மேலும் அறிய

எம்.எல்.ஏ அலுவலகத்தில் பணம் எண்ணும் இயந்திரம் எதற்கு? - வானதிக்கு செந்தில் குமார் எம்.பி கேள்வி

’’23 ஆம் புலிக்கேசி என்ற வரலாற்று சிறப்புமிக்கப்படத்துடன் என்னை ஒப்பிட்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நன்றி’’

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து  ஔவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11 லட்சம் மதிப்பிலான நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இன்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

எம்.எல்.ஏ அலுவலகத்தில் பணம் எண்ணும் இயந்திரம் எதற்கு? - வானதிக்கு செந்தில் குமார் எம்.பி கேள்வி
 
தருமபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பருவ வயதை அடைந்த பிறகு பள்ளி கல்வி இடைநிற்றல் அதிகரிப்பதற்கு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாதது காரணமாக அமைந்துள்ளது. எனவே இடைநிற்றலை தவிர்க்க நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடங்கள் கட்டி தரப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் பள்ளி கல்வியை தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக செய்திருக்கின்றேன்.

எம்.எல்.ஏ அலுவலகத்தில் பணம் எண்ணும் இயந்திரம் எதற்கு? - வானதிக்கு செந்தில் குமார் எம்.பி கேள்வி
 
மேலும் பாஜக தலைவர் அண்ணாமலை தருமபுரி எம்பி  ட்விட்டா் எம்பி என்று குறிப்பிட்டிருக்கிறார் என்ற கேள்விக்கு. 
 
ட்விட்டா் மூலமாக நல்ல விஷயங்கள் செய்ய முடிகிறது. என் பாராளுமன்ற செயல்பாடு மாநில அளவிலும் மத்திய அளவிலும் முதல் இடத்தில் இருக்கின்றேன். ட்விட்டரில் மற்றவர்களுக்கு உதவுவதில் மற்றவர்களைக் காட்டிலும் முதலிடத்தில் இருக்கின்றேன். பாஜக எம்பி எம்எல்ஏ செயல்பாடுகளும், தருமபுரி எம்பி அதன் செயல்பாடும் பொருத்தி பார்த்தால் முதலிடத்தில் வருவேன்.
 
மேலும்  எம்எல்ஏ அலுவலகத்தில் லாபம் என எழுதி பணம் என்னும் இயந்திரத்தை வைத்திருக்கின்ற கட்சி தான் பாஜக. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இதற்கு பணம் எண்ணும் இயந்திரம் எதற்கு என கேள்வி எழுப்பினார். என்னை இருபத்தி மூன்றாம் புலிகேசி என்று பேசியிருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க படத்தை ஒப்பிட்டு பாராட்டியிருக்கிறார் இதனை நான் நல்ல விதமாக தான் எடுத்து கொள்கிறேன்.  இதனால் முதலில் நான் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் தருமபுரியில் 289 பூத் குரும்பட்டியான் கொட்டாய் பகுதியில் பேசிய அண்ணாமலை தோ்தலில் இந்த பூத்தில் 90% பாஜக வாக்கு பெற்றுள்ளதாக பேசியிருக்கிறார்.  அந்த வாக்குச் சாவடியில் பாஜகக்கு ஒரே ஓட்டுதான் பெற்றுள்ளது. அந்த பூத் பாட்டாளி மக்கள் கட்சி கோட்டையாக உள்ள இடம். பாஜகவிற்கும் பாமகவிற்கு வித்தியாசம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். 
 
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆறு மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாமல் உள்ளது. இன்னும் ஆறு மாதங்களில், அனைத்து மாதங்களில், அனைத்து மலை கிராமங்களுக்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்  வனத் துறையினர் அனுமதிக்காக காத்திருக்கின்றனர். விரைவில் அனுமதி கிடைத்தவுடன் தருமபுரி மாவட்டத்தில்  உள்ள  அனைத்து மலை கிராமங்களுக்கும் சாலை வசதி பெற்ற கிராமங்களாக இருக்கும் என்று தெரிவித்தார். அதியமான் கோட்டை மேம்பால பணிகள் குறித்து ஏற்கனவே டெல்லியில் உள்ள அலுவலரிடம் அலுவலரிடம் பேசியதாகவும் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே நிர்வாகத்தின் அவர் பதில் அளித்ததாக தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை,  மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை, மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget