மேலும் அறிய

மயிலாடுதுறை அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை - பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் புகார்

மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த மாணவியை பள்ளி நிர்வாகம் அவமானம் படுத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் பெற்றோர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தனியார் பள்ளி மாணவி

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தர்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ராஜலெட்சுமி, இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்களது மகள் மயிலாடுதுறை அருகே மேலையூரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.


மயிலாடுதுறை அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை - பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் புகார்

தூக்கிட்டு தற்கொலை 

இந்நிலையில் நேற்றுமுன்தினம் பள்ளியில் மாதிரி தேர்வு நடைபெற்றுள்ளது. பள்ளி முடிந்து மாலை வீட்டுக்கு வந்த மாணவி  பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோர் வீட்டிற்கு வந்த போது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் இதுகுறித்து மயிலாடுதுறை காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அடுத்து மாணவியின் வீட்டிற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை போலீசார் மாணவி உடலை மீட்டு  உடற்கூறு ஆய்வுக்காக  மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மயிலாடுதுறை அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை - பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் புகார்

பள்ளி மீது குற்றச்சாட்டு 

இந்நிலையில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் வந்த போது மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் பள்ளி நிர்வாகம் மாணவியை அவமானப்படுத்தியதால் தான் தங்களது மகள் தூக்கிட்டு இறந்ததாக ஆட்சியரிடம் கண்ணீர் மல்க தெரிவித்தனர். நன்றாக படிக்கக்கூடிய மாணவியை தேர்வில் பிட் அடித்ததாக கூறி அனைத்து மாணவ, மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், அதனை தாங்காமல் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார்  தெரிவித்தனர்.

INDvsSL: பயிற்சியாளராக வெற்றியுடன் தொடங்குவாரா கம்பீர்? இந்தியா - இலங்கை இன்று மோதல்!

மேலும் மாணவி இறப்புக்கு காரணமாக  பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியரின் காலில் விழுந்து கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு உறுதியளித்து சென்றார். இச்சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.


மயிலாடுதுறை அருகே மாணவி தூக்கிட்டு தற்கொலை - பள்ளி நிர்வாகம் மீது பெற்றோர் புகார்

பள்ளி தரப்பில் விளக்கம் 

மாணவி பிட் அடித்து மாட்டிகொண்டது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வீட்டில் நன்றாக படிக்க சொன்னதாகவும், வகுப்பறை வெளியில் நிற்க வைக்கவில்லை. மாணவி உடனே வீட்டிற்கு சென்றதாகவும், தங்களிடம் அது தொடர்பான ஆதாரம் உள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்

இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய  மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aniket Verma | ”தடைகள் எதையும் மகனே வென்று வா” தாய்க்கு செய்த சத்தியம்! யார் இந்த அனிகேத் வர்மா?ADMK BJP Alliance | ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?செங்கோட்டையனை வைத்து செக்! BACK அடிக்கும் எடப்பாடி | Sengottaiyan | Edappadi Palanisamy | Amishah | Rajiya Sabha SeatSengottaiyan | செங்கோட்டையனுக்கு V. K. Pandian:

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய  மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
Pakistan Earthquake: பாகிஸ்தானில்  திடீர் நிலநடுக்கம்!
Pakistan Earthquake: பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்!
சென்னையில் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வெயில் காலத்தில் ஜில் அப்டேட்! சென்னை மாநகராட்சியின் அசத்தல் ப்ளான்!
சென்னையில் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வெயில் காலத்தில் ஜில் அப்டேட்! சென்னை மாநகராட்சியின் அசத்தல் ப்ளான்!
Nidhi Tewari IFS: பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளர் நிதி திவேரி! யார் இந்த இளம் IFS அதிகாரி?
Nidhi Tewari IFS: பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளர் நிதி திவேரி! யார் இந்த இளம் IFS அதிகாரி?
சினிமா ஆசைகாட்டி வன்கொடுமை...கும்பமேளா வைரல் பெண்ணை வைத்து படம் இயக்கிவந்த இயக்குநர் கைது
சினிமா ஆசைகாட்டி வன்கொடுமை...கும்பமேளா வைரல் பெண்ணை வைத்து படம் இயக்கிவந்த இயக்குநர் கைது
Embed widget