மேலும் அறிய

கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்..

ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக அரசு மருத்துவமனைக்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் இன்றி ஆம்புலன்சில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லாததால் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரொனா  தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதனால்  மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதேசமயம்  நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைப்பதில்லை என்ற புகார்கள் எழுந்து வருகின்றன.  


கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்..

கோவை அரசு மருத்துவமனையை பொருத்த வரையில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிக்கு நோயாளிகள் பெயர்களை பதிவு செய்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், கோவை அரசு மருத்துவமனைக்கு அவசர கதியில் ஆம்புலன்ஸ் மூலமாக வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனங்களிலேயே சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். பல்வேறு இடங்களில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலமாக அரசு மருத்துவமனைக்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் இன்றி ஆம்புலன்சில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அரசு தலையிட்டு படுக்கை வசதிகளை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்..

இதுகுறித்து நோயாளிகள் உறவினர்கள் கூறும்போது, “கொரோனா சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் படுக்கை வசதிகள் இல்லை. இதனால் காலையில் இருந்து ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை உள்ளது. ஆன்லைனில் படுக்கை வசதிகள் குறித்து பார்த்தால் 50 சதவீத படுக்கை வசதிகள் இருப்பதாக காட்டுகிறது. ஆனால் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை. கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் வசதிகள் கொண்ட 900 படுக்கைகள் உள்ளது. அவை பெரும்பாலும் நிரம்பி விட்டதால், படுக்கை வசதிகள் இல்லை என்கின்றனர். மற்ற மருத்துவமனைகளிலும் இதே நிலை தான் இருக்கிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாததால் ஆம்புலன்சில் காத்திருக்கிறோம். ஆக்சிஜன் வசதிகள் கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.


கோவை அரசு மருத்துவமனையில் ஆம்புலன்சில் காத்திருக்கும் கொரோனா நோயாளிகள்..

இதுகுறித்து கோவை அரசு மருத்துவகமனை நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, “கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சையளித்து வருகிறோம். குணமடைந்த நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்த பின்னர்தான், புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியுமென்ற நிலை உள்ளது. இதனால் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இன்று கூடுதலாக 40 ஆக்சிஜன் படுக்கைகள் தயாராகி வருகிறது. காத்திருப்பர்களுக்கு உடனடியாக அட்மிஷன் போடப்படும்” எனத் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
SBI Revises Cash Withdrawal Rules: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டியுடன் கட்டணம்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை.. ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை! ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
இன்று மழை இருக்கா, இல்லையா? ஆகஸ்ட் 21 வானிலை நிலவரம்! காஞ்சி, செங்கல்பட்டு, அப்டேட்!
இன்று மழை இருக்கா, இல்லையா? ஆகஸ்ட் 21 வானிலை நிலவரம்! காஞ்சி, செங்கல்பட்டு, அப்டேட்!
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
7 Seater: அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
அடடே 20+KM மைலேஜில் 7 சீட்டர் - ஜப்பான் மாடலின் விலை, அம்சங்கள், வசதிகள் - முழு விவரம் இதோ
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Embed widget