மேலும் அறிய

பெருந்தொற்றின் அவலம் : கொரோனா மரணங்களால் ராக்கெட் வேகத்தில் உயரும் மாட்டு சாண வறட்டிகள்..

இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கு மாட்டுச்சாணத்தின் வறட்டியை பயன்படுத்தி வந்தநிலையில் தற்போது கொரோனா மரணங்களால் திருவண்ணாமலையில ராக்கெட் வேகத்தில் விலை உயர்வை கண்டுள்ளது மாட்டு சாணவறட்டிகள்.

திருவண்ணாமலையில் சமுத்திரம் காலனி, வேட்டவலம் ரோடு திண்டிவனம் சாலை ,போன்ற இடங்களில் மட்டும் மாட்டு சாணத்தின் வரட்டி பெரும் அளவில் விற்கப்படுகின்றது.  கிராமப்பகுதியில் இருந்து மாடு வைத்திருப்பவர்கள் சாணியை வறட்டி தட்டி காயவைத்து அதன் பின்னர் திருவண்ணாமலையில் வரட்டி சாணம் வியாபாரம் செய்பவர்களிடத்தில்  வரட்டிகளை ஒன்று 1 ரூபாய் என்னும் விகிதத்தில் விற்பனை செய்து வந்தனர். இறந்தவரின் உடலைகளை எரிப்பதற்கு வியாபாரிகளிடம் இருந்து இறந்தவர்களின் உறவினர்கள் தற்போது அதிக அளவில்  வறட்டிகளை வாங்குவதால் வறட்டிகளுக்கு பெருமளவில் தேவை கூடியிருக்கிறது.

பெருந்தொற்றின் அவலம் : கொரோனா மரணங்களால் ராக்கெட் வேகத்தில் உயரும் மாட்டு சாண வறட்டிகள்..

தற்சமயம் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை  29622 நபர்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மாவட்டத்தில் இதுவரை  340 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி இயற்கையான மரணங்கள் , விபத்து என்று திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 17-இல் இருந்து 20 உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்கள் இறந்து அவர்களின் உடல்கள் அருகில் உள்ள ஈசான்ய தகனமேடையில்' எரிக்கப்பட்டு வந்த நிலையில், தகனமேடை தற்போது பழுதாகி உள்ளது. அதனால் சாண வறட்டி மூலம் எரிப்பது தகனமேடையை வீட கூடுதல் செலவு ஆகிறது

சமுகசேவகர் P மணிமாறனிடம் கேட்டறிந்தபோது,

“திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பில் ஈசானிய லிங்கம் அருகே நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த தகன மேடையில் திருவண்ணாமலை நகராட்சியில் இருந்து சடலங்களை எரிப்பதற்காக அதிக அளவில் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தகனமேடை சமீபகாலமாக பழுதாகி உள்ளது. சடலம் எரியூட்டப்படும் கல்லானது உடைந்த நிலையிலும், தொழில்நுட்ப கோளாறும்  ஏற்பட்டுள்ளதால் சடலங்களை எரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தகனமேடை பழுதாகி உள்ளதால்  எரியூட்ட வரும் சடலங்களை  தகன மேடை பகுதிக்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் சடலங்களை எரியூட்டப்படுகிறது. எரிவாயு தகனமேடை பழுதடைந்துள்ளதால் சடலங்களை எடுத்துவருபவர்களே சாண வறட்டி வாங்கிவந்து கொடுக்க வேண்டும். அதன் பின்புதான் சடலங்கள் எரிக்கப்படுகிறது. எரிவாயு தகன மேடை செயல்பட்டுவந்தபோது ஒரு நாளைக்கு 15-இல் இருந்து 20 சடலங்கள் வரை எரியூட்டப்பட்டது. ஆனால் இப்போது தகனமேடை பழுதானதால் குறைந்த அளவே சடலங்கள் எரிக்கப்படுகிறது. அதிக அளவில் உயிரிழப்புகள் உள்ளதால் திருவண்ணாமலையில் உள்ள 5 இடுகாடுகளில் இறந்தவரின் உடல் எரிப்பதற்கு நிறைந்து வருகிறது அதாலால் விரைவில் எரிவாயுவு தகன மேடை விரைவில்சரி செய்யவேண்டும் எனவும்  புதியதாக  மற்றொரு இடத்தில் நவீன முறையில்  எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

 

பெருந்தொற்றின் அவலம் : கொரோனா மரணங்களால் ராக்கெட் வேகத்தில் உயரும் மாட்டு சாண வறட்டிகள்..

நல்லடக்கம் செய்யும் பணியாளர் செல்வத்திடம் தொடர்பு கொண்டு பேசியபோது, 

திருவண்ணாமலையில் 5 மயானங்கள் உள்ளது மாரியம்மன் கோயில் தெரு, தேனிமலை, வேங்கிகால், கிரிவலப்பாதையிலும்  உள்ள மயானங்களில் அதிக அளவில் ஒரு நாளைக்கு 10-இல் இருந்து 15 வரை சடலங்கள். தற்போது உடல்களை எரிப்பதற்கு சாண வரட்டி திருவண்ணாமலை நகர் பகுதியில் வேட்டவலம் ரோடு திண்டிவனம் சாலை, சமுத்திர காலனி போன்ற பகுதியில் உள்ள வியாபாரிகளிடமிருந்து ஒரு வறட்டி 2 ரூபாய்க்கு  பெறப்பட்டு உடலை எரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2-வது அலை  கொரோனா  மற்றும் இயற்கையான மரணங்கள் போன்றவைகள் அதிகரித்துவந்த நிலையில் வியாபாரிகளிடம் எரிப்பதற்கு சாண வரட்டி கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் கிராமப் பகுதியில் சாண வரட்டி எட்டு ரூபாயிலிருந்து பத்து ரூபாய்க்கு வாங்கி வரப்பட்டு எரிக்கப்படுகிறது இதில் ஒருவரின் உடலை எரிப்பதற்கு 300 முதல் 500 வரை வறட்டி தேவைப்படுகிறது. இதனால் தற்போது ஒரு உடலை எரிப்பதற்கு  ஐந்தாயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. 

 

பெருந்தொற்றின் அவலம் : கொரோனா மரணங்களால் ராக்கெட் வேகத்தில் உயரும் மாட்டு சாண வறட்டிகள்..

கொரோனா காலத்தில்  இதே நிலைமை தொடர்ந்து ஏற்பட்டால் உயிரிழப்புக்கள்  ஏற்பட்டால் அடுத்தபடியாக மரங்களை வெட்டி உடல்களை எரிக்கும் நிலைமை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி
’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் -  வாக்காளர்களை கவர புது வியூகம்
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் - வாக்காளர்களை கவர புது வியூகம்
கோவையில் மறு தேர்தல்..? -  அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
கோவையில் மறு தேர்தல்..? - அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!
Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vadakan Teaser  : ”பூரா வடக்கனுகளையும் துரத்தனும்”பற்ற வைத்த பாஸ்கர் சக்தி VADAKKAN டீசர் சர்ச்சைIPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கைRathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி
’எனக்கு ஏன் வாக்கு இல்லை?’ வாக்களித்த மையுடன் போராடிய அண்ணாமலை ஆதரவாளர்கள் - நெட்டிசன்கள் கேலி
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் -  வாக்காளர்களை கவர புது வியூகம்
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் - வாக்காளர்களை கவர புது வியூகம்
கோவையில் மறு தேர்தல்..? -  அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
கோவையில் மறு தேர்தல்..? - அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!
Neeya Naana: பொது இடத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் பாணியில் இளைஞர்கள் அட்டகாசம்: நீயா நானாவில் இந்த வார டாப்பிக்!
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Shruti Haasan: காதலரை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்த ஸ்ருதி ஹாசன்.. சாந்தனு ஹசாரிகாவுடன் ப்ரேக்-அப்பா?
Shruti Haasan: காதலரை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்த ஸ்ருதி ஹாசன்.. சாந்தனு ஹசாரிகாவுடன் ப்ரேக்-அப்பா?
Kerala Lok Sabha Election 2024: கேரளாவில் நாளை  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; தேர்தல்  பணிகள் தீவிரம்
கேரளாவில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; தேர்தல் பணிகள் தீவிரம்
Embed widget