மேலும் அறிய

கலெக்டர் ஆபீஸ் -க்கே இந்த நிலைமைனா..அப்போ மாவட்டத்தின் மற்ற பகுதியின் நிலை..?

கொடுமை.. கொடுமை.. என கோவிலுக்கு போனால் அங்க ஒரு கொடுமை திங்கு திங்கு ஆடியதாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பொதுமக்கள் புலம்பி செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: வங்கக் கடலில் ஏற்பட்ட டிட்வா புயல் சின்னம் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. கனமழை பெய்து 10 நாட்களுக்கு மேலாகியும், மாவட்டத்தின் மிக முக்கியமான நிர்வாக மையமான மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பது, அப்பகுதி முழுவதும் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாராத காரணத்தால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர். 

நிர்வாக மையத்தைச் சுற்றிய அவலம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள பகுதி, அரசின் அனைத்து முக்கிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் மையப் பகுதியாகும். ஆனால், கடந்த மாதம் பெய்த மழையால் தேங்கிய நீர், ஆட்சியர் அலுவலக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பத்து நாட்களாகியும் வடியவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் மிக முக்கிய மையத்திலேயே மழைநீர் தேங்கி நிற்பது, மாவட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகளின் நிலை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்குவதுடன், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.

கட்டுமானப் பணிகள் பாதிப்பு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூங்கில் தோட்டம் கிராமத்தில், புதிதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP Office) அலுவலகத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வளாகத்தைச் சுற்றியுள்ள மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால், இந்தக் கட்டுமானப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தண்ணீர் தேங்கியுள்ளதால், அஸ்திவாரம் மற்றும் தரைதளப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மழைநீர் தேக்கம் காரணமாகக் கட்டுமானப் பொருட்களும் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இது, அரசின் முக்கியமான உள்கட்டமைப்புத் திட்டங்களை உரிய காலத்தில் முடிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.

வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புறக்கணிப்பு

மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுவது, அருகிலுள்ள வடிகால் வாய்க்கால்களைத் தூர்வாராததுதான்.

மூங்கில் தோட்டம் கிராமத்தில் உள்ள மன்னன்பந்தல் வாய்க்கால், மூங்கில் தோட்டம் வாய்க்கால், குளிர்ச்சார் வாய்க்கால்கள் ஆகிய முக்கிய வடிகால் வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாத காரணத்தால், மழைநீர் செல்ல வழியின்றித் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களும், தாழ்வான குடியிருப்புகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பத்து நாட்களுக்குப் பின் அவசர நடவடிக்கை

மழைநீர் தேக்கம் குறித்துப் பொதுமக்களிடம் இருந்தும், சமூக ஆர்வலர்களிடம் இருந்தும் தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பத்து நாட்களுக்குப் பிறகு நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

தற்காலிகமாக மழைநீரை வெளியேற்றுவதற்காக, அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்லும் வகையில் தற்காலிக வாய்க்கால் ஒன்றை வெட்டி நீரை வடிய வைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

சமூக ஆர்வலர்களின் கண்டனம்

பத்து நாட்களுக்குப் பிறகும், அதுவும் மிக முக்கியமான ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் மழைநீர் வடியாமல் தேங்கி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுமானப் பணிகளைப் பாதிக்கும் அளவுக்குச் சென்ற பின்னரே தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "மாவட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் எவ்வளவு விரைவாகவும், முன்யோசனையுடனும் நடைபெற்றுள்ளது என்பதற்கு இந்தச் சம்பவமே சான்று. மாவட்டத்தின் தலைமை நிர்வாக அலுவலகத்தைச் சுற்றியுள்ள வடிகால்களைக்கூட முன்கூட்டியே தூர்வாரித் தயாராக வைத்திருக்கவில்லை என்றால், தொலைதூரக் கிராமங்களின் நிலை என்னவாக இருக்கும்? இனி வரும் காலங்களில் பெய்யும் மழையைச் சமாளிக்க, நிரந்தரத் தீர்வுகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளனர்.

மாவட்ட நிர்வாகம் இனியாவது விழித்துக்கொண்டு, மாவட்டம் முழுவதும் உள்ள வடிகால் வாய்க்கால்களை முழுமையாகத் தூர்வாரி, எதிர்காலத்தில் இதுபோன்ற சுகாதார மற்றும் கட்டுமான இடர்பாடுகள் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?
தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TN MRB: சுகாதாரத் துறையில் 300 பணியிடங்கள்; ரூ.2.05 லட்சம் ஊதியம்- விண்ணப்பிக்க அழைப்பு!
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
TVK Vijay: ஓபிஎஸ், தினகரன் பச்சைக் கொடி? குஷியில் விஜய்.. தென்மாவட்டத்தில் பலமாகிறதா தவெக?
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
நான் முதல்வன் திட்டம்: முதல் முயற்சியிலேயே வங்கி அதிகாரியான நெசவாளர் மகள்- குவியும் பாராட்டுகள்!
Idiyappam: இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
இனி சைக்கிளில் ஈசியா இடியாப்பம் விற்க முடியாது.! செக் வைத்த உணவுப்பாதுகாப்பு துறை- என்ன செய்யனும் தெரியுமா.?
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
25 ஆயிரம்+ பணியிடங்கள்; SSC GD தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி- முழு விவரம்!
25 ஆயிரம்+ பணியிடங்கள்; SSC GD தேர்வுக்கு விண்ணப்பிக்க டிச.31 கடைசி- முழு விவரம்!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
அப்படிப்போடு.. தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்கு கார், தாய்லாந்த் ட்ரிப், தங்கம் பரிசு!
Embed widget