மேலும் அறிய

’’காசு கொடுத்தாதான் கரண்ட்’’ - 24 ஆண்டுகளாக அலைகழித்ததால் விவசாயி தீக்குளிக்க முயற்சி...!

மின் இணைப்பு வழங்காமல், 11 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து விவசாயி பழனிசாமி, முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மின்துறை உயர் அதிகாரிகள் வரை மனு அளித்துள்ளார்

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஜம்மணஅள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி பழனிசாமி என்பவர், தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.  இந்த  விவசாய நிலத்தில் உள்ள கிணற்றுக்கு  மின்சார இணைப்பு பெற கடந்த 1997ஆம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். இது பதிவு மூப்பு அடிப்படையில், கடந்த 2010ஆம் ஆண்டு மின்சாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மின்சாரம் வழங்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  ஆனால்  விவசாய கிணற்றுக்கு  மின் இணைப்பு வழங்காமல் மின்வாரிய அதிகாரிகள்   பழனிசாமியை அலைக்கழித்துள்ளனர்.
 
பிறகு 50 ஆயிரம் லஞ்சம் வழங்கினால் மின் இணைப்பு வழங்குவதாக மின்வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழனிசாமி 50 ஆயிரம் லஞ்சமாக வழங்கி உள்ளார். ஆனால் மின் இணைப்பு வழங்காமல், 11 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனை தொடர்ந்து விவசாயி பழனிசாமி, முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மின்துறை உயர் அதிகாரிகள் வரை மனு அளித்துள்ளார். இதனை தொடர்ந்து 50 ஆயிரம் போதாது,  மேலும் 50 ஆயிரம் வழங்கினால் மட்டுமே மின் இணைப்பு வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பணம் கொடுக்க தன்னிடம் வசதியில்லை என விவசாயி கூறியதால்  மின் இணைப்பு வழங்காமல் அதிகாரிகள் மீண்டும் காலதாமதம் செய்து வந்தனர். 
 
’’காசு கொடுத்தாதான் கரண்ட்’’ - 24 ஆண்டுகளாக அலைகழித்ததால் விவசாயி தீக்குளிக்க முயற்சி...!
 
ஆனால் பழனிச்சாமிக்கு பின்னர் மனு கொடுத்த பலருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,  தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாமல், கால்நடைகளுக்கு தண்ணீரில்லாமல் மிகுந்து சிரமத்திற்குள்ளாகி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த விவசாயி பழனிசாமி, தனது மனைவி மலர்கொடியுடன் தருமபுரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு அமர்ந்து, இலஞ்சம் வாங்கிய மின் வாரிய அதிகாரிகளை கண்டித்தும், மின்சாரம் வழங்க வலியுறுத்தியும்,  தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
 
பின்னர் அவர் கையில் வைத்திருந்த கேனிலிருந்த மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் தடுத்து பழனிச்சாமியை பாதுகாப்பாக மீட்டு, அழைத்து சென்றனர். தொடர்ந்து இலவச மின்சாரம் வேண்டி, 24 ஆண்டுகளாக  போராடியும்  அதிகாரிகள் மின் இணைப்பு வழங்காத வேதனையில் விவசாயி  தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
24 ஆண்டுகளாக மின் இணைப்பு பெற நியாமான வழியில் முயற்சித்தும் அதிகாரிகளின் லஞ்ச வெறி காரணமாக விவசாயி பழனிசாமி தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட நிலையில் மின் இணைப்பு பெற லஞ்சம் வாங்கி அதிகாரிகள் மீதும் தொடர்ந்து லஞ்சம் கேட்ட அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தலைப்பு செய்திகள்

நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
ஏற்காடு மலைவாழ் கிராமத்தில் முதல் நீட் சாதனை! நிவேதாவின் மருத்துவக் கனவுக்கு அரசு உதவுமா?
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2036-ல் தமிழ்நாட்டின் பொருளாதாரம் எவ்வளவு இருக்கும் தெரியுமா? - அமைச்சர் மதன்ராஜா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி
“எஃகு கோட்டையில் ஓட்டை போட்டுட்டோம்” - சேலத்தில் மாஸ் காட்டிய விஜய் கட்சி

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget