மேலும் அறிய

Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?

சென்னை அம்பத்தூரில் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்த பெண் உதவி ஆய்வாளர் 2 மகன்களை தவிக்கவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அந்தோணி மாதா. 31 வயதான இவர் சென்னை அம்பத்தூரில் சட்டம் - ஒழுங்கு காவல்துறை உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கணவரைப் பிரிந்து வாழும் இவர் அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து தனது 10 வயது மற்றும் 8 வயதுள்ள 2 மகன்களுடன் வசித்து வந்தார். 

பெண் எஸ்ஐ தற்கொலை:

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்தோணிமாதாவை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது நீண்ட நேரமாகியும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால், அவர் வீட்டிற்குச் சென்றபோது வீடு உள்பக்கம் பூட்டியிருந்துள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தூக்கிட்டு அந்தோணிமாதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதையடுத்து, அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்தோணி மாதாவின் தற்கொலைக்கான காரணமும் வெளியாகியுள்ளளது. அந்தோணி மாதாவிற்கு கடந்த 2015ம் ஆண்டு யோவான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இருவரும்  பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

என்ன காரணம்?

அந்தோணி மாதாவிற்கு கடந்த சில மாதங்களாக உடன் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், அந்த உதவி ஆய்வாளர் அந்தோணி மாதாவிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி வந்த அந்தோணி மாதா தன்னைப் பார்க்க வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என அடிக்கடி மிரட்டி வந்துள்ளார். 

இதனால், அந்த உதவி ஆய்வாளர் அவரை தவிர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்த உதவி ஆய்வாளருக்கு வீடியோ கால் மூலம் அழைப்பு விடுத்த அந்தோணி மாதா தன்னைப் பார்க்க வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார். வழக்கம்போல தனக்கு மிரட்டல் விடுப்பதாக கூறி அந்த காவல் உதவி ஆய்வாளர் அழைப்பைத் துண்டித்துள்ளார். 

பரிதாபம்:

அதன்பின்பு, அந்தோணி மாதாவிற்கு அவர் அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் எடுக்காத நிலையில் அவருக்கு சந்தேகம் அடைந்துள்ளது. இதையடுத்து, நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து நேரில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவருடைய நண்பர்கள் நேரில் சென்று பார்த்தபோது கதவு பூட்டியிருந்துள்ளது. உள்ளே சென்று கதவை உடைத்து பார்த்தபோது அந்தோணி மாதா சடலமாக தூக்கில் தொங்கியுள்ளார். 

தந்தையைப் பிரிந்து தாயுடன் வசித்து வந்த 2 மகன்களும் தற்போது தாயையும் இழந்திருக்கும் சோகம் அப்பகுதியில் மிகப்பெரிய வேதனையை உண்டாக்கியுள்ளது.

தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget