மேலும் அறிய

தருமபுரியில் துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கியதில் 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழப்பு

காலையில் பள்ளிக்கு செல்ல, குளித்துவிட்டு வந்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிதம்பரம்-அருணா தம்பதியரின் மகன் ஏழுமலை, அருகில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக குளித்துவிட்டு, வீட்டருகே இருந்த கம்பியின் மீது துணியை காய போட்டுள்ளார். அப்பொழுது மின்சாரம் தாக்கியதில் ஏழுமலை தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.

தருமபுரியில் துணி காயப்போடும் போது மின்சாரம் தாக்கியதில் 7 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் உயிரிழப்பு
 
தொடர்ந்து உயிரிழந்த மாணவனின் உடல் அரூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அறிந்த வந்த அரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சிதம்பரம் வீடு முழுவதும் மின் கசிவு ஏற்பட்டு, துணி காய வைக்கும் கம்பியில் மின்சாரம் இருந்ததாக கூறப்படுகிறது. காலையில் பள்ளிக்கு செல்ல, குளித்துவிட்டு வந்த மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

 
அரசு பேருந்து படிகட்டில், ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்-காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை
 
தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி மற்றும் சோளக்கொட்டாய், தருமபுரி அரசு பள்ளிகளில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ராணிமைந்தன, பாசாரப்பட்டி, ஒடசல்லப்பட்டி செம்மணஹள்ளி, நடுப்பட்டி, பயந்துட்டு உள்ளிட்ட பகுதிகளில இருந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். மேலும் இந்த பகுதியில் இருந்த அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர். இந்த மாணவர்கள் காலையில் செல்வதற்கு ஒரே ஒரு அரசு பேருந்து மட்டுமே உள்ளது. தருமபுரியில் இருந்து ஒடசல்பட்டி, ராணிமைந்தன, சிந்தல்பாடி வழியாக ராமியணள்ளி வரை அரசு பேருந்து தடம் எண் 12 பி செல்கிறது. இந்த பேருந்து ராமியணஹள்ளியிலிருந்து காலை 7.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த பேருந்து பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சரியாக இருப்பதால், பாசரப்பட்டி, ராணிமூக்கனூர் உள்ளிட்ட கிராமத்தில் இருந்து ஒடசல்பட்டி அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் வருகின்றன்றனர். மேலும் சோளக்கொட்டார் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கு செல்ல, செம்மணஹள்ளி, நடுப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாணவர்கள் பேருந்துக்கு வருகின்றனர்.
 
இதனால் பேருந்தில் பயணிகள் மற்றும் பள்ளி,கல்லூரி மாணவர்களின் கூட்டம் அதிகரித்துவிடுறது. இந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொடங்கி, ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். தொடர்ந்து அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் படியில் தாங்க வேண்டாம் என்று சொன்னாலும் கூட, மாணவர்கள் கண்டு கொள்ளாமல், சாகசம் காட்டி வருகின்றனர்.  தொடர்ந்து பேருந்தில் கூட்டம் அதிகரிப்பதால், சில பேருந்து நிறுத்தங்களில், பேருந்து நிறுத்துவதில்லை. இதனால் மாணவ, மாணவிகள் காத்திருந்து அடுத்த பேருந்துக்கு செல்கின்றனர். இதனால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்லமுடியாத நிலையும் இருந்து வருகிறது. எனவே மாணவர்களின் நலன் கருதி, காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
America Vs Venezuela: சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
சீனாவுக்கு சென்ற கச்சா எண்ணெய் கப்பலை மடக்கிய அமெரிக்கா; வெனிசுலா கண்டனம் - பதற்றம்
Maruti Swift Without Tax: வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
வரி இல்லாமல் மாருதி ஸ்விஃப்ட் வாங்கணுமா! இப்படி வாங்கினால் ரூ.1.89 லட்சம் மிச்சம் - விவரம் இதோ
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
Embed widget