மேலும் அறிய

மளிகை பொருட்கள் விலை ஏற்றம்....ஏழை, நடுத்தர மக்கள் அதிர்ச்சி..!

நகர்புறங்களில் உள்ள மளிகை கடைகளில் ஒரு விலையும் கிராமப்புறங்களில் உள்ள கடைகளில் கூடுதல் விலையும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்

அத்தியவாசிய மளிகை பொருட்கள் விலை ஏற்றத்தால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

பொதுவாக மளிகை பொருட்களின் விலைவாசி உயர்வு என்பது கடந்த ஒரு மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏழை எளிய மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக 25 கிலோ அரிசி பை 945 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது 1200 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. அதே போன்று வெள்ளை உளுந்து கிலோ ஒன்றுக்கு 110 ரூபாயிலிருந்து தற்போது 150 வரை உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு 95 லிருந்து 115 வரை உயர்ந்துள்ளது. சீரகம் பெருஞ்சீரகம் போன்றவற்றின் விலையும் 10 ரூபாய் முதல் 15 வரை உயர்ந்துள்ளது. பொட்டுக்கடலை கிலோ ஒன்றுக்கு 20 வரை விலையேறி உள்ளது. எனவே  வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. அதேபோன்று சில குறிப்பிட்ட நிறுவனங்களின் குளியல் சோப்பு விலை உயர்ந்துள்ளது. சென்ற மாதம் விலை உயர்ந்து காணப்பட்ட  ஆயில் தற்போது விலை குறைந்துள்ளது.


மளிகை பொருட்கள் விலை ஏற்றம்....ஏழை, நடுத்தர மக்கள் அதிர்ச்சி..!

மேலும், வர மிளகாய்  வரலாறு காணாத அளவிற்கு ஒரு கிலோ 100 ரூபாய் உயர்ந்துள்ளது. முதல் தர வர மிளகாய் ரூபாய் 340 வரை விற்பனையாகிறது. அதேபோன்று மல்லி ஒரு கிலோ 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மல்லி மற்றும் மிளகாய் விலை உயர்ந்துள்ளதால் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் குழம்புத்தூள் தனி மிளகாய் தூள் ஆகியவை 50 கிராமிற்கு 7 ரூபாய் வரை விலை ஏறி உள்ளன. குழம்பு மிளகாய் தூள் 50 கிராம் 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருவாரூர் மாவட்டத்தில் நகர்புறங்களில் உள்ள மளிகை கடைகளில் ஒரு விளையும் கிராமப்புறங்களில் உள்ள கடைகளில் இன்னும் அதிகமான கூடுதல் விளையும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழக அரசு மளிகை பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


மளிகை பொருட்கள் விலை ஏற்றம்....ஏழை, நடுத்தர மக்கள் அதிர்ச்சி..!

விலைவாசி உயர்வு குறித்து குடும்ப தலைவிகள் கூறுகையில், குழம்பு வைக்க வேண்டும் என்றால் மிக முக்கியமாக தேவைப்படுவது மிளகாய் தூள். மிளகாய் தூள் அரைப்பதற்கு பட்டம் மிளகாய் மல்லி உள்ளிட்ட பொருள்கள் முக்கியமாக தேவைப்படுகிறது ஆனால் கடந்த வாரம் 150 ரூபாய் விற்ற பட்டம் மிளகாய் இன்று 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோன்று ஒவ்வொரு பொருளின் விலையும் ஒரு வாரத்திற்குள் பன்மடங்கு உயர்ந்துள்ளது. என்ன செய்வது என்று தெரியவில்லை. விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று எதையும் சொல்லாமல் வாய் மூடித்தனமாக இருப்பது வேதனை அளிக்கிறது” என்று தெரிவிக்கின்றனர். இந்த விலைவாசி உயர்வு காரணமாக ஏழை எளிய வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
Tata Sierra: சியாராவின் 7 வேரியண்ட்கள் - முழு விலைப்பட்டியலையும் வெளியிட்ட டாடா - பணத்திற்கு நிகரான அம்சங்கள்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
Embed widget