மேலும் அறிய

இவ்வளவு பாரம்பரிய நெல் வகைகளா ? கேட்டாலே ஆச்சரியம் தான்.. தமிழ்நாடு முழுவதும் விதை சப்ளை

170 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாத்து வருவதாகவும், தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு விதைகள் தருவதாகவும் திட்ட இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகே சொக்கன் கொள்ளை என்ற கிராமம் அமைந்துள்ளது.‌ இந்த கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது.  


இவ்வளவு பாரம்பரிய நெல் வகைகளா ? கேட்டாலே ஆச்சரியம் தான்.. தமிழ்நாடு முழுவதும் விதை சப்ளை

பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு மையத்தில், இங்கு மூன்று முக்கியமான பணிகள் நடைபெற்று வருகிறது. பாரம்பரிய நெல்கள் பாதுகாப்பது, பாரம்பரிய நெல் ரகங்களில் விதை உற்பத்தி, இயற்கை விவசாயத்திற்கான மாதிரி பண்ணை ஆகியவை இந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது. 

பாரம்பரிய நெல் ரகங்கள்

இந்த இடத்தில் சுமார் 172 பாரம்பரிய நெல் ரகஙகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. விதை போட்டு சாகுபடி செய்து ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்து வருகிறோம்.‌ மிக முக்கிய விதை உற்பத்தி இடமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கு பாதுகாக்கப்பட்டு வரும் நெல் ரகங்களில் 50க்கும் மேற்பட்ட நெல் ரகங்களுக்கு சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 


இவ்வளவு பாரம்பரிய நெல் வகைகளா ? கேட்டாலே ஆச்சரியம் தான்.. தமிழ்நாடு முழுவதும் விதை சப்ளை

மிக முக்கியமான பாரம்பரிய நெல் ரகங்களுக்கு விதை உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும், உள்ள விவசாயிகள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளுக்கும் உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றனர்.‌ இந்த மையம் சார்பில் பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

என்னென்ன ரகங்கள் உள்ளன ?

இந்த மையத்தில் அடுக்கு நெல், அனந்தனூர் சன்னா, ஒரிசா வாசனை சீரகசம்பா, கருடன் சம்பா, கிச்சிலி சம்பா, குருவை களஞ்சியம், காட்டுயாணம், வெள்ளை மிளகு சம்பா, திருநெல்வேலி கிச்சிலி, சேலம் சம்பா, சிவப்பு கவனி, செங்கல்பட்டு சிறுமணி, தங்க சம்பா உள்ளிட்ட 170 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்கள் சாகுபடி செய்து விதை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 


இவ்வளவு பாரம்பரிய நெல் வகைகளா ? கேட்டாலே ஆச்சரியம் தான்.. தமிழ்நாடு முழுவதும் விதை சப்ளை

இந்த மையத்தில் விதை மட்டுமில்லாமல் இயற்கை பண்ணை அமைந்திருப்பதால், அதன்மூலம் இயற்கை உரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. இந்த மையத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து விவசாயிகளுக்கு எவ்வாறு அதை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கி வருகின்றனர். ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காக , அதற்கு மாற்றாக இருக்கும் இயற்கை உரங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது. 

விவசாயிகளுக்கு பயிற்சி 

பாரம்பரிய நெல் ரகங்கள் பயிர் செய்த பிறகு அறுவடை முடிந்த பிறகு, என்ன மாதிரியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. பிறகு விவசாய உற்பத்தி பொருட்களில் பாதிப்பு ஏற்படுவது என பல புள்ளி விவரங்கள் தெரிவித்து வரும் நிலையில், அறுவடை பிறகு விவசாயிகள் என்ன மாதிரியான பதப்படுத்துதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த மையத்தில் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.‌ மேலும் இந்த மையத்தில் பெண்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இவ்வளவு பாரம்பரிய நெல் வகைகளா ? கேட்டாலே ஆச்சரியம் தான்.. தமிழ்நாடு முழுவதும் விதை சப்ளை

இதுகுறித்து திட்ட இயக்குனர் சுப்பிரமணியன் கூறுகையில், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாக உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை இந்த மையத்தில் பாதுகாப்பு செய்து விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். இதுபோக இந்த மையத்தின் மூலம் ஏராளமான விவசாயிகளுக்கு இயற்கை உரம் குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இன்றைய காலத்தில் உணவே மருந்து என இருக்க வேண்டும் என்றால், பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அதை இந்த மையம் சிறப்பாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !
மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... ரூ.3.12 கோடி மதிப்பீட்டில் 58 கால்வாய் மறுசீரமைப்புப் பணி !
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
விவசாயிகளின் நண்பன் சிலந்திகள்... தீமை செய்யும் பூச்சிகளை வேட்டையாடும் வேட்டைக்காரன்
விவசாயிகளின் நண்பன் சிலந்திகள்... தீமை செய்யும் பூச்சிகளை வேட்டையாடும் வேட்டைக்காரன்
கருகும் குறுவை கனவுகள்! சான்றிதழ் தர மறுக்கும் விஏஓக்கள்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய விவசாயிகள்
கருகும் குறுவை கனவுகள்! சான்றிதழ் தர மறுக்கும் விஏஓக்கள்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கதறிய விவசாயிகள்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
அதிர்ச்சி! நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள்; கல்வித்தரம்? இடைநிற்றல்? UDISE அறிக்கை
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
TN Fact Check: தமிழ்நாடு அரசு இலவச பயிற்சிக்கு 8 ஆயிரம் கட்டணம் வசூல்? நடந்தது என்ன?
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
துணைவேந்தர் தேடல்குழுவில் 5 உறுப்பினர்கள்? அரசின் அதிகாரத்தை அடகு வைப்பதா? அன்புமணி கேள்வி
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
வேடிக்கை பார்த்த திமுக.. பறிபோன மருத்துவக்கல்லூரி இடங்கள்.. நீதிமன்றம் செல்லும் தவெக அரசு!
Upcoming Kia SUV: கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கியாவின் அடுத்த நான்கு எஸ்யுவிகள் என்ன? EV, ஹைப்ரிட், 7 சீட்டர் - விலை, அம்சங்கள் எப்படி?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
கொஞ்சம் கூட கூச்சம் இல்லையா?.. நயினார் நாகேந்திரனை சாடிய மாணிக்கம் தாகூர்.. என்ன நடந்தது?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
ரூ.20 கோடி தங்க மோசடி ; சென்னை பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது !! பின்னணி என்ன ?
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
மருத்துவக் கல்விக்கு ஆபத்து! 700 எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோகும் அபாயம்- புது கல்லூரிகளை அமைக்க கோரிக்கை!
Embed widget