மேலும் அறிய
தருமபுரி: தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக திருத்தேரோட்டம்
அரூரை அடுத்த பிரசித்தி பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசி மக திருத்தேரோட்டம் வெகுவிமர்சியாக நடைபெற்றது-பல்லாயிரக்கணக்கான பகதர்கள் பங்கேற்பு.

மாசி மக திருத்தேரோட்டம்
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறூம் மாசி மாதம், மாசிமக தேர்திருவிழா நடைபெறும். வரலாற்றுசிறப்பு மிக்க தீர்த்தமலைதீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் பிப்ரவரி 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, மார்ச் 21 ஆம் தேதி திங்கட்கிழமை சுவாமி திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Kumbakonam Corporation | கும்பகோணத்திற்கு முதல் மேயர் யார் ? - திமுகவில் கடும் போட்டி

இதனையடுத்து நேற்று மதியம் 2 மணியளவில் தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் தோரட்டம் நடைபெற்றது. அருள்மிகு விநாயகர், தீர்த்தகிரீஸ்வரர், தீர்த்தகிரீஸ்வரர் உடனமர் வடிவாம்பிகை திருத்தேர்களை கோவிலை சுற்றி பக்தர்களை வடம்பிடித்து இழுத்து வந்தனர். முதலில் விநாயகர், இரண்டாவதாக தீர்த்தகிரி ஈஸ்வரர், இறுதியாக வடிவாம்பிகை தேர் ஊர்வலமாக வந்தது. மேலும் தேர் ஊர்வலம் வரும்போது, விழாவில்பங்கேற்ற பக்தர்கள் சுவாமிகளின் திருத்தேர்கள் மீது உப்பு, மிளகு, முத்துக்கொட்டை உள்ளிட்ட நவதானியங்களை இறைத்து வழிபட்டனர். தொடர்ந்து இரண்டாவதாக வந்த தீர்த்தகிரி ஈஸ்வரர் திருத்தேர் ஊர்வலத்தில், தேரின் சக்கரத்தில் ஆடுகளை வைத்து பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கூலித் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்கள்மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்டவெளி மாநிலங்களைச் சேர்ந்தபல்லாயிரக் கணக்கான பக்தர்கள் தேர்த்திருவிழாவில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், மாவட்ட அறநிலை துறை உதவி ஆணையாளர் பிரகாஷ் , செயல் அலுவலர் சரவணக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேர்திருவிழாவில் அசம்பாவிதங்கள் நடைபெற்றமல் தடுக்க தருமபுரி, கிருஸ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அரூர் டிஎஸ்பி பெனாசிர் பாத்திமா தலைமையில் பதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் திருவிழாவைக்கான வரும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் விழாக்கால சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருத்தேரோட்டத்தினை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தும், சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தொடங்காவிட்டால் விரைவில் போராட்டம் - மின்வாரிய ஊழியர்கள் எச்சரிக்கை
Before You Go
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
விளையாட்டு
கல்வி
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















