மேலும் அறிய

’’காசு கொடுத்தாதான் கரண்ட்’’ - 24 ஆண்டுகளாக அலைகழித்ததால் விவசாயி தீக்குளிக்க முயற்சி...!

மின் இணைப்பு வழங்காமல், 11 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து விவசாயி பழனிசாமி, முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மின்துறை உயர் அதிகாரிகள் வரை மனு அளித்துள்ளார்

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஜம்மணஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி என்பவர், தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.  இந்த  விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்கு  மின்சார இணைப்பு பெற கடந்த 1997ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். இது பதிவு மூப்பு அடிப்படையில், கடந்த 2010ஆம் ஆண்டு மின்சாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மின்சாரம் வழங்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  ஆனால்  விவசாய கிணற்றுக்கு  மின் இணைப்பு வழங்காமல் மின்வாரிய அதிகாரிகள்   பழனிசாமியை அலைக்கழித்துள்ளனர்.
 
பிறகு 50 ஆயிரம் லஞ்சம் வழங்கினால் மின் இணைப்பு வழங்குவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனிசாமி 50 ஆயிரம் லஞ்சமாக வழங்கி உள்ளார். ஆனால் மின் இணைப்பு வழங்காமல், 11 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து விவசாயி பழனிசாமி, முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மின்துறை உயர் அதிகாரிகள் வரை மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து 50 ஆயிரம் போதாது,  மேலும் 50 ஆயிரம் வழங்கினால் மட்டுமே மின் இணைப்பு வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பணம் கொடுக்க தன்னிடம் வசதியில்லை என விவசாயி கூறியதால்  மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் மீண்டும் காலதாமதம் செய்து வந்தனர். 
 
’’காசு கொடுத்தாதான் கரண்ட்’’ - 24 ஆண்டுகளாக அலைகழித்ததால் விவசாயி தீக்குளிக்க முயற்சி...!
 
ஆனால் பழனிச்சாமிக்கு பின்னர் மனு கொடுத்த பலருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாமல், கால்நடைகளுக்கு தண்ணீரில்லாமல் மிகுந்து சிரமத்திற்குள்ளாகி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த விவசாயி பழனிசாமி, தனது மனைவி மலர்கொடியுடன் தருமபுரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து, இலஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரிகளை கண்டித்தும், மின்சாரம் வழங்க வலியுறுத்தியும்,  தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
 
பின்னர் அவர் கையில் வைத்திருந்த கேனிலிருந்த மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் தடுத்து பழனிச்சாமியை பாதுகாப்பாக மீட்டு, அழைத்து சென்றனர். தொடர்ந்து இலவச மின்சாரம் வேண்டி, 24 ஆண்டுகளாக  போராடியும்  அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காத வேதனையில் விவசாயி  தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
24 ஆண்டுகளாக மின் இணைப்பு பெற நியாமான வழியில் முயற்சித்தும் அதிகாரிகளின் லஞ்ச வெறி காரணமாக விவசாயி பழனிசாமி தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட நிலையில் மின் இணைப்பு பெற லஞ்சம் வாங்கி அதிகாரிகள் மீதும் தொடர்ந்து லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Vengaram: மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
ABP Premium

வீடியோ

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Vengaram: மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
Realme P4 Power: இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
Embed widget