மேலும் அறிய

மீண்டும் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு - எவ்விதமான நடவடிக்கையும் இல்லை என குமுறல்....!

விபத்தில் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநருக்கு லாரி உரிமையாளர் உட்பட யாரும் சிகிச்சைக்கு உதவவில்லை என கூறி உடலில் கட்டுகளுடன் தொடர்ந்து ஆறு வார காலமாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருகிறார்.

ஒடிசாவில் விபத்தில் படுகாயம் அடைந்த மயிலாடுதுறையை சேர்ந்த லாரி ஓட்டுநர், லாரி உரிமையாளர் உட்பட யாரும் கண்டுகொள்ளாததால் மருத்துவ சிகிச்சையை தொடர முடியாமல் தவித்து வருவதாக தலை மற்றும் கைகளில் கட்டு போட்டதுடன் தொடர்ந்து ஆறாவது வாரமாக ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து வருகிறார்.

செருதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் ரமேஷ்

மயிலாடுதுறை மாவட்டம்  செருதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரெங்கையன் என்பவரது மகன் ரமேஷ். ஓட்டுனராக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணம் ஆகி, நான்கு  குழந்தைகள் உள்ளனர்‌. இவர்  நாமக்கல்லை சேர்ந்த தனியார் லாரி உரிமையாளர் மோகனரங்கம் என்பவரிடம் லாரி ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். 


மீண்டும் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு - எவ்விதமான நடவடிக்கையும் இல்லை என குமுறல்....!

விபத்துக்குள்ளான பயோ டீசல் லாரி

இந்த நிலையில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு பயோ டீசல் ஏற்றிக்கொண்டு ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ளார் . அங்கு ஐஓசி நிறுவனத்தில் பயோ டீசலை கொடுக்கச் சென்ற நிலையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரை அடுத்த பத்ராக் பகுதியில் லாரியின் டயர் வெடித்து அதனால் வாகனம் நிலை தடுமாறி முன்னாள் சென்ற மற்றொரு லாரி மீது மோதிய விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் லாரியை ஓட்டிச் சென்ற ரமேஷ் கை மற்றும் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்துள்ளனர். 


மீண்டும் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு - எவ்விதமான நடவடிக்கையும் இல்லை என குமுறல்....!

வழக்கு பதியாமல் மீட்கப்பட்ட விபத்துக்குள்ளான லாரி

இந்த விபத்து குறித்து அறிந்து அங்கு வந்த லாரி உரிமையாளர் மோகனரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்கு பதியாமலும், விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த லாரி ஓட்டுநர் ரமேஷையும் பார்க்காமல் லாரியை மீட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் காப்பீடு தொகையும் கிடைக்கவில்லை. பின்னர் உறவினர்கள் ஒடிசா மாநிலத்திற்கு சென்று விபத்துக்குள்ளான ரமேஷை மீட்டு மயிலாடுதுறைக்கு அழைத்து வந்துள்ளனர். 


மீண்டும் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு - எவ்விதமான நடவடிக்கையும் இல்லை என குமுறல்....!

சிகிச்சையை  தொடர்வதில் சிக்கல் 

தொடர்ந்து மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வரும் ரமேஷ், தற்போது வரை லட்சக் கணக்கில் பணம் செலவு செய்துள்ளதாகவும், இதனால் தற்போது வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக கூறி மருத்துவமனையில் இருந்து கை,  கால் மற்றும் தலையில் கட்டுகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  குழந்தைகள் மற்றும் மனைவியுடன் வருகை தந்து மனு அளித்தார். மேலும் லாரி உரிமையாளரிடம் நிதியுதவி பெற்று தர வேண்டும் எனவும், மேற்கொண்டு சிகிச்சையை தொடர மாவட்ட நிர்வாகம் ஏதேனும் வழிவகை செய்ய வேண்டும் எனவும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மருத்துவமனையில் இருந்து காயங்களுடன் வாழ்வாதார காக்க கோரி விபத்தில் பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்துடன் மனு அளித்த சம்பவம் காண்போரை கண் கலங்க செய்தது. 


மீண்டும் மீண்டும் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு - எவ்விதமான நடவடிக்கையும் இல்லை என குமுறல்....!

மீண்டும் ஆறாவது வாரமாக மனு

இந்நிலையில் மீண்டும் மீண்டும் வாரம் வாரம் அவர் தொடர்ந்து மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாகவும் 6 வது வாரமாக மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளிப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். வேலைக்கு செல்ல முடியாமல் நான்கு குழந்தைகள் மனைவியுடன் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றேன். இதுவரை 2 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். தற்போது 3 வது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால் பணம் இன்றி தவித்து வருகிறேன். ஆகையால் எனது நிலையை உணர்ந்து லாரி உரிமையாளரிடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
Embed widget