மேலும் அறிய

Congress Protest: திமுகவை விமர்சித்துவிடுவார்கள் என்பதால் தான் வாயில் துணியா? காங்., ஆர்பாட்டத்தில் கலகல கமெண்ட்!

Congress Protest: இது கலகலப்பான விசயம் என்றாலும், சமகால அரசியலோடு அது ஒத்துப்போவதால், கொஞ்சம் சிரிக்கவும், நிறைய சிந்திக்கவும் வைக்கிறது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரில், பேரறிவாளன் நேற்று விடுதலை செய்யப்பட்டார். 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த அவர், பலமுறை பரோலில் வந்தாலும், அவரை விடுதலை செய்ய, அவரது தாய் அற்புதம்மாள் நடத்திய போராட்டம், ஆண்டுகளை கடந்து நேற்று வெற்றி பெற்றது. ஒரு தரப்பினர் அதை கொண்டாடிய நிலையில், ஆளும் திமுக, ‛பேரறிவாளன் விடுதலையாக, தாங்கள் எடுத்த முயற்சி தான் காரணம்’ என்று அதற்கான உரிமையை கோரியது. 

அதிமுக தலைமையோ, ‛நாங்கள் போட்ட விதை தான், பேரறிவாளன் விடுதலையாக காரணம்’ என்று அறிக்கை விட்டது. இன்னும் பிறரும், ‛தங்களுக்கும் இதில் பங்கு உண்டு’ என்பதைப் போல், அறிக்கை விட்டனர். ஆனால், ஒரே ஒரு கட்சி மட்டும், இந்த விடுதலையை கடுமையாக எதிர்த்தது. அது காங்கிரஸ். தங்கள் கட்சியின் தலைவரை கொலை செய்த வழக்கில் கைதான ஒருவர் விடுதலையானதை, அக்கட்சி கடுமையாக சாடியது. 

அதுமட்டுமல்லாது.... நேற்று காங்கிரஸ் கட்சியின் பேஸ்புக் பக்கத்தில், பரபரப்பான அறிக்கை ஒன்றையும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அதில், 

‛‛முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.
கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று சிலர் கூறுகிறார்கள். பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்கிற குரல் ஏன் எழவில்லை ? அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையா ? ராஜிவை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா ? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.
நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாளை (19.5.2022) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு 'வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது' என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன், ’’ என்று , காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. 
 
பேரறிவாளன் வெளிவர நான் தான் காரணம் என்கிறது திமுக. அதே கூட்டணியில் உள்ள காங்கிரஸ், அந்த வருகையை எதிர்க்கிறது. கடுமையாக சாடுகிறது. ஆனாலும், கூட்டணியாய் தொடர்கிறார்கள் என்று ஒரு புறம் விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்க, நேற்று அறிவித்தபடி இன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தலைமையில் ஆர்பாட்டமும் நடந்து முடிந்தது. ஆனால், அங்கு தான் ட்விஸ்ட். 
‛வாயில் துணியை கட்டி’ ஆர்பாட்டம் செய்ய காரணம் என பலருக்கும் கேள்வி இருக்க, காங்கிரஸ் தொண்டர் ஒருவரே அதற்கான பதிலை கூறி, கலகலப்பாக மாற்றியிருக்கிறார். என்னதான், இந்த விவகாரத்தை காங்கிரஸ் எதிர்த்தாலும், திமுகவை விடப்போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. எக்காரணம் கொண்டு, இந்த விவகாரத்தை வைத்து யாராவது திமுகவை சாடிவிடுவார்களோ என்கிற அச்சத்தில் தான், ‛வாயில் துணி’ கட்டும் போராட்டத்தை காங்கிரஸ் தலைவர் அறிவித்தார் என, அக்கட்சி நிர்வாகிகளே வெளிப்படையாக பதிவிட்டுள்ளனர். 

இது கலகலப்பான விசயம் என்றாலும், சமகால அரசியலோடு அது ஒத்துப்போவதால், கொஞ்சம் சிரிக்கவும், நிறைய சிந்திக்கவும் வைக்கிறது. ஒருவேளை அது உண்மையாக கூட இருக்கலாமோ என்றும் சந்தேகிக்க வைக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget