மேலும் அறிய

பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்

தீபாவளி முடிந்து மதுரையில் இருந்து கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்ற பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

தீபாவளி பண்டிகை முடிந்து திருப்பூர் கோயம்புத்தூர் செல்ல போதிய பேருந்துகள் இல்லாத நிலையில்  சுற்றுலா வாகனங்கள் பயணிகள் பேருந்துகளாக மாற்றம் மதுரையில் இருந்து கோயம்புத்தூருக்கு 500 ரூபாய் கட்டணம் விதிப்பு பயணிகள் அவதி.
 
தென் மாவட்டங்களில் குவிந்த பொதுமக்கள்  
 
தீபாவளி என்பது ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும், நடப்பாண்டில் கடந்த வியாழக்கிழமை தீபாவளி வந்ததை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது. இதன்காரணமாக வார இறுதியுடன் சேர்த்து, மொத்தமாக நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அமைந்துள்ளது.
 
இதனை கொண்டாடும் விதமாக, சென்னையில் இருந்து மட்டுமே லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். தென்மாவட்டங்களில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி, நெல்லை என பல்வேறு மாவட்டங்களுக்கும் மக்கள் படையெடுத்தனர். தென் மாவட்டங்களில் முக்கிய பகுதியாக விளங்கும் மதுரையில் அதிகளவு கூட்டத்தை பார்க்க முடிந்தது.
 
 
மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் கட்டணம்
 
தீபாவளி பண்டிகை விடுமுறை நான்கு நாட்கள் முடிவடைந்து, மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பயணிகளுக்கு போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
 
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சுற்றுலா பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்களை பயணிகள் வாகனங்களாக மாற்றப்பட்டு 170 ரூபாய் கட்டணத்திற்கு பதிலாக 500 ரூபாய் கட்டணம் வசூலித்து வாகனங்கள் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். போதிய அரசு பேருந்துகள் இல்லாத நிலையில் தனியார் வாகனங்கள் சட்டவிரோதமாக அதிக கட்டணங்களை வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். பேருந்துகள் இல்லாத நிலையில் திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.
 
 
நிரம்பி வழியும் பேருந்துகள்:
 
பேருந்து நிறுத்தத்தில் போதிய இடம் இல்லாத நிலையில் சாலையோரத்தில் நீண்ட நேரமாக பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் கால்கடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறி பேருந்து நிலையங்களுக்குள்ளே வராமல் வெளியில் இருந்தபடியே சென்றதால், பேருந்து நிலையத்தில் இருக்கக்கூடிய பயணிகள் ஒவ்வொரு பேருந்துகளிலும் சென்று ஏறிய பின்பாக பின்னர் ஏமாற்றத்துடன் இறக்கி விடும் நிலை ஏற்படுகிறது. எல்லா பேருந்தும் நிரம்பி வருகிறது 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கிறோம், பேருந்துகளில் போதியளவு இடமில்லை, அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? என்று தெரியவில்லை என பயணிகள் புலம்பினர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget