மேலும் அறிய

பத்திரிகைகளை பாதுகாப்பதில் கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார் - அமைச்சர்  சாமிநாதன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் செய்தித்துறை சார்பில் கட்டப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் தமிழிசை மூவர் மணிமண்டபம் மற்றும் மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை அரங்கத்தையும் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்ட தமிழிசை மூவர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அதற்கு பின்பு வந்த ஆட்சியாளர்கள் இந்த மணிமண்டபத்தை சீரமைக்காததால் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டது.



பத்திரிகைகளை பாதுகாப்பதில் கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார் - அமைச்சர்  சாமிநாதன்

இந்நிலையில் தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று 95 சதவீத பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.  இந்த மணிமண்டபம் வரும் காலங்களில் சீர்காழி பகுதியில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதை போல் ஆண்டுதோறும் தமிழிசை மூவர்களின் நினைவை போற்றும் வகையில் தமிழிசை மூவர் விழா முறைப்படி நடக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படும்போது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அண்மையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் செய்தியாளர் தாக்கப்பட்ட போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் காவல்துறைக்கு  உத்தரவிட்டதன் அடிப்படையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.



பத்திரிகைகளை பாதுகாப்பதில் கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார் - அமைச்சர்  சாமிநாதன்

ஜனநாயகத்தில் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகையை பொறுத்தளவு  முத்தமிழ் அறிஞர் கலைஞர் எப்படி பாதுகாத்தாரோ அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெளிவாக, உறுதியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். சட்டத்தின் அடிப்படையில் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். மேலும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு குறித்த தனி சட்டம் கொண்டு வருவது பற்றி செய்தியாளர்களின் கோரிக்கை குறித்த கேள்விக்கு, அதற்கு ஒன்றிய அரசிடம் தான் வழிமுறைகள் உள்ளது. இருந்த போதிலும் தமிழக அரசு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குறித்து சட்டத்தை செம்மை படுத்தி, எதிர்காலத்தில் பத்திரிக்கையாளர்கள் இதுபோன்று தாக்கப்படமால் இருக்க உரிய வழிகளை ஏற்படுத்துவோம் என்றார்.  



பத்திரிகைகளை பாதுகாப்பதில் கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார் - அமைச்சர்  சாமிநாதன்

மேலும் அவர் கூறுகையில், கவிஞர் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்ததை அடுத்து செய்தித்துறை சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.  தமிழகத்தில் சுதந்திரபோராட்ட வீரர்கள், தமிழ்மொழி தியாகிகள், மக்களுக்காக உழைத்த தலைவர்களின் சிலைகள் அமைக்கபப்ட்டு வருகிறது. சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பு பணி மற்றும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை நினைவு அரங்கம் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தேன். பொதுப்பணித்துறை மூலம் நடைபெறும் பணியில் மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் ஒருசில மாற்றம் செய்யலாமா என்று ஆலோசனை செய்கிறோம். மக்கள் பயன்பாடு மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் இந்த அரங்கை பயன்படுத்தும் நோக்கில்  அமைக்கப்பட்டு வருகிறது.



பத்திரிகைகளை பாதுகாப்பதில் கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் செயல்படுவார் - அமைச்சர்  சாமிநாதன்

வணிக நிறுவனங்களில் பெயர் பலகையில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டுமென்று சட்டம் இருக்கிறது. வரும் 2-ம் தேதி மக்களிடம் வழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். தொடர்ந்து பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ்வளர்ச்சித்துறை, தொழிலாளர் துறைசார்பில் ஆய்வு செய்து தமிழில் பெயர் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தில்லையாடி வள்ளியம்மை நினைவு மணிமண்டபம் வரும் நிதியாண்டில் சீரமைப்பதற்கு நிதிநிலைக்கு ஏற்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இவ்வாய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி , மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம்,  மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார்,  சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.வ. யுரேகா மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Mayiladuthurai Power Shutdown (20.06.2026) : கடைத்தெரு முதல் கலெக்டர் ஆபீஸ் வரை: சனிக்கிழமை காலை 9 டு மாலை 5 என்ன நடக்கும்? முழு விவரம்!
Mayiladuthurai Power Shutdown (20.06.2026) : கடைத்தெரு முதல் கலெக்டர் ஆபீஸ் வரை: சனிக்கிழமை காலை 9 டு மாலை 5 என்ன நடக்கும்? முழு விவரம்!
Mayiladuthurai Power Shutdown (18.06.2026) : மயிலாடுதுறை மக்களே மகிழ்ச்சி செய்தி! இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை திடீரென ரத்து!
Mayiladuthurai Power Shutdown (18.06.2026) : மயிலாடுதுறை மக்களே மகிழ்ச்சி செய்தி! இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை திடீரென ரத்து!
Mayiladuthurai Power Shutdown (18.06.2026) : உங்க ஊர் இதுல இருக்கா? மயிலாடுதுறையில் ஜூன் 18-ல் 8 மணி நேரம் பவர் கட் – முழு லிஸ்ட் இதோ!
Mayiladuthurai Power Shutdown (18.06.2026) : உங்க ஊர் இதுல இருக்கா? மயிலாடுதுறையில் ஜூன் 18-ல் 8 மணி நேரம் பவர் கட் – முழு லிஸ்ட் இதோ!
பெண்களின் பாதுகாப்பிற்காக ஒலித்த ஒற்றைக் குரல்! சீர்காழி நீதிமன்றத்தையே திரும்பிப் பார்க்க வைத்த வெள்ளியங்கிரி!
பெண்களின் பாதுகாப்பிற்காக ஒலித்த ஒற்றைக் குரல்! சீர்காழி நீதிமன்றத்தையே திரும்பிப் பார்க்க வைத்த வெள்ளியங்கிரி!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
C Mahendran CPI: தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
தவெகவில் இணைந்தது ஏன்.? இ.கம்யூனிஸ்ட் சி.மகேந்திரன் சொன்ன முக்கிய காரணம்
C Mahendran Joins TVK: தவெகவில் இணைந்தார் சி.மகேந்திரன்.! கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த விஜய்
தவெகவில் இணைந்தார் சி.மகேந்திரன்.! கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த விஜய்
TAMILNADU RAIN ALERT : அடுத்த 2 மணி நேரம்.! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.? வெதர்மேன் அலர்ட்
அடுத்த 2 மணி நேரம் .! சூறைக்காற்று, இடி, மின்னலோடு வெளுக்கப்போகுது மழை- எந்த எந்த மாவட்டங்கள்.?
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
மாலையில் நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! பல்டி அடித்த தங்கம் விலை- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!
EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி
Kovai Neet Student : நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?
நீட் தேர்வு பயம்.! கோவை மாணவி தற்கொலை... தந்தை மொபைலுக்கு வந்த அந்த 'கடைசி மெசேஜ்' என்ன?"
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
எம்ஜிஆர், கலைஞர், ஜெ., ஈபிஎஸ், ஸ்டாலின் யாராலும் சாத்தியம் ஆகாதது விஜயால் சாத்தியம்; அன்புமணி உருக்கம்
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
CA Final Result: சிஏ இறுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு: காண்பது எப்படி? தேர்ச்சி விகிதம், டாப்பர் லிஸ்ட் இதோ!
Embed widget