மேலும் அறிய

காந்தியின் பாராட்டைப் பெற்ற வீரருக்கு மயிலாடுதுறையில் ரூ.45 லட்சத்தில் பிரமாண்ட வெண்கலச் சிலை..!

காந்தியின் பாராட்டைப் பெற்ற இனவெறிக்கு எதிராகப் போராடிய மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த தியாகி சாமி நாகப்பனுக்கு மயிலாடுதுறையில் ரூ.45 லட்சத்தில் பிரமாண்ட வெண்கலச் சிலை அமைக்கப்பட்ட உள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நகராட்சி பகுதியில், தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தியுடன் இணைந்து அறப்போராட்டம் நடத்தி இன்னுயிர் நீத்த தியாகி சாமி நாகப்பனின் நினைவைப் போற்றும் வகையில், ரூ.44.40 லட்சம் மதிப்பீட்டில் வெண்கலத் திருவுருவச்சிலை அமைப்பதற்கான பணிகளை தமிழக அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் வாக்குறுதி நிறைவேற்றம்

கடந்த 16.07.2025 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், "மகாத்மா காந்தியடிகளுடன் தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று, தனது இளவயதிலேயே உயிர்த்தியாகம் செய்த இம்மண்ணின் மைந்தர் தியாகி சாமி நாகப்பனுக்கு மயிலாடுதுறையில் அரசு சார்பில் திருவுருவச்சிலை அமைக்கப்படும்" என உறுதியளித்திருந்தார். அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, இந்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

பிரம்மாண்ட வெண்கலச்சிலை

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற நலவாழ்வு மைய வளாகத்தில் இந்தச் சிலை அமையவுள்ளது. சுமார் 1,366 சதுர அடி பரப்பளவு கொண்ட இடத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.44.40 லட்சம் மதிப்பீட்டில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

அங்கு அமைக்கப்படவுள்ள சிலையின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு.

* சிலை உயரம்: 7 அடி உயர முழு உருவ வெண்கலச்சிலை.

* கட்டமைப்பு: சிலையினைத் தாங்கும் பீடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளாகம் நவீன முறையில் வடிவமைக்கப்படவுள்ளது.

* துறை: செய்தி மக்கள் தொடர்புத் துறை மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து இப்பணிகளை ஒருங்கிணைக்கின்றன.

அமைச்சர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பு

இந்த அடிக்கல் நாட்டு விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பணிகளை முறைப்படி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்த முக்கியப் பிரமுகர்கள்

* ஆர். சுதா: மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர்.

* நிவேதா எம். முருகன்: பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்.

* எம். பன்னீர்செல்வம்: சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்.

* எஸ். ராஜகுமார்: மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்.

உயிர்த்தியாகம் செய்த தியாகி சாமி நாகப்பன்

விழாவில் உரையாற்றிய அமைச்சர் மெய்யநாதன், தியாகி சாமி நாகப்பனின் வீர வரலாற்றை நினைவு கூர்ந்தார். "இந்தியாவின் விடுதலைக்காகத் தாயகம் திரும்புவதற்கு முன்பே, தென்னாப்பிரிக்க மண்ணில் காந்தியடிகளுடன் இணைந்து இனவெறிக்கு எதிராகப் போராடியவர் சாமி நாகப்பன் 1909-ஆம் ஆண்டு சிறையில் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து, வெளியே வந்த சில நாட்களிலேயே தனது 18-வது வயதில் அவர் உயிர் துறந்தார். காந்தியடிகளே வியந்து போற்றிய இத்தகைய தியாகியின் நினைவைப் போற்றுவது நமது கடமையாகும்," என்று குறிப்பிட்டார்.

துறைசார் அதிகாரிகள் பங்கேற்பு

இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பூங்கொடி, மயிலாடுதுறை நகர்மன்றத் தலைவர் எம். செல்வராஜ், நகர்மன்றத் துணைத் தலைவர் சிவக்குமார், மற்றும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கவிதா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் பணிகளை விரைந்து முடிப்பதற்கான ஏற்பாடுகளை உறுதி செய்தனர்.

"மயிலாடுதுறை மண்ணிற்குப் பெருமை சேர்த்த தியாகி ஒருவருக்கு அரசு சார்பில் எடுக்கப்படும் இந்த முயற்சி, எதிர்கால சந்ததியினருக்குச் சுதந்திரப் போராட்டத்தின் மதிப்பினை உணர்த்தும்" எனப் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
மயிலாடுதுறையில் ஒரே ஆண்டில் 20 பேருக்கு நேர்ந்த கதி! கலெக்டர் மற்றும் எஸ்பி கூட்டாக அதிரடி நடவடிக்கை..! 
கோடியக்கரை சரணாலயத்திற்கு வரப்போகும் புதிய மாற்றங்கள்: நாகை ஆட்சியரின் ‘ஸ்பாட் விசிட்’ பின்னணி!
கோடியக்கரை சரணாலயத்திற்கு வரப்போகும் புதிய மாற்றங்கள்: நாகை ஆட்சியரின் ‘ஸ்பாட் விசிட்’ பின்னணி!
வலைக்குள் சிக்கிய விசித்திர உருவம்... கடல் நீரை ஊற்றிப் பார்த்த மீனவர்களுக்குக் காத்திருந்த மெய்சிலிர்க்கும் காட்சி!
வலைக்குள் சிக்கிய விசித்திர உருவம்... கடல் நீரை ஊற்றிப் பார்த்த மீனவர்களுக்குக் காத்திருந்த மெய்சிலிர்க்கும் காட்சி!

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
Bangkok Bar: நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
CM Vijay: தவெக ஒருநாள் காணாமல் போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!
CM Vijay: தவெக ஒருநாள் காணாமல் போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!
Rasi Palan Today (13-07-2026): கன்னிக்கு கவனம்.. விருச்சிகத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (13-07-2026): கன்னிக்கு கவனம்.. விருச்சிகத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget