Ration Shop Fingerprint : மிஸ் பண்ணாதீங்க.! ரேஷன் கடையில் கைவிரல் பதிவு செய்ய லாஸ்ட் சான்ஸ்- வெளியான முக்கிய அறிவிப்பு
RATION SHOP : ரேஷன் கார்டில் கைவிரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ரேஷன் கடையில் கைவிரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

ரேஷன் கார்டும்- அரசின் திட்டங்களும்
தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 916 நியாய விலை கடைகளில் உள்ள 2 கோடியே 28 லட்சத்து 12,942 ரேஷன் கார்டுகளுக்கு மானிய விலையிலும், இலவசமாகவும் அரிசி, பச்சரிசி, சக்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் அட்டை உணவுப்பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அடையாள ஆவணமாகவும் உள்ளது. குறிப்பாக மழை வெள்ளம் பேரிடர் காலத்தில் ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே நிவாரண உதவியானது வழங்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் தற்போது மகளிர்களுக்கு மாதம், மாதம் வழங்கப்பட்டு வரும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டு- கைவிரல் பதிவு கட்டாயம்
இந்த உரிமை தொகையை பெற ரேஷன் கார்டு கட்டாயமாக உள்ளது. எனவே மகளிர் உரிமை தொகையை பெறுவதற்காகவே 4 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து விணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரம் ரேஷன் கார்டுகளை சிலர் தவறாக பயன்படுத்துவதாகவும், ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று ரேஷன்கார்டுகள் வைத்திருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலி ரேஷன்கார்டுகளை நீக்கும் வகையில், குடும்ப உறுப்பினர்கள் ஆதார் ஆவணங்கள் மூலம் இ கே ஒய் சி (e-kyc) பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
பதிவு செய்யாதவர்களின் பெயர் நீக்கம்
உரிய வகையில் இ கே ஒய் சி (e-kyc) பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் நீக்கப்படும் எனவும் கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரேஷன்கடைகளில் இ கே ஒய் சி (e-kyc) பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு துறையின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் (ஆகஸ்ட் 2-ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் இப்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
ரேஷன் கடையில் சிறப்பு முகாம்
எனவே, அரசின் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விரல் ரேகைப் பதிவை விடுதலின்றி முழுமையாக பதிவு செய்ய வேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் உள்ளவர்கள் தங்களது விரல் ரேகையை பதிவு செய்யவில்லையென்றால் கார்டில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படுவார்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி கை விரல் ரேகையை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
ட்ரெண்டிங் செய்திகள்






















