மேலும் அறிய

பெருந்தொற்றின் அவலம் : கொரோனா மரணங்களால் ராக்கெட் வேகத்தில் உயரும் மாட்டு சாண வறட்டிகள்..

இறந்தவர்களின் உடலை எரிப்பதற்கு மாட்டுச்சாணத்தின் வறட்டியை பயன்படுத்தி வந்தநிலையில் தற்போது கொரோனா மரணங்களால் திருவண்ணாமலையில ராக்கெட் வேகத்தில் விலை உயர்வை கண்டுள்ளது மாட்டு சாணவறட்டிகள்.

திருவண்ணாமலையில் சமுத்திரம் காலனி, வேட்டவலம் ரோடு திண்டிவனம் சாலை ,போன்ற இடங்களில் மட்டும் மாட்டு சாணத்தின் வரட்டி பெரும் அளவில் விற்கப்படுகின்றது.  கிராமப்பகுதியில் இருந்து மாடு வைத்திருப்பவர்கள் சாணியை வறட்டி தட்டி காயவைத்து அதன் பின்னர் திருவண்ணாமலையில் வரட்டி சாணம் வியாபாரம் செய்பவர்களிடத்தில்  வரட்டிகளை ஒன்று 1 ரூபாய் என்னும் விகிதத்தில் விற்பனை செய்து வந்தனர். இறந்தவரின் உடலைகளை எரிப்பதற்கு வியாபாரிகளிடம் இருந்து இறந்தவர்களின் உறவினர்கள் தற்போது அதிக அளவில்  வறட்டிகளை வாங்குவதால் வறட்டிகளுக்கு பெருமளவில் தேவை கூடியிருக்கிறது.

பெருந்தொற்றின் அவலம் : கொரோனா மரணங்களால் ராக்கெட் வேகத்தில் உயரும் மாட்டு சாண வறட்டிகள்..

தற்சமயம் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை  29622 நபர்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் மாவட்டத்தில் இதுவரை  340 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி இயற்கையான மரணங்கள் , விபத்து என்று திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு நாளைக்கு 17-இல் இருந்து 20 உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்கள் இறந்து அவர்களின் உடல்கள் அருகில் உள்ள ஈசான்ய தகனமேடையில்' எரிக்கப்பட்டு வந்த நிலையில், தகனமேடை தற்போது பழுதாகி உள்ளது. அதனால் சாண வறட்டி மூலம் எரிப்பது தகனமேடையை வீட கூடுதல் செலவு ஆகிறது

சமுகசேவகர் P மணிமாறனிடம் கேட்டறிந்தபோது,

“திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பில் ஈசானிய லிங்கம் அருகே நவீன எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த தகன மேடையில் திருவண்ணாமலை நகராட்சியில் இருந்து சடலங்களை எரிப்பதற்காக அதிக அளவில் கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தகனமேடை சமீபகாலமாக பழுதாகி உள்ளது. சடலம் எரியூட்டப்படும் கல்லானது உடைந்த நிலையிலும், தொழில்நுட்ப கோளாறும்  ஏற்பட்டுள்ளதால் சடலங்களை எரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தகனமேடை பழுதாகி உள்ளதால்  எரியூட்ட வரும் சடலங்களை  தகன மேடை பகுதிக்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் சடலங்களை எரியூட்டப்படுகிறது. எரிவாயு தகனமேடை பழுதடைந்துள்ளதால் சடலங்களை எடுத்துவருபவர்களே சாண வறட்டி வாங்கிவந்து கொடுக்க வேண்டும். அதன் பின்புதான் சடலங்கள் எரிக்கப்படுகிறது. எரிவாயு தகன மேடை செயல்பட்டுவந்தபோது ஒரு நாளைக்கு 15-இல் இருந்து 20 சடலங்கள் வரை எரியூட்டப்பட்டது. ஆனால் இப்போது தகனமேடை பழுதானதால் குறைந்த அளவே சடலங்கள் எரிக்கப்படுகிறது. அதிக அளவில் உயிரிழப்புகள் உள்ளதால் திருவண்ணாமலையில் உள்ள 5 இடுகாடுகளில் இறந்தவரின் உடல் எரிப்பதற்கு நிறைந்து வருகிறது அதாலால் விரைவில் எரிவாயுவு தகன மேடை விரைவில்சரி செய்யவேண்டும் எனவும்  புதியதாக  மற்றொரு இடத்தில் நவீன முறையில்  எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

 

பெருந்தொற்றின் அவலம் : கொரோனா மரணங்களால் ராக்கெட் வேகத்தில் உயரும் மாட்டு சாண வறட்டிகள்..

நல்லடக்கம் செய்யும் பணியாளர் செல்வத்திடம் தொடர்பு கொண்டு பேசியபோது, 

திருவண்ணாமலையில் 5 மயானங்கள் உள்ளது மாரியம்மன் கோயில் தெரு, தேனிமலை, வேங்கிகால், கிரிவலப்பாதையிலும்  உள்ள மயானங்களில் அதிக அளவில் ஒரு நாளைக்கு 10-இல் இருந்து 15 வரை சடலங்கள். தற்போது உடல்களை எரிப்பதற்கு சாண வரட்டி திருவண்ணாமலை நகர் பகுதியில் வேட்டவலம் ரோடு திண்டிவனம் சாலை, சமுத்திர காலனி போன்ற பகுதியில் உள்ள வியாபாரிகளிடமிருந்து ஒரு வறட்டி 2 ரூபாய்க்கு  பெறப்பட்டு உடலை எரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2-வது அலை  கொரோனா  மற்றும் இயற்கையான மரணங்கள் போன்றவைகள் அதிகரித்துவந்த நிலையில் வியாபாரிகளிடம் எரிப்பதற்கு சாண வரட்டி கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் நாங்கள் கிராமப் பகுதியில் சாண வரட்டி எட்டு ரூபாயிலிருந்து பத்து ரூபாய்க்கு வாங்கி வரப்பட்டு எரிக்கப்படுகிறது இதில் ஒருவரின் உடலை எரிப்பதற்கு 300 முதல் 500 வரை வறட்டி தேவைப்படுகிறது. இதனால் தற்போது ஒரு உடலை எரிப்பதற்கு  ஐந்தாயிரம் ரூபாய் செலவிடப்படுகிறது. 

 

பெருந்தொற்றின் அவலம் : கொரோனா மரணங்களால் ராக்கெட் வேகத்தில் உயரும் மாட்டு சாண வறட்டிகள்..

கொரோனா காலத்தில்  இதே நிலைமை தொடர்ந்து ஏற்பட்டால் உயிரிழப்புக்கள்  ஏற்பட்டால் அடுத்தபடியாக மரங்களை வெட்டி உடல்களை எரிக்கும் நிலைமை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
India GDP Japan: புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
புத்தாண்டில் நல்ல செய்தி.! பொருளாதாரத்தில் வேகமெடுக்கும் இந்தியா; ஜப்பானையே தட்டித் தூக்கி சாதனை
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
CBSE: நெருங்கும் பொதுத்தேர்வு: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் புது விதிமுறைகள், தேர்வு முறையில் மாற்றம்!
Embed widget