மேலும் அறிய

நான்கு வழிச்சாலை பணியால் துண்டிக்கப்பட்ட விளைநிலங்கள் - போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

மயிலாடுதுறை அருகே விளை நிலங்களுக்கு செல்ல நான்கு வழிச்சாலையில் சுரங்கம் அமைத்து இணைப்பு சாலை ஏற்படுத்தி தர வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை வழியாக செல்லும் விழுப்புரம் நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையால் விளை நிலங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டதாக கூறி அப்பகுதி விவசாயிகள் நான்கு வழிச்சாலையில் சுரங்கம் அமைத்து இணைப்பு சாலை ஏற்படுத்தி தர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை 

மயிலாடுதுறை மாவட்டத்தின் வழியே விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலை விரிவாக்க பணிகள், பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தரங்கம்பாடி தாலுக்கா கருவிழந்தநாதபுரம் பகுதி அருகே சங்கிருப்பு, நடராஜர் பிள்ளை சாவடி, கருவிழந்தநாதபுரம், கிடாரங்கொண்டான் ஆகிய கிராமங்களை சேர்ந்த ஊராட்சிகளளில் வயல்வெளிகளுக்கு செல்லும் பாதை சங்கிருப்பு கிராமத்தில் அமைந்துள்ளது. 


நான்கு வழிச்சாலை பணியால் துண்டிக்கப்பட்ட விளைநிலங்கள் - போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

விளைநிலங்களுக்கான பாதை துண்டிப்பு

இந்தப் பாதையை அடைத்து நான்கு வழிச்சாலை செல்வதால் விவசாயம் செய்த பொருட்களை வெளியே எடுத்து வருவதற்கும், விவசாயம் செய்வதற்கு டிராக்டர் உள்ளிட்ட கருவிகளை கொண்டு செல்வதற்கும் பாதை இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாம் பாதிக்கப்படுவதோடு, சுமார் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 2000 -க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


நான்கு வழிச்சாலை பணியால் துண்டிக்கப்பட்ட விளைநிலங்கள் - போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

விவசாயிகள் போராட்டம் 

மேலும் விவசாய நிலங்களுக்கு செல்ல ஏதுவாக சுரங்க வழி பாதை மற்றும் நான்கு வழிச்சாலையின் நடுவே திறப்பு ஒன்றை அமைத்து தரும்படி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து இணைப்பு சாலை அமைத்து தந்துவிட்டு சாலைப் பணிகளை செய்வதாக தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்தது. ஆனால், இணைப்பு சாலை அமைக்கப்படாமல் பணிகளை தொடர்ந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், நான்கு வழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் சுரங்கப்பாதை மற்றும் சென்டர் மீடியம் வழி செய்து தரக்கூறி விவசாயிகள் நாகப்பட்டினம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கருவிழந்தநாதபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  


நான்கு வழிச்சாலை பணியால் துண்டிக்கப்பட்ட விளைநிலங்கள் - போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

அதிகாரிகள் பேச்சுவார்த்தை 

இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தினர். அதனை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டார்.

Anitha Sampath: திட்டமில்லாமலா இப்படி செய்திருப்பார்கள்? ஆம்ஸ்ட்ராங் கொலையில் கேள்வி எழுப்பும் அனிதா சம்பத்


நான்கு வழிச்சாலை பணியால் துண்டிக்கப்பட்ட விளைநிலங்கள் - போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

விவசாய நிலங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதால், நேரம் மற்றும் பொருள் விரயம் ஏற்படும் என்றும், இதனால் விவசாயிகள் ஏற்கனவே பல சிரமங்களுக்கு நடுவில் விவசாயம் செய்து வரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வால் விவசாயத்தை தொடர முடியாமல் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கும், ஆகையால் உடனடியாக இணைப்பு சாலைகள் அமைத்து தந்து விட்டு சாலைப்பணிகளை தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்று இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதியளித்ததை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
புயல் எச்சரிக்கை ; தமிழகத்தில் கனமழை !! அடுத்த 7 நாட்கள் மழை எப்படி இருக்கும்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Embed widget