மேலும் அறிய

Chenab Railway Bridge: 1400 கோடி பிரம்மாண்டம்.. ஈபிள் டவரை மிஞ்சிய செனாப் பாலம்.. இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

Chenab Railway Bridge: பொறியியல் அற்புதமான செனாப் பாலம், பாரமுல்லாவை ஜம்முவுடன் உதம்பூர்-கத்ரா-காசிகுண்ட் பாதை வழியாக இணைக்கிறது.

உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தை இன்று ஜூன் 6 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து  வைக்கவுள்ள நிலையில் இந்த பாலத்தின் சிறப்பு என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம். 

செனாப் பாலம்:

உலகின் மிக உயரமான ரயில்வே வளைவு பாலமான செனாப் பாலம், இது கத்ரா வழியாக புது டெல்லிக்கும் காஷ்மீருக்கும் இடையே நேரடி ரயில் இணைப்பை ஏற்படுத்தி தர உள்ளது.  272 கீ.மி நீளம் கொண்ட உதம்பூர்-பாரமுல்லா ரயில் பாதையில் 118 கி.மீ கொண்ட காசிகுண்ட்-பாரமுல்லா பகுதி அக்டோபர் 2009 -ல் மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

அதே போல் இரண்டாம் கட்டமாக 18கி.மீ நீளம் கொண்ட காசிகுண்ட் மற்றும் பனிஹால் பாதை ஜூன் 2013 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது, 2014 ஆம் ஆண்டு ஜூலையில் 25 கிமீ நீளமுள்ள உதம்பூர் கட்ரா பாதையும் பயன்ப்பாட்டுக்கு வந்தது. பனிஹால்-காசிகுண்ட் வரையிலான 48.1கிமீ நீளமுள்ள பாதை கடந்த ஆண்டு செயல்பாட்டுக்கு வந்தது.

மீதமுள்ள 63 கி.மீ நீளமுள்ள கத்ரா-சங்கல்தான் பிரிவு ஜூன் 6 ஆம் தேதி செயல்பாட்டுக்கு வர உள்ளது, இதை பிரதமர் மோடி நாளை திறக்கவுள்ளார். 

செனாப் பாலத்தின் மதிப்பீடு:

சுமார் ரூ.1,400 கோடி செலவில் கட்டப்பட்ட செனாப் பாலம், உலகின் மிக உயரமான ரயில் மற்றும் வளைவு பாலமாகும், இது ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரமும், பாரிஸின் சின்னமான ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமும் கொண்டது.

சிறப்புகள்:

  • பொறியியல் அற்புதமான செனாப் பாலம், பாரமுல்லாவை ஜம்முவுடன் உதம்பூர்-கத்ரா-காசிகுண்ட் பாதை வழியாக இணைக்கிறது. இந்த பாதையின் பயண நேரம் சுமார் ஆறரை மணி நேரமாகும். 
  • இந்த பாலமானது மணிக்கு 250 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசினாலும் அதை  தாங்கும் திறன் கொண்டது.
  • ரிக்டர் அளவுகோலில் 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தையும் தாங்கும் வகையில் இந்த பாலமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.  இந்த பாலத்தின் ஆயுட்காலம் 120 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இதன் கட்டுமானத்தில் சுமார் 30,000 மெட்ரிக் டன் ஸ்டீஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் திட்டத்தின்(USBRL) நீளம் சுமார் 272 கிலோமீட்டர்கள். இந்த 272 கி.மீ.களில், கிட்டத்தட்ட 36 சுரங்கப்பாதைகள் கிட்டத்தட்ட 119 கி.மீ நீளத்துடன் கட்டப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் சுமார் 1,000 பாலங்கள் உள்ளன.
  • அதிவேகக் காற்று, தீவிர வெப்பநிலை, நில அதிர்வு  மற்றும் நீர்நிலை சவால்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பாதுகாப்பு மற்றும் ஆயுள் சோதனைகளிலும் இந்தப் பாலம் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றுள்ளது.
  • இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன, ஆனால் 2008-09 ஆம் ஆண்டில் அந்தப் பகுதியில் அதிக வேகத்தில் காற்று வீசியதால் ரயில் பயணிகளின் பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக நிறுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 2024 இல் நிறைவடைந்தது.
  • இந்த ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி, இந்திய ரயில்வே, செனாப் பாலத்தில் எட்டு பெட்டிகள் கொண்ட மெமு ரயிலின் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது, இதன் மூலம் காஷ்மீரில் உள்ள ரியாசியிலிருந்து பாரமுல்லா வரையிலான பாதையில் ரயில் சேவைகள் தொடங்க வழி வகுத்தது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Embed widget