மேலும் அறிய

’’காசு கொடுத்தாதான் கரண்ட்’’ - 24 ஆண்டுகளாக அலைகழித்ததால் விவசாயி தீக்குளிக்க முயற்சி...!

மின் இணைப்பு வழங்காமல், 11 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து விவசாயி பழனிசாமி, முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மின்துறை உயர் அதிகாரிகள் வரை மனு அளித்துள்ளார்

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஜம்மணஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி என்பவர், தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.  இந்த  விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்கு  மின்சார இணைப்பு பெற கடந்த 1997ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். இது பதிவு மூப்பு அடிப்படையில், கடந்த 2010ஆம் ஆண்டு மின்சாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மின்சாரம் வழங்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  ஆனால்  விவசாய கிணற்றுக்கு  மின் இணைப்பு வழங்காமல் மின்வாரிய அதிகாரிகள்   பழனிசாமியை அலைக்கழித்துள்ளனர்.
 
பிறகு 50 ஆயிரம் லஞ்சம் வழங்கினால் மின் இணைப்பு வழங்குவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனிசாமி 50 ஆயிரம் லஞ்சமாக வழங்கி உள்ளார். ஆனால் மின் இணைப்பு வழங்காமல், 11 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து விவசாயி பழனிசாமி, முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மின்துறை உயர் அதிகாரிகள் வரை மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து 50 ஆயிரம் போதாது,  மேலும் 50 ஆயிரம் வழங்கினால் மட்டுமே மின் இணைப்பு வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பணம் கொடுக்க தன்னிடம் வசதியில்லை என விவசாயி கூறியதால்  மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் மீண்டும் காலதாமதம் செய்து வந்தனர். 
 
’’காசு கொடுத்தாதான் கரண்ட்’’ - 24 ஆண்டுகளாக அலைகழித்ததால் விவசாயி தீக்குளிக்க முயற்சி...!
 
ஆனால் பழனிச்சாமிக்கு பின்னர் மனு கொடுத்த பலருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாமல், கால்நடைகளுக்கு தண்ணீரில்லாமல் மிகுந்து சிரமத்திற்குள்ளாகி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த விவசாயி பழனிசாமி, தனது மனைவி மலர்கொடியுடன் தருமபுரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து, இலஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரிகளை கண்டித்தும், மின்சாரம் வழங்க வலியுறுத்தியும்,  தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
 
பின்னர் அவர் கையில் வைத்திருந்த கேனிலிருந்த மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் தடுத்து பழனிச்சாமியை பாதுகாப்பாக மீட்டு, அழைத்து சென்றனர். தொடர்ந்து இலவச மின்சாரம் வேண்டி, 24 ஆண்டுகளாக  போராடியும்  அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காத வேதனையில் விவசாயி  தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
24 ஆண்டுகளாக மின் இணைப்பு பெற நியாமான வழியில் முயற்சித்தும் அதிகாரிகளின் லஞ்ச வெறி காரணமாக விவசாயி பழனிசாமி தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட நிலையில் மின் இணைப்பு பெற லஞ்சம் வாங்கி அதிகாரிகள் மீதும் தொடர்ந்து லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

“தீஞ்ச சோறும், தண்ணீர் சாம்பாரும் மட்டுமே” - சாப்பாட்டுக்கு ஏங்கும் அவலம்; மிரட்டும் வார்டன்... கதறும் மாணவர்கள்
“தீஞ்ச சோறும், தண்ணீர் சாம்பாரும் மட்டுமே” - சாப்பாட்டுக்கு ஏங்கும் அவலம்; மிரட்டும் வார்டன்... கதறும் மாணவர்கள்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
பத்மஸ்ரீ விருதுடன் சேலம் திரும்பிய சிற்பி ராஜா காளியப்பா கவுண்டர்: சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
பத்மஸ்ரீ விருதுடன் சேலம் திரும்பிய சிற்பி ராஜா காளியப்பா கவுண்டர்: சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு
தமிழகத்திலேயே முதல் முறை; உயிர்பிழைத்த தாய், குழந்தை.. திக் திக் நிமிடங்களை வென்ற சேலம் மருத்துவர்கள் - நெகிழ்ச்சிப் பின்னணி
தமிழகத்திலேயே முதல் முறை; உயிர்பிழைத்த தாய், குழந்தை.. திக் திக் நிமிடங்களை வென்ற சேலம் மருத்துவர்கள் - நெகிழ்ச்சிப் பின்னணி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget