மேலும் அறிய

ஆட்சியர் பூரண குணமடைய வேண்டி மயிலாடுதுறை மக்கள் பிரார்த்தனை...!

உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூரண குணமடைய வேண்டி சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் 108 சிதர் தேங்காய் உடைத்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.

உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூரண குணமடைய வேண்டி சீர்காழி ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் 108 தேங்காய் உடைத்து பொதுமக்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர். 

பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் 

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் 38 வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட எல்லைகளாக வரைமுறை செய்ய லலிதா ஐஏஎஸ் அவர்களை தமிழ்நாடு அரசு நியமித்தது. தொடர்ந்து மாவட்டத்தின் முதல் ஆட்சியராக அவரே செயல்பட்டார்.


ஆட்சியர் பூரண குணமடைய வேண்டி மயிலாடுதுறை மக்கள் பிரார்த்தனை...!

இரண்டாவது ஆட்சியராக பொறுபேற்ற மகாபாரதி 

இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்று அதனை தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு  முன்பு தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் அரசு பணிமாறுதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக இருந்த லலிதா ஐஏஎஸ் மாற்றப்பட்டு, மாவட்டத்தின் 2 -வது மாவட்ட ஆட்சியராக திருவள்ளூரில் துணை ஆட்சியராக பொறுப்பு வகித்த மகாபாரதி பொறுப்பேற்றுக் கொண்டார். அன்று பொறுப்பேற்கும் முன்பு பொறுப்பேற்ற முதல் நாள் அன்று மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் ஆய்வு செய்தார். அடுத்த நாளே மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை பேருந்து நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடாக காணப்பட்டதை உடனடியாக சரி செய்யவும், நகராட்சி இலவச கழிப்பிடத்தை தூய்மையாக பராமரிக்கவும் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு புறப்பட்டுச் சென்றார். 


ஆட்சியர் பூரண குணமடைய வேண்டி மயிலாடுதுறை மக்கள் பிரார்த்தனை...!

சிறப்பான பணி

இந்நிலையில், உத்தரவு பிறப்பித்ததுடன் அதனை மறந்து விடாமல், மறுநாள் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு செய்த அதே இடத்தில் நகராட்சி துறையினர் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டுள்ளனரா என்று நேரில் சென்று மீண்டும் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டு நகராட்சி அதிகாரிகள் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டிருந்ததும், நகராட்சி கழிப்பறை தூய்மை செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்ததை அடுத்து இதுபோல் திறம்பட பணிகளை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தான் சொன்ன பணிகளை செய்து முடித்துள்ளனரா என்று மீண்டும் அதே பகுதிக்கு வந்து ஆய்வு செய்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியின் செயல் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது. மாவட்ட ஆட்சியர் மீண்டும் மறு ஆய்வு செய்வார் என தெரியாத நிலையிலும், அப்பணிகளை உடனடியாக சரிவர நிறைவேற்றி இருந்ததால் நகராட்சி அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனால் மாவட்ட மக்களிடம் ஆட்சியர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து. 


ஆட்சியர் பூரண குணமடைய வேண்டி மயிலாடுதுறை மக்கள் பிரார்த்தனை...!

மக்களின் ஆட்சியர் 

மக்களின் அந்த எதிர்ப்பிக்கு சற்றும் குறைவின்றி மாவட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு இரவு பகல் பாராமல் தனது பணியினை திறம்பட செய்தார். அதன் பலனாக மாவட்ட மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்த ஆட்சியர் மகாபாரதி, மக்கள் ஆட்சியர் என அழைக்கப்பட்டார். விவசாயிகள், மீனவர்கள், என அனைத்து தரப்பு மக்களின் தேவைகளை இன்முகத்துடன் அனுகி அவர்களின் குறைகளை தீர்த்து வந்தார் ஆட்சியர் மகாபாரதி.


ஆட்சியர் பூரண குணமடைய வேண்டி மயிலாடுதுறை மக்கள் பிரார்த்தனை...!

உடல்நலம் பாதிப்பு 

இந்நிலையில் கடந்த 27 -ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு மதியம் முகாமிற்கு சென்றுள்ளார். தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அவருக்கு இருதயத்துக்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்புகள் இருப்பதால் ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஆட்சியர் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.


ஆட்சியர் பூரண குணமடைய வேண்டி மயிலாடுதுறை மக்கள் பிரார்த்தனை...!

பிராத்தனையில் பொதுமக்கள் 

இரவு பகல் பாராது ஓய்வின்றி மாவட்ட வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்கும் பாடுபடும் ஆட்சியர் நலமுடன் திரும்ப அரசு ஊழியர்களும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  இதனிடையே மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பூரண குணமடைய வேண்டி சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயில் தெற்கு கோபுரம் அருகில் அமைந்துள்ள ஆபத்து காத்த விநாயகர் கோயிலில் பக்தர்கள் ஆட்சியர் மகாபாரதி பெயர் நட்சத்திரத்திற்கு சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து 108 சிதறு தேங்காய் உடைத்து வழிபாடு மேற்கொண்டனர். இதில் சீர்காழி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கூட்டு பிராத்தனை செய்து  வழிப்பட்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget