மேலும் அறிய

மொட்டையடித்து யாகம் வளர்த்த பாஜக எம்.எல்.ஏ.,- கட்சியிலிருந்து வெளியேறுவதாகக் காட்டம்! 

”எதிர்வரும் காலத்தில் என்னைப் போன்ற பல பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸில் சேருவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

திரிபுரா மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ஆஷிஷ் தாஸ் இன்று அந்தக் கட்சியிலிருந்து விலிகினார்.அதன் அடையாளமாக இன்று கொல்கத்தாவின் காளிகாட்டில் உள்ள காளி கோவிலுக்குச் சென்ற அவர் அங்கே யாகம் வளர்த்து மொட்டையடித்துக் கொண்டார். மொட்டையடித்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இன்று நான் பாரதிய ஜனதாவிலிருந்து வெளியேறுகிறேன். இதுதொடர்பாக நான் திரிணாமூல் காங்கிரஸில் பேசிவிட்டேன். அந்தக் கட்சியில் இணைய இருக்கிறேன். எதிர்வரும் காலத்தில் என்னைப் போன்ற பல பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அந்தக் கட்சியிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸில் சேருவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக, பாரதிய ஜனதாவுக்கு திரிணாமூல் காங்கிரஸுக்கும் தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பிரச்னை மாநிலம் விட்டு மாநிலம் கடந்து திரிபுரா வரைத் தொடர்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 213 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது. அந்த தேர்தலில் பாஜக 77 தொகுதிகளில் வென்றது. அந்தத் தேர்தலின்போது முடிந்தால் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு வெல்லுங்கள் என பாஜக மம்தா பானர்ஜிக்கு சவால்விடுத்தது. இதனையடுத்து சவாலை ஏற்றுக்கொண்டு மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவர் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். 


சுவேந்து அதிகாரி தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு மம்தாவின் வலதுகரமாக இருந்தவர். ஆனால் தேர்தலுக்கு முன்பு வியூகம் வகித்து சுவேந்து அதிகாரியைத் தன்வசம் இழுத்துக் கொண்டது பாஜக. 213 தொகுதிகளில் வென்று நந்திகிராம் தொகுதியில் மம்தா தோல்வியடைந்ததை பாஜகவினர் கிண்டலடித்து வந்தனர்.


 திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் மம்தா பானர்ஜி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் தேர்தலில் தோல்வி அடைந்ததால் 6 மாதத்துக்குள் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானால்தான் மம்தாவால் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்.இந்த சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவானிப்பூர் தொகுதியின் எம்எல்ஏ சோபன்தேப் சட்டோபாத்யாய் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத்தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில்தான் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். மம்தாவை எதிர்த்து பாஜக சார்பாக ப்ரியங்கா டிப்ரேவால் போட்டியிட்டார். கடந்த 30ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது 57 சதவிகித வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில் 21 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் முதல்வர் மம்தா பானர்ஜி பவானிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில்  84,512 வாக்குகள் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்காவைவிட 58,832 வாக்குகளைக் கூடுதலாக பெற்றதாக அறிவிக்கப்பட்டது.  பாஜக சார்பாக போட்டியிட்ட ப்ரியங்கா டிப்ரேவால் 25680 வாக்குகளைப் பெற்றார். 


2011ம் ஆண்டு இதே பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி 54,213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். தற்போது தனது முந்தைய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.


முன்னதாக பவானிபூர் தொகுதியில் மம்தா போட்டியிடுவதால், அவருக்கு எதிராக வேட்பாளர் யாரையும் நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.       

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
ABP Premium

வீடியோ

திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
உரிமைக்காக போராடும் ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கைது செய்து அடைத்து வைப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம் !
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
Trump Putin Zelensky: “உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
“உக்ரைன் அமைதி ஒப்பந்தத்த தடுக்கறது புதின் இல்ல, ஆனா...“; ட்ரம்ப் கூறியது என்ன தெரியுமா.?
America Stops Visa: 75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
75 நாடுகளுக்கு ஆப்படித்த ட்ரம்ப் நிர்வாகம்; குடிவரவு விசாக்கள் நிறுத்தம்; எதற்காக இந்த அதிரடி.?
Iran Trump War?: ''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
''இந்த முறை குறி தப்பாது“; ட்ரம்ப்புக்கு நேரடி மிரட்டல் விடுத்த ஈரான்; அப்போ போர் கன்ஃபார்மா.?!!
Mahindra XUV 7XO, XEV 9S Bookings: அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
அடேங்கப்பா.!! முதல் நாள்லயே இவ்வளவு புக்கிங்கா.?! பட்டையை கிளப்பிய மஹிந்திராவின் XUV 7XO, XEV 9S
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Embed widget