மேலும் அறிய

'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...

மயிலாடுதுறை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஷாஜகானின் அரசு காரில், யாருமில்லாத நிலையிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஏசி இயங்கிய, டீசல் விரயமான சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நடைபெற்ற கல்லூரி பட்டமளிப்பு விழா ஒன்றில் அமைச்சர் பங்கேற்ற நிலையில், வெளியேயிருந்த அவரது அரசு காரில் யாருமில்லாத போது ஏசி (குளிரூட்டும் சாதனம்) இயங்குவதற்காக இன்ஜின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுத்துறைகளில் சிக்கன நடவடிக்கையை வலியுறுத்தும் காலத்தில், மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்படும் எரிபொருள் இவ்வாறு விரயம் செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பட்டமளிப்பு விழாவும் சர்ச்சையும்

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவிலில் இயங்கி வரும் ஒரு தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா இன்று  ஆகஸ்ட் 31-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தார். அமைச்சர் வருகையையொட்டி, கல்லூரி நுழைவாயில் பகுதியில் அவரது அரசு கார் நிறுத்தப்பட்டிருந்தது. விழா அரங்கினுள் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தன.

ஆளில்லாத காரில் இயங்கிய இன்ஜின்

விழா முடிவடைவதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் முன்னதாகவே, அமைச்சரின் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இன்ஜின் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தது. கார் கதவுகள் அடைக்கப்பட்டு, உள்ளே ஓட்டுநரோ அல்லது வேறு யாருமோ இல்லாத நிலையில், குளிரூட்டும் சாதனம் (AC) மட்டுமே தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. நிகழ்ச்சி முழுமையாக நிறைவடைந்து, விழா அரங்கிற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிறகே அமைச்சர் தனது காரில் ஏறிப் புறப்பட்டார். அதுவரை, அதாவது சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, யாருமில்லாத அந்த காரில் இன்ஜினும் குளிரூட்டும் சாதனமும் இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருந்தது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

மத்திய அரசின் சிக்கன உத்தரவும் மாநில நிலையும்

அரசுத் துறைகளில் செலவுகளைக் குறைக்கும் வகையில், ஒரே நேரத்தில் பல துறைகளை கவனிக்கக்கூடிய உயர்மட்ட அரசுச் செயலாளர்கள் கூட ஒரு காரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் சமீபத்தில் மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. மத்திய அரசு அரசுத்துறை செலவினங்களில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை வலியுறுத்தி வரும் வேளையில், மாநில அமைச்சர் ஒருவர் பங்கேற்ற விழாவில், வெறும் குளிரூட்டும் வசதிக்காக மட்டும் டீசல் வீணடிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக ஆர்வலர்களின் கண்டனக் குரல்

யாருமில்லாத காரில் ஏசி இயங்குவதற்காக கார் இன்ஜின் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த காட்சிகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியாகி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், "அமைச்சரின் சொகுசுக்காகவும், அவர் ஏறும் போது கார் குளுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்படும் டீசலை இப்படி விரயம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது.

நாட்டின் எரிபொருள் வளத்தைச் சேமிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும், இதுபோன்று பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வது வேதனையளிக்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் டீசல் விரயம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஆடம்பரப் போக்கைத் தவிர்க்க வேண்டும். ஓட்டுநர்களுக்கும் இதுகுறித்த உரிய விழிப்புணர்வை அரசு வழங்க வேண்டும்," என வலியுறுத்தினார்.

அரசின் சிக்கனக் கொள்கைகள் வெறும் காகித அளவிலேயே நிற்காமல், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அன்றாடச் செயல்பாடுகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

உங்கள் குடும்ப தகவல் பதிவாகிவிட்டதா? மயிலாடுதுறை மக்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..!
உங்கள் குடும்ப தகவல் பதிவாகிவிட்டதா? மயிலாடுதுறை மக்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு..!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? மயிலாடுதுறையில் மாத சம்பளம் ₹35,000-ல் அரசுத் திட்ட வேலை - முழு விவரம்!
ஆழ்வார் காய்கறி பயிரிட்ட பெருந்தோட்ட கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா - ஆதிகேசவ பெருமாள் அருளை பெற்ற பக்தர்கள்..!
ஆழ்வார் காய்கறி பயிரிட்ட பெருந்தோட்ட கிராமத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம் விழா - ஆதிகேசவ பெருமாள் அருளை பெற்ற பக்தர்கள்..!
வானில் வட்டமிட்ட கருடன்... சேத்திரபாலபுரம் பெருமாள் கோயில் பக்தர்கள் பரவசம்..
வானில் வட்டமிட்ட கருடன்... சேத்திரபாலபுரம் பெருமாள் கோயில் பக்தர்கள் பரவசம்..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Property Tax : இனி ஒரு கட்டிடமும் தப்பாது.! சொத்து வரியை வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்- என்ன தெரியுமா.?
இனி ஒரு கட்டிடமும் தப்பாது.! சொத்து வரியை வசூலிக்க அரசு போட்ட மாஸ்டர் பிளான்- என்ன தெரியுமா.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
Embed widget