மேலும் அறிய

மயிலாடுதுறையில் மனதை கல்லாக்கிய சம்பவம் - பிளாட்பாரத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை

மயிலாடுதுறை ரயில் நிலைய பிளாட்பாரத்தில் இருந்து மீட்கப்பட்ட பிறந்து 15 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அரசு தத்துவள மையத்தில் குழந்தை பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 15 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்றுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது மாவட்ட குழந்தை பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் அரசு தத்துவள மையத்தில் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், சமூக ஆர்வலர்களிடையே கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை ரயில் நிலையத்தில் கைவிட்டுச் சென்றவர்கள் குறித்து ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கிடந்த குழந்தை

கடந்த மே 26 ஆம் தேதி, மயிலாடுதுறை ரயில் நிலையத்தின் ஐந்தாவது நடைமேடையில், பிறந்து சுமார் 15 நாட்களே ஆன ஓர் ஆண் குழந்தை ஆதரவற்ற நிலையில் அழுதபடி கிடந்துள்ளது. பயணிகளின் கவனத்தை ஈர்த்த அந்தக் குழந்தையின் அழுகுரல், பலரையும் அசைத்துப் பார்த்தது. இதனைக் கண்ட ரயில் பயணிகள் உடனடியாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.


மயிலாடுதுறையில் மனதை கல்லாக்கிய சம்பவம் - பிளாட்பாரத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

தகவல் கிடைத்ததும், ரயில்வே காவல் ஆய்வாளர் சிவ வடிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டார். பின்னர் உடனடியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகள், குழந்தையை பத்திரமாக மீட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பராமரித்து வந்தனர். குழந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.


மயிலாடுதுறையில் மனதை கல்லாக்கிய சம்பவம் - பிளாட்பாரத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை

அரசு தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் 20 நாட்களுக்கும் மேலாகியும், குழந்தைக்கு யாரும் உரிமை கோர முன்வரவில்லை. இதனால் குழந்தையின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித் அறிவுறுத்தலின்படி, குழந்தையை அரசு தத்துவள மையத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மாவட்ட சமூக நல பணியிடங்கள் ஆரோக்கியராஜ், குழந்தை சேவை அமைப்பு ஆற்றுப்படுத்துநர் தீபிகா மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஆகியோர் இணைந்து குழந்தையை பத்திரமாக அரசு தத்துவள மையத்தில் ஒப்படைத்தனர். குழந்தைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், பராமரிப்பையும் தற்போது தத்துவள மையம் செய்து வருகிறது.


மயிலாடுதுறையில் மனதை கல்லாக்கிய சம்பவம் - பிளாட்பாரத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை

இதுகுறித்து பேசிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரஞ்சித், "குழந்தை தற்போது நலமாக உள்ளது. அரசு தத்துவள மையத்தில் குழந்தைக்கு உரிய பராமரிப்பு கிடைக்கும். பெற்றோர்கள் யாரேனும் குழந்தையை விட்டுச் சென்றிருந்தால், அவர்கள் முன்வந்து குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். குழந்தையை கைவிட்டுச் சென்றவர்கள் குறித்த விவரங்களை ரயில்வே போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

சமூக ஆர்வலர்கள் வேதனை

இந்தச் சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர். "வாழ்க்கை குறித்த சரியான புரிதல் இல்லாத சில இளம் வயதினர் தவறான பாதையில் சென்று விடுகின்றனர். பின்னர் அதன்மூலம் ஏற்படும் விளைவுகளை எதிர்கொள்ள முடியாமல், இதுபோன்ற படுபாதக செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் எந்தத் தவறும் செய்யாத இந்த பச்சிளம் குழந்தைகள் பெரிய அளவில் பாதிப்புக்கு ஆளாகி, தங்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாகக் கொண்டுள்ளனர்" என்று அவர்கள் குறிப்பிட்டனர். மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வண்ணம், அரசு சார்பில் இளைஞர்களிடையே விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்த வேண்டும் எனவும், குடும்ப நலக் கல்வி மற்றும் சமூகப் பொறுப்புகள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இளம் தாய்மார்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மனநல ஆதரவு மற்றும் ஆலோசனை சேவைகளை அரசு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


மயிலாடுதுறையில் மனதை கல்லாக்கிய சம்பவம் - பிளாட்பாரத்தில் கிடந்த பச்சிளம் குழந்தை

போலீஸார் தீவிர விசாரணை 

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யார், என்ன காரணத்திற்காக குழந்தையைக் கைவிட்டனர் என்பது குறித்து ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், சந்தேகப்படும் நபர்கள் குறித்தும், அப்பகுதியில் உள்ள குடும்பங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தையின் தாயாரைக் கண்டறிந்து, இந்த கொடூரச் செயலுக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் எதிர்காலம் குறித்த அக்கறையும், இதுபோன்ற செயல்களைத் தடுப்பதற்கான சமூகப் பொறுப்பும் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதம் எழுந்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ABP Premium

வீடியோ

Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Smriti Mandhana Wedding Cancelled: ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
ஸ்மிருதி மந்தனா-பலாஷ் திருமணம் ரத்து; ஸ்டேட்டஸ் போட்டு உறுதி செய்த கிரிக்கெட் ஸ்டார்
Smriti Mandhana: ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்து செய்யப்பட்டது ஏன்.? இது தான் காரணமா.?
Chennai Indigo Flight Issue: என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
என்னது ஒரே நாள்ல 100 விமானங்கள் ரத்தா.? சென்னை பயணிகளை தவிக்கவிட்ட இண்டிகோ; என்னதான் நடக்குது.?!
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Hero Splendor+ vs Hero HF Deluxe: தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
தினசரி பயன்பாட்டிற்கு எந்த பைக் சிறந்தது.? வாங்குறதுக்கு முன்னாடி விவரங்கள தெரிஞ்சுக்கோங்க
Embed widget