மேலும் அறிய

Ramadan 2022: நோன்பும், நோன்பின் மாண்பும்.. சமத்துவத்தையும் ஈகையையும் போற்றும் பெருநாள்!

பெருநாள் சிறப்புத் தொழுகை முடிவடைந்த பிறகு, ஒவ்வொருவரும் பிறரை ஆரத்தழுவி கட்டியணைத்து `ஈத் முபாரக்’ எனக் கூறி, வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள். 

30 நாள்கள் நோன்பு இருந்து, பசித்தும் தாகித்தும், தன்னிடம் இறையச்சத்தைப் பேணியும், மனக்கட்டுப்பாடு, புலன்களை அடக்குதல் முதலானவற்றைக் கற்றுக் கொள்ளும் பயிற்சிக் காலமாக அமைகிறது ரமலான் மாதம். ரமலான் மாதம் முடிவடைந்த மறுநாளில் வானில் பிறை பார்த்து மிக மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் பண்டிகையாக இருக்கிறது ஈகைப் பெருநாள். 

ஈகைப் பெருநாள் கொண்டாட்டத்தின் பின்னணியில் ரமலான் மாதம் முழுவதும் மேற்கொள்ளப்படும் நோன்பும், பெருநாளின் கொண்டாட்டமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றன. இவை முகமது நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்து தொடங்கப்பட்ட வழக்கம் ஆகும். நபியவர்கள் மக்காவில் இருந்து மதீனா நகரத்திற்குப் புலம் பெயர்ந்த பிறகு, இந்தப் பண்டிகை முக்கியத்துவம் பெற்றதாகக் கூறுவோர் உண்டு. 

அந்தந்த நாட்டின் புவியியலைப் பொருத்து, பிறை தென்பட்ட மறுநாள் பெருநாளாகக் கடைபிடிக்கப்படும். 30 நாள்கள் ரமலான் மாதத்தின் நோன்பு இருந்த போதும், பெருநாள் அன்று நோன்பு கடைபிடிப்பதற்குக் கட்டாயத் தடை விதித்துள்ளது இஸ்லாம். மேலும், பெருநாளின் போது சிறப்புத் தொழுகை, ஈகை முதலானவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. 

Ramadan 2022: நோன்பும், நோன்பின் மாண்பும்.. சமத்துவத்தையும் ஈகையையும் போற்றும் பெருநாள்!

“நல்ல நம்பிக்கையுடன் அல்லாஹ்விடம் வெகுமதியை எதிர்பார்த்து எவர் நோன்பு இருக்கிறாரோ அவரது கடந்த காலப் பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான்” என்ற நபியவர்களின் கூற்றின்படி, நோன்பும், பெருநாளும் ஒவ்வொரு முஸ்லிமிற்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்திருக்கிறது. 

ஒரு மாதம் முழுவதும் நோன்பு பிடித்து, இறைவனை வணங்கி, பசியை உணர்ந்து, ஏழைகளுக்கு `பித்ரா’ என்றழைக்கப்படும் கட்டாய தானத்தை அளித்த பிறகும், பெருநாளின் சிறப்புத் தொழுகை தொழுவதே நோன்புப் பெருநாளைச் சரியாக கடைப்பிடிக்கும் முறையாகும். மேலும், வசதி படைத்த முஸ்லிம்கள் தங்கள் சொத்து மதிப்பில் இருந்து 2.5 சதவிகிதத்தை தானமாக வறியோருக்குக் கொடுக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் கட்டாய கடமையும் ஈகைப் பெருநாளின் போது நிறைவேற்றப்படுகிறது.

நோன்புப் பெருநாளின் காலையில் ஒவ்வொரு முஸ்லிமும் நன்கு குளித்து, புத்தாடை அணிந்து, காலை உணவைக் கட்டாயமாக உண்டு, அதனோடு பேரீச்சம் பழங்களை ஒற்றைப் படை எண்ணிக்கையில் சாப்பிட்டு, தொழுகைக்காக மக்களோடு மக்களாக திடலில் அணியமாவார்கள். வழக்கமாக பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகை, பெருநாளின் போது சிறப்புத் தொழுகையாக இருப்பதால், திடலில் நடைபெறும். தொழுகைக்கு முன்பு, நன்மைகளை ஏவியும், தீமைகளைத் தடுக்கவும் கோரும் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும். தொழுகைக்குப் பின்பு, உலகத்தின் அனைத்து உயிர்களின் நன்மையை வேண்டி பிரார்த்தனைகளும் நடைபெறும். 

Ramadan 2022: நோன்பும், நோன்பின் மாண்பும்.. சமத்துவத்தையும் ஈகையையும் போற்றும் பெருநாள்!

பெருநாள் சிறப்புத் தொழுகை முடிவடைந்த பிறகு, ஒவ்வொருவரும் பிறரை ஆரத்தழுவி கட்டியணைத்து `ஈத் முபாரக்’ எனக் கூறி, வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வார்கள். 

`அல்லாஹு அக்பர்’ என்ற முழக்கமும், `ஈத் முபாரக்’ என்ற வாழ்த்துச் செய்தியும் பெருநாளின் போது நிறைந்திருக்கும்; அவை ஏழை, செல்வந்தர் என்ற பாகுபாட்டையோ, வேறு பிரிவினைகளையோ கோராமல், இறைவனின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துவதாக அமைந்திருக்கும். 

இறைவனின் சாந்தியும், சமாதானமும், பெருநாளின் மகத்தான வாழ்த்துகளும் அனைவரையும் சூழ்ந்திருக்க, அந்நாள் `பெருநாள்’ என்று மீண்டும் மீண்டும் மேன்மை பெறும்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இது தமிழ்நாட்டின் உரிமை" கட்சிகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிறந்தநாளில் புற்று நோய் குறித்து விளிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி சரத்குமார்...
பிறந்தநாளில் புற்று நோய் குறித்து விளிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி சரத்குமார்...
Indian Condemned by Americans: ஏம்பா.. இந்தியாவோட மானத்த வாங்கிட்டியே.? வறுக்கும் அமெரிக்கர்கள்.. எதற்காக தெரியுமா.?
ஏம்பா.. இந்தியாவோட மானத்த வாங்கிட்டியே.? வறுக்கும் அமெரிக்கர்கள்.. எதற்காக தெரியுமா.?
TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்
TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Slams Delimitation | ”பல லட்சம் கோடி கடன் புதிய MP-க்கள் அவசியமா?” மோடியை வெளுத்த விஜய்EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இது தமிழ்நாட்டின் உரிமை" கட்சிகளை கடந்து குரல் கொடுக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பிறந்தநாளில் புற்று நோய் குறித்து விளிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி சரத்குமார்...
பிறந்தநாளில் புற்று நோய் குறித்து விளிப்புணர்வு ஏற்படுத்திய வரலட்சுமி சரத்குமார்...
Indian Condemned by Americans: ஏம்பா.. இந்தியாவோட மானத்த வாங்கிட்டியே.? வறுக்கும் அமெரிக்கர்கள்.. எதற்காக தெரியுமா.?
ஏம்பா.. இந்தியாவோட மானத்த வாங்கிட்டியே.? வறுக்கும் அமெரிக்கர்கள்.. எதற்காக தெரியுமா.?
TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்
TVK VIJAY: ஊர்பட்ட கடன் இருக்கே..! பாஜகவை சுத்துபோட்டு வெளுத்து வாங்கிய விஜய் - தவெகவின் தரமான சம்பவம்
Railway Update: தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி..! எழும்பூருக்கு நோ, தாம்பரத்திலேயே ஹால்ட் - எந்தெந்த ரயில்கள் தெரியுமா?
Railway Update: தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சி..! எழும்பூருக்கு நோ, தாம்பரத்திலேயே ஹால்ட் - எந்தெந்த ரயில்கள் தெரியுமா?
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? பொம்மையாக இருக்க கூடுதல் எம்.பிக்களா? - பொங்கி எழுந்த விஜய்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? பொம்மையாக இருக்க கூடுதல் எம்.பிக்களா? - பொங்கி எழுந்த விஜய்
USA Trump: ”கம்பேக் கொடுக்குறோம், உங்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது” - பட்டாசாய் வெடித்த ட்ரம்ப்
USA Trump: ”கம்பேக் கொடுக்குறோம், உங்களுக்கு ஒன்னும் செய்ய முடியாது” - பட்டாசாய் வெடித்த ட்ரம்ப்
Ash Wednesday 2025: சாம்பல் புதன் ஏன் கொண்டாடப்படுகிறது? கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்றால் என்ன? முழு விவரம்
Ash Wednesday 2025: சாம்பல் புதன் ஏன் கொண்டாடப்படுகிறது? கிறிஸ்தவர்களின் தவக்காலம் என்றால் என்ன? முழு விவரம்
Embed widget