மேலும் அறிய

அதிகாரிகள் இடையே ஏற்பட்ட குழப்பம் - பாதிக்கப்பட்ட விவசாயிகள்; மயிலாடுதுறையில் அவலம்....!

குளிச்சாறு வாய்க்கால் தூர்வாராப்படாததால் 300 ஏக்கர்  சம்பா பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குளிச்சாறு வாய்க்கால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா? ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளதா? என்ற குளறுபடியால் வாய்க்கால் தூர்வாராப்படாததால் 300 ஏக்கர்  சம்பா பயிர்கள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழை நீர் சூழும் அபாயம் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை காரணமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் நடவு செய்த இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குளிச்சாறு கிராமத்தில் உள்ள முக்கிய வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்து வருகிறது‌.  இதனால் மழைநீர் வடியாமல் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

Convertible Vehicle: அடடேய்ய்..! ஆட்டோக்குள்ள ஸ்கூட்டர், சர்ஜ் எஸ்32 - உலகின் ஃபர்ஸ்ட் கிளாஸ் கன்வெர்டபள் வாகனம்


அதிகாரிகள் இடையே ஏற்பட்ட குழப்பம் - பாதிக்கப்பட்ட விவசாயிகள்; மயிலாடுதுறையில் அவலம்....!

எம்எல்ஏ ஆய்வு 

இந்த சூழலில் மழை நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரிடம் மனு அளித்துள்ளனர். அதனை அடுத்து மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜகுமார் குளிச்சார் வாய்க்காகலை மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டார். அப்போது அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில்; குளிச்சாறு வாய்க்கால் முறையாக தூர்வாரப்படவில்லை, பல இடங்களில் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சிறிய கன்னிபோல் இருப்பதால் சிறிய மழை பெய்தாலே தண்ணீர் வடிவதற்கு வழியின்றி நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர். 

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு


அதிகாரிகள் இடையே ஏற்பட்ட குழப்பம் - பாதிக்கப்பட்ட விவசாயிகள்; மயிலாடுதுறையில் அவலம்....!

குழப்பத்தில் அதிகாரிகள் 

அப்போது சட்டமன்ற உறுப்பினருடன் ஒன்றிய ஆணையர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் திவாகர், பொதுப்பணித்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது குளிச்சாறு வாய்க்கால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா? ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளதா? என்று அதிகாரிகளிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனை கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாய்க்கால் எந்த துறை பராமரிப்பில் இருந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரியாமல் பணியாற்றுவது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விளைநிலங்கள் பாதிப்படைவதால் குளிச்சாறு வாய்க்காலை உடனடியாக தூர்வாரி மழைநீர் வடிவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ ராஜகுமார் ஆலோசனைகள் வழங்கினார். 

இவ்வளவு பாரம்பரிய நெல் வகைகளா ? கேட்டாலே ஆச்சரியம் தான்.. தமிழ்நாடு முழுவதும் விதை சப்ளை


அதிகாரிகள் இடையே ஏற்பட்ட குழப்பம் - பாதிக்கப்பட்ட விவசாயிகள்; மயிலாடுதுறையில் அவலம்....!

விவசாயிகள் கோரிக்கை 

மேலும் இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், குளிச்சாறு கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த வயல்களில் பிரதான வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படவில்லை, இதனால் சிறிய மழைபெய்தாலே நெற்பயிர்களில் தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. பொதுப்பணித்துறை தூர்வார வேண்டுமா? ஊராட்சி ஒன்றியம் சார்பில் தூர்வாரப்பட வேண்டுமா என்று அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எது எப்படி இருந்தாலும் பாதிக்கப்படுவது விவசாயிகளில்தான். அது மற்றும் இன்றி உடனடியாக கனமழை பெய்வதற்குள் குளிச்சாறு வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை மற்றும் செடிகளை அகற்றினால் தான் மழைகாலத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும். ஆகையால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் இது குறித்து போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
கோடியக்கரை சரணாலயத்திற்கு வரப்போகும் புதிய மாற்றங்கள்: நாகை ஆட்சியரின் ‘ஸ்பாட் விசிட்’ பின்னணி!
கோடியக்கரை சரணாலயத்திற்கு வரப்போகும் புதிய மாற்றங்கள்: நாகை ஆட்சியரின் ‘ஸ்பாட் விசிட்’ பின்னணி!
வலைக்குள் சிக்கிய விசித்திர உருவம்... கடல் நீரை ஊற்றிப் பார்த்த மீனவர்களுக்குக் காத்திருந்த மெய்சிலிர்க்கும் காட்சி!
வலைக்குள் சிக்கிய விசித்திர உருவம்... கடல் நீரை ஊற்றிப் பார்த்த மீனவர்களுக்குக் காத்திருந்த மெய்சிலிர்க்கும் காட்சி!

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
ஒரே சார்ஜில் 109 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Numeros n-First இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா?
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
சென்னை மக்களே.! ஜூலை 13 (13.07.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுது.? இதோ விவரங்கள்
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
Kia Hybrid: முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
Embed widget