மேலும் அறிய

கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்..

ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக அரசு மருத்துவமனைக்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் இன்றி ஆம்புலன்சில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாததால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா  தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதனால்  மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேசமயம்  நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்து வருகின்றன.  


கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்..

கோவை அரசு மருத்துவமனையை பொருத்த வரையில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிக்கு நோயாளிகள் பெயர்களை பதிவு செய்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கோவை அரசு மருத்துவமனைக்கு அவசர கதியில் ஆம்புலன்ஸ் மூலமாக வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். பல்வேறு இடங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக அரசு மருத்துவமனைக்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் இன்றி ஆம்புலன்சில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அரசு தலையிட்டு படுக்கை வசதிகளை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்..

இதுகுறித்து நோயாளிகள் உறவினர்கள் கூறும்போது, “கொரோனா சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லை. இதனால் காலையில் இருந்து ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை உள்ளது. ஆன்லைனில் படுக்கை வசதிகள் குறித்து பார்த்தால் 50 சதவீத படுக்கை வசதிகள் இருப்பதாக காட்டுகிறது. ஆனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை. கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகள் கொண்ட 900 படுக்கைகள் உள்ளது. அவை பெரும்பாலும் நிரம்பி விட்டதால், படுக்கை வசதிகள் இல்லை என்கின்றனர். மற்ற மருத்துவமனைகளிலும் இதே நிலை தான் இருக்கிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாததால் ஆம்புலன்சில் காத்திருக்கிறோம். ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.


கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்..

இதுகுறித்து கோவை அரசு மருத்துவகமனை நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, “கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சையளித்து வருகிறோம். குணமடைந்த நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்த பின்னர்தான், புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியுமென்ற நிலை உள்ளது. இதனால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இன்று கூடுதலாக 40 ஆக்சிஜன் படுக்கைகள் தயாராகி வருகிறது. காத்திருப்பர்களுக்கு உடனடியாக அட்மிஷன் போடப்படும்” எனத் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
ABP Premium

வீடியோ

Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Embed widget