மேலும் அறிய

"உங்கள் மீது சேற்றை அள்ளி வீசுவேன்…", திரிணாமுல் அமைச்சர் கைது விவகாரம்… மம்தா ஆக்ரோஷம்!

"முடிந்தால் இங்கு வந்து பாருங்கள்… முதலைகள் உங்களைக் கடிக்கும், சுந்தரவனக்காடுகளின் வங்கப்புலிகள் கடிக்கும். வடக்கு வங்காளத்தில் உள்ள யானைகள் உங்களை தூக்கி போட்டு மிதிக்கும்"

ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கில் மேற்குவங்கத்தின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். அவரது உதவியாளர் அர்பிதா பானர்ஜி வீட்டில் நடத்திய சோதனையில் 21.90 கோடி ரூபாய் பணம், நகை மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறையின் கைப்பற்றினர். 

கைது நடவடிக்கை

அதனை தொடர்ந்து, சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்த வழக்கில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியை அமலாக்கத்துறையினர் இம்மாதம் 23-ம் தேதி மாலை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மாநில அரசின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் பார்த்தா சாட்டர்ஜி நலமுடம் இருப்பதாக தகவல் அளித்தனர்.

பார்த்தா டிஸ்சார்ஜ்

உடல்நலம் சீரானதை அடுத்து மருத்துவமனையில் இருந்து அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கொல்கத்தா அழைத்து வரப்பட்ட பார்த்தா சாட்டர்ஜியிடம் இன்று அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்க உள்ளனர். பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை வரும் 3-ம் தேதி வரை விசாரணை செய்ய அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், தனது அமைச்சரவையில் உள்ள பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்: Rahul Gandhi Detained: அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் பேரணி - ராகுல் காந்தி கைது

எய்ம்ஸ்-ல் மாற்றிய நோக்கம் என்ன?

இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்த மம்தா பேசுகையில், "நாட்டின் மிகச்சிறந்த நம்பர் ஒன் மருத்துவமனையான எஸ்எஸ்கேஎம்-இல் பார்த்தா சாட்டர்ஜி அனுமதிக்கப்பட்டிருந்தபோது மத்திய அரசுடன் தொடர்பில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்கத்துறை கொண்டு சென்றது ஏன்? அப்படியே செல்ல வேண்டிய சூழல் என்றால் இஎஸ்ஐ மருத்துவமனை, கமண்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லாதது ஏன்? இதன் உள்நோக்கம் என்ன?" என்று கேட்டார்.

யானை மிதிக்கும்

மிகவும் ஆக்ரோஷமாக பேசிய அவர், "இது மேற்குவங்க மக்களை அவமதிக்கும் செயல் இல்லையா? மத்திய அரசு மட்டும் நல்லவர்கள் மற்றும் அனைத்து மாநிலங்களும் திருடர்கள் என்று நினைக்கிறீர்களா? மாநிலங்கள் இருப்பதால் தான் நீங்கள் மத்தியில் இருக்கிறீர்கள். மராட்டியத்தால் இம்முறை எதிர்த்து போரிட முடியவில்லை. மராட்டியத்திற்கு பிறகு சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மேற்குவங்காம் எனக் கூறுகிறீர்கள். முடிந்தால் இங்கு வந்து பாருங்கள்… வங்காள விரிகுடாவை கடந்துதான் வர வேண்டும், முதலைகள் உங்களைக் கடிக்கும். சுந்தரவனக்காடுகளில் உள்ள வங்கப்புலிகள் உங்களை கடிக்கும். வடக்கு வங்காளத்தில் உள்ள யானைகள் உங்களை தூக்கி போட்டு மிதிக்கும்." என்று கூறினார். 

சேற்றை அள்ளி வீசுவேன்

மேலும் பேசிய அவர், "மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் என் கட்சியை உடைத்துவிடலாம், ஆட்சியை கவிழ்த்து விடலாம் என பாஜக நினைத்தால் அது முற்றிலும் தவறு. குறிப்பிட்ட காலத்திற்குள் உண்மை நிச்சயம் வெளிவரும். நான் யாரையும் விடமாட்டேன்… திருடனோ, கொள்ளைக்காரனோ, யாரையும் நான் விடுவதில்லை. அது என் சொந்த மக்களாக இருந்தாலும் சரி. எனது எம்எல்ஏ-க்கள், எம்.பி.க்கள், மந்திரிகளையும் கூட நான் தப்பவிடுவதில்லை. என் மீது நீங்கள் மை வீச முயற்சித்தால் நான் உங்கள் மீது சேற்றை அள்ளி வீசுவேன்", என்றார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தீப்பிடித்த சிறுபான்மையினர் விவகாரம்... கோவையில் சீமான் ஆவேசப் பேச்சு...
தீப்பிடித்த சிறுபான்மையினர் விவகாரம்... கோவையில் சீமான் ஆவேசப் பேச்சு...
BJP Candidates: பாஜகவை பாடாய்படுத்தும் 6 தொகுதிகள் - அண்ணாமலைக்கு ரெண்டுல ஒன்னு கன்ஃபார்ம்? வானதி விடாப்பிடி
BJP Candidates: பாஜகவை பாடாய்படுத்தும் 6 தொகுதிகள் - அண்ணாமலைக்கு ரெண்டுல ஒன்னு கன்ஃபார்ம்? வானதி விடாப்பிடி
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
TVK Vijay Nomination: விஜய் நாளை வேட்புமனுத்தாக்கல்! திருச்சி கிழக்கில் நாளை எங்கே பரப்புரை செய்கிறார்?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Udhayanidhi Net Worth: உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
Embed widget