநல்லூர், சிவகளையில் இரண்டாம் கட்ட ஆய்வும், கொற்கையில் முதல் கட்ட ஆய்வும் நடத்தப் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதுபோல தாமிரபரணி கரையில் அலெக்ஸாண்டர் இரியா அடையாளம் கண்ட தொல்லியல் தலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அறிவித்து, அதற்கான நிதி ஒதுக்கீடும், அதிகாரி நியமனமும் செய்துள்ளனர்.

ஆனால் தொடர்ந்து ஏற்பட்ட கொரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த பணிகள் தடைப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வரும் செப்டம்பர் மாதம் வரை அகழாய்வு செய்ய மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே முதல் கட்டமாக வசவப்பபுரம் பரம்பு பகுதியை ஆய்வாளர்கள் ஆய்வு செய்து முறையான அறிக்கை அளித்து, அடுத்த நிதியாண்டில் இங்கும் அகழாய்வு செய்ய தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்றார்

 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ.. குடும்பத்தினர் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க...
மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ.. குடும்பத்தினர் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க...
Rajasthan Hospital: யார்ரா நீங்க? குழம்பிய அரசு மருத்துவர்கள் - மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவை சிகிச்சை - ஷாக்கில் குடும்பம்
Rajasthan Hospital: யார்ரா நீங்க? குழம்பிய அரசு மருத்துவர்கள் - மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவை சிகிச்சை - ஷாக்கில் குடும்பம்
TN Cabinet: ரூ.10,000 கோடி முதலீடு, ஸ்டார்ட்-அப்களுக்கு ஜாக்பாட் - 50% மானியம், ரூ.300 கோடி பேக்கேஜ்
TN Cabinet: ரூ.10,000 கோடி முதலீடு, ஸ்டார்ட்-அப்களுக்கு ஜாக்பாட் - 50% மானியம், ரூ.300 கோடி பேக்கேஜ்
Moolakaraipatti SIPCOT: நெல்லை மக்களே ரெடியா..! இடம் கிடைச்சிருச்சு - மூலக்கரைப்பட்டி சிப்காட் எங்கு அமைகிறது தெரியுமா?
Moolakaraipatti SIPCOT: நெல்லை மக்களே ரெடியா..! இடம் கிடைச்சிருச்சு - மூலக்கரைப்பட்டி சிப்காட் எங்கு அமைகிறது தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP ADMK Alliance: 100 தொகுதி வேணும்.. ஆட்டம் காட்டும் அண்ணாமலை! குழப்பத்தில் இபிஎஸ் | EPS | TNADMK BJP Alliance: ”வருங்கால முதல்வரே” காலரை தூக்கும் நயினார் நாகேந்திரன்! எடப்பாடியை சீண்டும் பாஜகTTV Dhinakaran with ADMK: மீண்டும் அதிமுகவில் டிடிவி? மனம் மாறிய இபிஎஸ்! பாஜக பக்கா ஸ்கெட்ச்Seeman vs Sattai durai murugan: பாஜகவில் இணையும் சாட்டை? சீமானுக்கு டாடா! அதிர்ச்சியில் நாதகவினர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ.. குடும்பத்தினர் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க...
மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ.. குடும்பத்தினர் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க...
Rajasthan Hospital: யார்ரா நீங்க? குழம்பிய அரசு மருத்துவர்கள் - மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவை சிகிச்சை - ஷாக்கில் குடும்பம்
Rajasthan Hospital: யார்ரா நீங்க? குழம்பிய அரசு மருத்துவர்கள் - மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவை சிகிச்சை - ஷாக்கில் குடும்பம்
TN Cabinet: ரூ.10,000 கோடி முதலீடு, ஸ்டார்ட்-அப்களுக்கு ஜாக்பாட் - 50% மானியம், ரூ.300 கோடி பேக்கேஜ்
TN Cabinet: ரூ.10,000 கோடி முதலீடு, ஸ்டார்ட்-அப்களுக்கு ஜாக்பாட் - 50% மானியம், ரூ.300 கோடி பேக்கேஜ்
Moolakaraipatti SIPCOT: நெல்லை மக்களே ரெடியா..! இடம் கிடைச்சிருச்சு - மூலக்கரைப்பட்டி சிப்காட் எங்கு அமைகிறது தெரியுமா?
Moolakaraipatti SIPCOT: நெல்லை மக்களே ரெடியா..! இடம் கிடைச்சிருச்சு - மூலக்கரைப்பட்டி சிப்காட் எங்கு அமைகிறது தெரியுமா?
RCB Vs PBKS: சிஎஸ்கே நிலை தான் மும்பைக்கும் - உள்ளூரில் சிக்கி தவிக்கும் ஆர்சிபி, மாஸ் காட்டுமா பஞ்சாப்?
RCB Vs PBKS: சிஎஸ்கே நிலை தான் மும்பைக்கும் - உள்ளூரில் சிக்கி தவிக்கும் ஆர்சிபி, மாஸ் காட்டுமா பஞ்சாப்?
ADMK BJP Alliance : “வெளியான Report – கலக்கத்தில் திமுக” ComeBack அதிமுக – பாஜக பூஸ்டில் EPS..!
“வெளியான Report – கலக்கத்தில் திமுக” ComeBack அதிமுக – பாஜக பூஸ்டில் EPS..!
ADMK vs BJP: ”வருங்கால முதல்வரே”  காலரை தூக்கும் நயினார்  எடப்பாடியை சீண்டும் பாஜக
ADMK vs BJP: ”வருங்கால முதல்வரே” காலரை தூக்கும் நயினார் எடப்பாடியை சீண்டும் பாஜக
Waqf Amendment: வக்பு சட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி.. இடைக்கால உத்தரவு என்ன தெரியுமா.?
வக்பு சட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி.. இடைக்கால உத்தரவு என்ன தெரியுமா.?
Embed widget