மேலும் அறிய

தருமபுரி: பொதுமக்கள் முயற்சியால் 17 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய அரூர் பெரிய ஏரி

17 ஆண்டுகளுக்குப் பிறகு அரூர் பெரிய ஏரி நிரம்பி, இருகால்வாயிலும் உபரி நீர் வெளியேற தொடங்கியுள்ளது

தருமபுரி மாவட்டம் வாணியாறு அணை உபரி நீர் தென்கரைக்கோட்டை ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீரும் கள்ளாறில் வெளியேறி கொளகம்பட்டி,  காரை ஓட்டு என்ற இடத்தில் சிறிய தடுப்பணை கால்வாய் மூலம் நிரம்பும் வகையில் 165 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அரூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் வந்தடையும். அரூர் பெரிய ஏரி ஒருமுறை தண்ணீர் நிரம்பினால் 3 ஆண்டுக்கு அரூர் நகரம், தொட்டம்பட்டி, நாசினாம்பட்டி, பச்சினாம்பட்டி பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்  மற்றும் குடிநீர் பிரச்சினை தீரும். ஆனால் காரை ஒட்டு தடுப்பணை உயரம் குறைவாக இருப்பதால், ஏரிக் கால்வாயில் தண்ணீர் திரும்பாமல், நேரடியாக தண்ணீர் வாணியாற்றில் சென்று வந்தது.
 

தருமபுரி: பொதுமக்கள் முயற்சியால் 17 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய அரூர் பெரிய ஏரி
 
இதனால் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் உதவியுடன், அழகு அரூர் தன்னார்வ அமைப்பினர் மற்றும் அரூர் பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கி வீணாக வெளியேறும் தண்ணீரைத் தடுத்து அரூர் பெரிய ஏரிகால்வாய்க்கு திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து பெய்து வந்த வடகிழக்கு பருவமழையால், அதிகமாக வந்தது. கடந்த 10 நாட்களாக தண்ணீர் வந்த நிலையில், இன்று 17 ஆண்டுகளுக்குப் பிறகு அரூர் பெரிய ஏரி நிரம்பி, இருகால்வாயிலும் உபரி நீர் வெளியேற தொடங்கியுள்ளது.  இதனால்  நீண்ட நாட்களுக்கு பிறகு ஏரி நிரம்பியதல், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உபரி நீர் வெளியேறுவதை மலர் தூவி வரவேற்றனர். மேலும் கார ஓட்டு தடுப்பணையில் உயரத்தை உயர்த்தி, ஏரிக்கு நிரந்தரமாக தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
 
 

 
அரூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 1100 மூட்டை மஞ்சள் 55 லட்சத்திற்கு விற்பனை
 

தருமபுரி: பொதுமக்கள் முயற்சியால் 17 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய அரூர் பெரிய ஏரி
 
தருமபுரி மாவட்டம் அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் பருத்தி ஏலமும், வெள்ளிக் கிழமைகளில் மஞ்சள் ஏலமும் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் அரூர் பகுதியில் உள்ள அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சாகுபடி செய்யக்கூடிய மஞ்சள் மற்றும் பருத்திகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
 

தருமபுரி: பொதுமக்கள் முயற்சியால் 17 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய அரூர் பெரிய ஏரி
 
 
இந்நிலையில் நேற்று அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் அரூர் சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து 137  விவசாயிகள் கொண்டு வந்த 1100 மூட்டை மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இந்த ஏலத்தில் சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில் குண்டு மஞ்சள் குவிண்டால் ரூ.7301 முதல் 8009 வரையும், விராலி மஞ்சள் குவிண்டால் ரூ.7499 முதல் 9299 வரை விற்பனையானது. நேற்றைய ஏலத்தில் விவசாயிகள் கொண்டு வந்த 1100 மூட்டை மஞ்சள் ரூ.55 லட்சத்திற்கு விற்பனை ஆனது. கடந்த வார்த்தை விட, இந்த வாரம் விவசாயிகள் மற்றும் மஞ்சள் வரத்து குறைந்ததால், மஞ்சள் விலை உயர்ந்து ஏலம் போனது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
PUD TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
PUD TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget