மேலும் அறிய

அப்துல் கலாமின் நினைவு தினம் - அழிந்து வரும் அரியவகை மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கிய தொண்டு நிறுவனம்

மயிலாடுதுறை அருகே அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அழிந்து வரும் மரங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மயிலாடுதுறை அருகே அரசு பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு அழிந்து வரும் பழவகை மூலிகை மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில் ஐந்து வகையான அரிய மரக்கன்றுகளை சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மாணவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

யார் இந்த ஏபிஜே அப்துல் கலாம்? 

தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியான  இராமேஸ்வரத்தில் 1931-ம் ஆண்டு அக்டோபர் 15 -ம் தேதி ஜைனுலாபுதீன் - ஆஷியம்மா தம்பதியினருக்கு 5-வது மகனாகப் பிறந்தவர் இந்த அப்துல் கலாம். ஆவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் என்பதன் சுருக்கமே ஏபிஜே  ஆகும். மீனவ தொழில் புரிந்த குடும்பத்தில் பிறந்த அப்துல் கலாம், சிறுவயதில் வறுமையில் வளர்ந்தவர், சிவசுப்ரமணியம் என்ற ஆசிரியரின் உதவியோடு மேல்நிலை கல்வியினை தொடர்ந்தார்.  1955-ல் சென்னை எம்.ஜ.ரி கல்லூரியில் சேர்ந்து விண்வெளி பொறியியல் படிப்பு படித்து முடித்தார். இவருக்கு விமானியாக வேண்டும் என்ற பெருங்கனவு இருந்தது, அதற்காக நடத்தப்பட்ட தேர்வில் இவர் 9-வது இடத்தையும் பிடித்தார். ஆனால் அப்துல் கலாமுக்கு விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு 1960-ல் மத்திய அரசின் பாதுகாப்பு மற்றும் வானூர்தி அபிவிருத்தி அமைப்பில் விஞ்ஞானியாக தனது ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார்.


அப்துல் கலாமின் நினைவு தினம் - அழிந்து வரும் அரியவகை மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கிய தொண்டு நிறுவனம்

பின்னர் இஸ்ரோவில் இணைந்து செயல்பட துவங்கினார். செயற்கை கோளான எஸ்.எஸ்.வி 3 ஏவுவதில் முக்கிய பங்காற்றினார். இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூசன் விருதை அப்துல் கலாமுக்கு 1981-ம் ஆண்டு வழங்கப்பட்டது. 1963 தொடக்கம் முதல் 1983 வரை இஸ்ரோவில் சிறப்பாகப் பணியாற்றினார். அதன் பின்னர் 1999 -ல் பொக்ரான் அணு ஆயுத சோதனையில் பங்களித்த அவர், அக்னி பிரித்வி ஆகாஷ் எனப்படும் ஏவுகணை திட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.  2002-ம் ஆண்டு குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவின் 11-வது குடியரசு தலைவர் ஆனார். 2007ஆம் ஆண்டு அவரது பதவிக் காலம் முடிந்தது மீண்டும் இந்திய நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயன்றார். எனினும் பல்வேறு காரணங்களால் அந்த போட்டியில் இருந்து விலகினார். ஏவுகணை நாயகன், கனவு நாயகன் என்று அனைவராலும் அழைக்கப்படும் அப்துல் கலாம் உலகெங்கிலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்கங்களால் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர் ஆவர்.


அப்துல் கலாமின் நினைவு தினம் - அழிந்து வரும் அரியவகை மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கிய தொண்டு நிறுவனம்

சரிந்த அப்துல் கலாம்

இறுதியாக மேகாலயாவின் ஷில்லாங்கில் 2015 -ம் ஆண்டு, ஜூலை 27 -ம் தேதி ஐஐஎம் மேடையில் பேச சென்றபோது அப்துல் கலாம் சரிந்தார். அதன்பின், மருத்துவமனையில் இரவு 7:45 மணிக்கு அவரது உயிர் மாரடைப்பால் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல் ராமேஸ்வரத்தில் உள்ள பேய்க்கரும்பில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பல முக்கியத்தலைவர்கள் கலந்துகொண்டனர்.

ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாள்  அனுசரிப்பு

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மறைந்த எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே சேத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்று அப்துல் கலாமின் திரு உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜோதி பவுண்டேசன் சார்பில் அழிந்து வரும் அரியவகை மரம் மற்றும்  செடிகளை பாதுகாக்கும் வகையில் அரிய வகை செடிகள் மற்றும் பழவகை கொண்ட மரங்களான கொடுக்காப்பள்ளி, பொன்னை மரம், நிலவேம்பு உள்ளிட்ட ஐந்து வகை மரங்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் கொடுக்கப்பட்டது.


அப்துல் கலாமின் நினைவு தினம் - அழிந்து வரும் அரியவகை மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கிய தொண்டு நிறுவனம்

மேலும் பள்ளி வளாகத்தில் மாணவர்களைக் கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது. பின்னர் அப்துல் கலாமின் நினைவை போற்றும் வகையில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக பேசிய மாணவ மற்றும் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பேனா பென்சில், சில்வர் வாட்டர் கேன் மற்றும் நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வீட்டைப் பெறும்போதுதான் சுயமரியாதை உயர்கிறது" எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
"நம்பர் 1 பயங்கரவாதி" ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவுDMK VS PMK | ’’உனக்கு யாரு அதிகாரம் கொடுத்தா?’’கடுப்பாகி கத்திய பாமக MLA! திமுக vs பாமகManimegalai Priyanka Fight | மூக்கை நுழைத்த பிரியங்கா? GOOD BYE சொன்ன மணிமேகலை” நீ அவ்ளோ பெரிய ஆளா”Cuddalore News | ”டேய் பஸ்ஸ நிறுத்துடா”போதை ஆசாமி ரகளைசாலையில் அடித்த லூட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வீட்டைப் பெறும்போதுதான் சுயமரியாதை உயர்கிறது" எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
சினிமாவில் மட்டும் இல்ல.. அரசியலிலும் அண்ணாதான்.. ஒரே ட்வீட்டில் கொள்கையை சொன்ன விஜய்!
"நம்பர் 1 பயங்கரவாதி" ராகுல் காந்தி குறித்து மத்திய அமைச்சர் சர்ச்சை கருத்து!
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Arvind Kejriwal: 48 மணி நேரம், டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன் - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Dhanush : ரெட் கார்ட் நீங்கியதும் சைலண்டாக அடுத்த படப்பிடிப்பை தொடங்கிய தனுஷ்...
Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?
Thalapathy Vijay: ஷாருக்கானை ஓரம் கட்டிய தளபதி விஜய் - இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் - எவ்வளவு தெரியுமா?
Job Fair: அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: எங்கே? எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
Job Fair: அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்: எங்கே? எப்போது? யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்
Vidamuyarchi : விடாமுயற்சி வேண்டாம்...குட் பேட் அக்லி போதும்... பொறுமை இழந்த அஜித் ரசிகர்கள்
Embed widget