மேலும் அறிய

அடுத்த மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை - திருவாரூரில் வடிகால்களை தூர்வாரும் பணிகள் தீவிரம்

’’பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மழைநீர் வடிகால்களில் மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளும் முகாமை தமிழக அரசு அறிவித்துள்ளது’’

அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும் என்பதால் தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் உள்ள தூர்வாரும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மெகா தூர்வாரும் முகாம் ஏற்படுத்தப்பட்டு அவை மாவட்ட வாரியாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
 
வடகிழக்கு பருவமழை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் திருவாரூர் மாவட்டம் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றது. குறிப்பாக மழைநீர் அதிகம் குடியிருப்பு பகுதியில் தேங்கி வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் பல்வேறு குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதேபோன்று சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் விளை நிலங்களில் முழுவதுமாக மழை நீர் தேங்கி பயிர்கள் அழுக கூடிய சூழல் உருவாகும். ஒவ்வொரு ஆண்டும் தண்ணீரை வடிய வைப்பதற்கு விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டே தண்ணீரை வடிய வைத்து வருகின்றனர். ஆகையால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வடிகால் வாய்க்கால் அனைத்தையும் முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அடுத்த மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை - திருவாரூரில் வடிகால்களை தூர்வாரும் பணிகள் தீவிரம்
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தென்றல் நகர் பகுதியில் கால்வாய்கள், மழைநீர் வடிகால் ஆகியவைகளை மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளும் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். இந்நிகழ்விற்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் முன்னிலை வகித்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
 
வடகிழக்கு பருவமழை பருவம் காரணமாக பொழியக்கூடிய பருவமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேக்க நிலை ஏற்படா வண்ணமும், அதிகப்படியாக தேங்கும் மழைநீரால் டெங்கு மற்றும் மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும், மேலும் மழைநீரில் சாக்கடை நீரும் கலந்து தேங்குவதால் இதர தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது ஆகையால் வரும் பருவமழையால் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில் 20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை மழைநீர் வடிகால்கள் மெகா தூய்மைப்பணி மேற்கொள்ளும் முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை - திருவாரூரில் வடிகால்களை தூர்வாரும் பணிகள் தீவிரம்
அந்தவகையில், திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களை 100 சதவீதம் தூர்வாரி தூய்மைப்படுத்திட உத்தரவிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார். இந்நிகழ்வில் நகராட்சி ஆணையர் நகராட்சி மேலாளர் கண்ணன் பிரபாகரன், பழனியாண்டவர் திருக்கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் பிரகாஷ், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
Russia Backs India: நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK MDU Conference: முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
முன்கூட்டியே நடைபெறும் தவெக மதுரை மாநாடு; காரணம் என்ன.? விஜய் வெளியிட்ட அறிக்கை
Trump Warns Again: 24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
24 மணி நேரத்தில் ‘மிகக் கணிசமாக‘ வரியை உயர்த்துவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' -  அன்புமணி ராமதாஸ் காட்டம்
‘கர்நாடக அரசிடம் பாடம் படியுங்கள் ஸ்டாலின்' - அன்புமணி ராமதாஸ் காட்டம்
Russia Backs India: நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
நண்பேன்டா.!! இந்தியாவுக்காக களமிறங்கிய ரஷ்யா; அமெரிக்க வரி மிரட்டல் சட்டவிரோதமானது என சாடல்
Nadda Vs Karge: “அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
“அடுத்த 40 வருடங்களுக்கு நீங்கள் எதிர்க்கட்சிதான்“ - நாடாளுமன்றத்தில் காங்கிரஸை வெளுத்துவிட்ட JP நட்டா
PB Balaji JLR CEO: ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO நியமனம்; யார் இந்த தமிழர் P.B. பாலாஜி.?
ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் முதல் இந்திய CEO நியமனம்; யார் இந்த தமிழர் P.B. பாலாஜி.?
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
School Holiday: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை; எந்தெந்த மாவட்டங்களுக்கு? என்ன காரணம்?
Chennai Power Shutdown: சென்னையில ஆகஸ்ட் 6-ம் தேதி புதனன்று மின் தடை ஏற்படப் போகும் இடங்கள் எவை தெரியுமா.?
சென்னையில ஆகஸ்ட் 6-ம் தேதி புதனன்று மின் தடை ஏற்படப் போகும் இடங்கள் எவை தெரியுமா.?
Embed widget